Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...
இன்றைய பதிவில் நாம் படிக்கப் போகும்வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி சொன்னால் பாட்டுக்குப் பாரதியார் பேச்சுக்கு சிதம்பரம் பிள்ளை என்பார்கள் !தென்னாட்டுத் திலகர் என்றும் 'வ. உ. சி' என்று அழைக்கப்பட்டார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார்.அவருக்கு, புரட்சி மனப்பான்மையும்,ஆங்கிலேயருக்கு எதிராக இவரது துணிச்சலான தன்மையே இவருக்கு 'கப்பலோட்டிய தமிழன்' என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், 'தமிழ் ஹெல்ம்ஸ்மேன்' என்று கூறுகின்றனர். 'கப்பலோட்டிய தமிழன்' என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக இவரின் பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் 5.9.1872ல் பிறந்தார்.இவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள்ஒருவர். வ.உ.சிதம்பரனார்திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, சட்டப்பள்ளியில்சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்துசட்டத்தொழிலில், மிகச் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தார்இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரவிந்த்கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.இதேபோல் , வ.உ.சிஇந்தியா சுதந்திரம் பெறுவதற்காக இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின்ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட இவர், நவம்பர் 12, 1906ல், 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை' நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான "எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்", சக சுதேசி உறுப்பினர்களான அரவிந்த் கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. இவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி', பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தைல மேலும் குறைத்தார்.கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றதுஇதன்பின் திருநெல்வேலியிலுள்ள 'கோரல் மில்ஸ்' தொழிலாளர்களின்ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்குஎதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று இவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். இவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்இவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.வ.உ.சி.சிறையில் இருந்த அந்நாட்களில், கடின உழைப்பில் ஈடுபட்டார். இதனால்இவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் இவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால்,டிசம்பர் 12, 1912 அன்று இவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, இவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், இவர் விடுதலை செய்யப்பட்டார்.அதேவேளை 'பாரிஸ்டர் பட்டம்' இவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், இவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் இலக்கியத்திலும்இவர் ஒரு சிறந்தவர் புதுவையில் அரவிந்தரை இவர் சந்தித்தப் போது 27-மொழிகளில் பத்திரிகை நடத்தி சுதந்திர கிளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என சொன்னார் எனினும் அது நிறைவேறவில்லை வ.உ.சி. சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கி 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அதேவேளை ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், இவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார் .செல்வ சீமானாய்வாழ்ந்தவர்தான் தனது இறுதி காலத்தில் நோய்க்கு மருந்து பெறக் கூட காசின்றி 1936-நவம்பர் -18 அன்று இறந்து போனார்.சுதந்திரத்திற்கு பின்னர், இவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் 'வ.உ.சி போர்ட்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.செப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை இவரின் பெயரில் வெளியிட்டது கோயம்புத்தூரிலுள்ள 'வ.உ.சி பூங்கா' மற்றும் 'வ.உ.சி மைதானம்' மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.அதேவேளை கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக இன்று கோவை சிறை வளாகத்தில் உள்ளே ஒரு 'நினைவுச்சின்னம்' இவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு 'வ.உ.சி பாலம்' என பெயரிடப்பட்டதுநாளையப் பதிவில் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியதுவந்தேமாதரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக