நண்பர்கள்

4 செப்., 2015

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றையப் பதிவிலே நாம் காணபோகும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ""வீறுமிக்க தமிழில் பேச்சால் பாமரர்களுக்கும் சமய 'அரசியல் விழிப்பூட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் . தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை நடத்தியவர் அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் இவர் நமது தர்மத்தை எடுத்துரைத்தவர்.
( சீர்திருத்தவாதிகள் ....சம்மான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாக காணோம் .இஸ்லாம் மதத்தை பற்றி கூறினால் அமததத்தைச் சேர்ந்தவர்கள் கண்ட இடங்களில் கூட்டமாக் கூடி இவர்களை தாக்க வருவார்கள் .
கிருஸ்தவதை பற்றி கூறினால் கிருஸ்தவ அரசு இவர்களை உள்ளே தள்ளி விடுவார்கள் .
இதனால்தான் சீர்திருத்தவாதீகள் அவைகளை விட்டுவிட்டு இந்து மதத்தை ஏகப்பொதுச் சொத்தாக எடுத்துக் கையாண்டு வருகிறார்கள் என 12-6-1949-அன்று தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மாநாட்டில் பேசினார் பசும்பொன் அவர்கள் !
தமது இளவயதிலேயே அரசியல் ஞானியாகவும் 'ஆத்மஞானியாகவும் விளங்கிய இவரைப் பற்றியும் விடுதலை போராட்ட காலத்தில் இவரின் பங்களிப்பையும் சற்றே சுருக்கமாக காண்போம் .( விரிவான வரலாறு வேண்டுவோர் சான்றோர்கள் எழுதிய நூல்களை வாங்கி படிக்கவும்.
முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார்.தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார்.இவரின் இளம் வயதிலேயே மறைந்தார் .இவர் பொதுவாழ்க்கைக்கு தனது 19ஆவது வயதில் 1927 ஆம் வந்தார் ஆண்டில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார்.அங்கு தான் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.ஆம் அப்போது
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு 4 நாளும் உறுதுணையாக தேவர் இருந்தார் இந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், தேவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.முதல் மேடை1933 ஆம் ஆண்டு.சாயல்குடியிலுள்ள விவேகானந்தர் வாசக சாலையில் நடந்த முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் சுமார் 3 மணி நேரத்திற்கு உரையாற்றினார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் சேதுராமன் செட்டியார் அவர்கள் ஆவார்
அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார்.1939-ஆம் ஆண்டு செப்டம்பர் .6 ஆம் தேதி மதுரை நகருக்கு வருகை தந்த நேதாஜியை வரவேற்று அன்று மாலை நடந்த ஊர்வலத்தில் இவர் செய்த சொற்பொழிவை கண்ட ஆங்கில அரசு அச்சம் கொண்டதே இவரின் பேச்சு திறமைக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்குதெய்வத்திருமகன்என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார் தேவர்.
சுதந்திர போராட்ட காலத்தில்
காங்கிரசில் காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியது. திரிபுரா காங்கிரசில் காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார்.நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும்.அப்போது தான் காந்தி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச்சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இந்த தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் சென்றபோது வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். ஆம் விடுதலை போராட்ட காலத்தில் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார் இவர் வாழ்ந்த நாட்கள் 20,075,
அதில் சிறையில் இவர் கழித்த நாட்கள் 4.000 நாட்கள் ஆகும்.
தெய்வீக நம்பிக்கையும் தேசியப்பற்றும் கொண்டு
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக சீடராக விளங்கிய இவர்
1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்30 ஆம் நாள் அவரது 55-வது பிறந்த நாளன்று இயற்க்கை எய்தினார். சுதந்திரப் போராட்டத் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின்தலைமையில்பிரித்தானிய அரசசைஎதிர்த்தஇந்திய தேசிய இராணுவத்திற்குதமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
வந்தேமாதரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக