நண்பர்கள்

4 செப்., 2015

சுப்பிரமணிய சிவா

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


எனது ஜாதி பாரத ஜாதி, எனது மதம் பாரதிய மதம், என் வழிபடு தெய்வம் பாரத மாதா' என்று பாரத மாதாவுக்கு ஆசிரமம் அமைத்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்து நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்து 47-ல் நாம் விடுதலை பெற 41 வயதிலேயே வீரமரணமடைந்தவர் சிவா என்ற சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியுமா?ஒருபுறம் வறுமை, மறுபுறம் தொழு நோய் என்ற இருபுறத் தாக்குதலுக்கு அஞ்சாமல், தேச பக்திக்கனலை மூட்டி அந்த தியாக வேள்வியில் கற்பூரமாகக்கரைந்தவர் தான் சுப்பிரமணிய சிவா அவர்களைப் பற்றி சொன்னால் ஆங்கிலேய
அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்தார் எனலாம் "சிவாவுக்குத் தங்க இடம் தந்து,பொதுக் கூட்டம் நடத்தி உணவு தந்து உபசரித்த பெருங் குற்றத்திற்காக வ.உ.சிக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனைவிதிப்போம்" என்று பின்ஹே என்ற நீதிபதி தீர்ப்பனித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சிவா ஆங்கிலேய அரசிற்கு எவ்வளவு மிரட்டலாக இருந்திருப்பார் இவரின் வாழ்க்கை பதிவுகளைச் சற்று சுருக்கமாக பார்போம் ''சிவம் பேசினால் சவம் எழும் ''
என்று சுதந்திர போராட்ட காலத்தில் எழுச்சிப் பேச்சிற்க்காக உதாரணமாக திகழ்ந்தவரைத்தான் இன்றையப் பதிவிற்கு சொந்தகாரர்.இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் ' இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்க்கு பிறந்தார் இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி படித்தார் பின கோவையில் கல்லூரி மேற்படிப்பு படித்துள்ளார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியுள்ளார் நாட்டு விடுதலைக்குப் பேச்சு, எழுத்து, இதழியல், நாடகம், நடிப்பு என்ற பல துறையிலும் தொண்டு செய்த சுப்பிரமணிய சிவம் அடுத்தடுத்த சிறைவாசம், தன் உடல்நலத்தைக் கவனிக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார் சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர் என்ற செய்தியை புத்தகத்தில் படிக்கின்ற போது கொடியது கொடியது இளமையிலேயே வருமை என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது . இவர் கடந்த பதிவிலே நாம் படித்த வ.உ.சிதம்பரனருடன் 1908 ல் சிறைச் சென்றவர் தமிழகம் முழுவதும்பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடைவிதித்ததுள்ளது என்றால் பாருங்கள் ஆங்கிலேயரின் அற்ப புத்தியை இருப்பினும், கால்நடையாகவும், மாட்டு வண்டியிலும் ஊர், ஊராக பயண ம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டி னார். 22.7.1925-ல் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்ப ர்களுடன் மிக உற்சாகமாக பேசி க்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வய தில் இயற்கை எய்தினார். இதைப்பற்றி பாரதியார் கூறுகையில் .'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் – பின்னர்வேறொன்று கொள் வாரோ?- என பாடினார் .
விடுதலைப் போராட்டத்தில் இவர்களைப் போன்றவர்களின் ரத்தமும் தியாகமும் அடங்கியுள்ளது என்பதே யாராலும் மறுக்கமுடியாத உண்மை !

வந்தேமாதரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக