நண்பர்கள்

4 செப்., 2015

சீத்தாராமராஜூ

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


அவரை உயிரோடு காட்டிக் கொடுத்தாலோ ;
பிணமாக ஒப்படைத்தாலோ ரூபாய் 15,000 பரிசு வழங்கப்படும் "என பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் .1922-ம் ஆண்டு இது நடந்தது .
அன்று அவ்வளவு தொகை தர பிரிட்டிஷ் அரசு தயாரானது என்றால் எவ்வளவு தூரம் இவரைக் கண்டு பயந்திருக்கும் ஆங்கிலேய அரசு என்பதை நாம் யூகிக்கலாம் .ஆம் அவர்தான் இன்றையப் பதிவுன் நாயகன்.
சீத்தாராமராஜூ அவர்கள் .
ஆந்திர மாநிலம் ரம்பா வட்டாரத்தில் 1922-ல் இவரின் கிளர்ச்சி போராட்டம் ஆங்கிலேய அரசை அதிரவைத்தது .
இந்த கிளர்ச்சி போராட்டத்தில் இவரோடு பெருமளவு பங்கேற்றவர்கள் அவ்வட்டாரத்தின் மக்கள் ஆவர் .அவர்களுக்கு தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தியவர் தான் சீத்தாராம் ராஜூ இவர் நேர்மையான மனிதர் துறவிப் போன்று வாழ்ந்தவர் .அவ்வட்டாரத்தில் விவசாய மக்களில் சுமார் 300-இளைஞர்களை ரகசியமாக திரட்டிப் போர் பயிற்சி அளித்தார் .எனவே இவரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலை வைத்தது .எவரும் இவரைக் காட்டிக் கொடுக்க வில்லை .மக்கள் இவர் பக்கம் இருந்தனர் .
1922-செப்டம்பர் 23-ம் நாள் குஸ்ரிகாட் ராணுவ முகாம் மீது சீத்தாராம் தொண்டர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டனர் போக்குவரத்து'தந்தி 'என அனைத்து முழுமையாக தடைபட்டது .மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி இன்னொரு தாக்குதலை தொடுத்து கடோசி காவல் நிலையத்தை கைப்பற்றினர் இவர் .

ஆங்கில அரசு வெட வெடத்துப் போயினர் .பிறகு பீரங்கி படைகள் 'எண்ணற்ற இயந்திர துப்பாக்கி படைகள் எனப் பெரும் படைகளை வரவழைத்து அவ்வட்டாரத்தையே சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார் ஆங்கிலேயர் .ஆயினும் ஆறு மாதங்கள் சீத்தாராமை நெருங்க கூட முடியவில்லை ஆங்கிலேயர் படையால் இறுதியாக 1924-மே 7-ம் தேதி சீத்தாராம் ராஜூவை கைது செய்தனர் .விசாரணை ஏதுமின்றி உடனே சீத்தாராம் ராஜூவை சுட்டுக் கொன்றனர் இவரது சக போராளிகள் பலர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
அல்லூரி சீத்தாராம் ராஜூ ஆந்திர மாநிலத்தின் விடுதலைப் போராட்ட நாயக்கரானார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக