Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...
அவரை உயிரோடு காட்டிக் கொடுத்தாலோ ;
பிணமாக ஒப்படைத்தாலோ ரூபாய் 15,000 பரிசு வழங்கப்படும் "என பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் .1922-ம் ஆண்டு இது நடந்தது .
அன்று அவ்வளவு தொகை தர பிரிட்டிஷ் அரசு தயாரானது என்றால் எவ்வளவு தூரம் இவரைக் கண்டு பயந்திருக்கும் ஆங்கிலேய அரசு என்பதை நாம் யூகிக்கலாம் .ஆம் அவர்தான் இன்றையப் பதிவுன் நாயகன்.
சீத்தாராமராஜூ அவர்கள் .
ஆந்திர மாநிலம் ரம்பா வட்டாரத்தில் 1922-ல் இவரின் கிளர்ச்சி போராட்டம் ஆங்கிலேய அரசை அதிரவைத்தது .
இந்த கிளர்ச்சி போராட்டத்தில் இவரோடு பெருமளவு பங்கேற்றவர்கள் அவ்வட்டாரத்தின் மக்கள் ஆவர் .அவர்களுக்கு தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தியவர் தான் சீத்தாராம் ராஜூ இவர் நேர்மையான மனிதர் துறவிப் போன்று வாழ்ந்தவர் .அவ்வட்டாரத்தில் விவசாய மக்களில் சுமார் 300-இளைஞர்களை ரகசியமாக திரட்டிப் போர் பயிற்சி அளித்தார் .எனவே இவரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலை வைத்தது .எவரும் இவரைக் காட்டிக் கொடுக்க வில்லை .மக்கள் இவர் பக்கம் இருந்தனர் .
1922-செப்டம்பர் 23-ம் நாள் குஸ்ரிகாட் ராணுவ முகாம் மீது சீத்தாராம் தொண்டர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டனர் போக்குவரத்து'தந்தி 'என அனைத்து முழுமையாக தடைபட்டது .மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி இன்னொரு தாக்குதலை தொடுத்து கடோசி காவல் நிலையத்தை கைப்பற்றினர் இவர் .
அல்லூரி சீத்தாராம் ராஜூ ஆந்திர மாநிலத்தின் விடுதலைப் போராட்ட நாயக்கரானார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக