Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...
இன்று ரக்ஷாபந்தன் என்பதால் அதனுடன் தொடர்புடைய ஒரு மாவீரனைப் பற்றி பதிவு !
இவர் சுதந்திர போராட்ட காலத்தை சார்ந்தவர் அல்ல .அதேபோல் இந்த பதவிக்காக நான் எடுத்துக் கொண்ட ஆதாரங்கள் எதுவும் RSS காரர்களோ 'வேறு இந்திய வரலாற்று ஆசிரியர்களோ அல்ல !முழுவதும் படியுங்கள் .எல்லாம் கிரேக்க ஆசிரியர்கள் கூறியதே !
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னியர்கள் கிரேக்கர்களையும் 'ஆங்கிலேயர்கள் வானளாவப் புகழ்ந்து பேசும் அலெக்ஸாண்டரை பந்தாடிய மாவீரன்
போரஸ் எனும் புருஷோத்தமன் .
கிமு .326-ல் நமது பாரத்தின் செல்வ வளத்தையும் பாரத்தின் புகழையும் தேசியாஸ் என்ற கிரேக்க அறிஞரும் ஸ்கைலாஸ் மற்றும் ஹெரோட்டஸ் என்பவர்கள் மூலமாக பாலும் தேனும் பாய்கின்ற செல்வ வளமிக்க பூமி எனக் கண்டுகொண்ட அலெக்ஸாண்டர் நமது நாட்டின் மீது படையெடுத்தான் அதுவும் நேரடியாக அல்ல !
ஜீலம் நதியின் மேற்குக்கரையில் பிரமாண்டமான யானைகள் படைகள் !
போரஸ் யதுவம்சத்தின் கீரத்தி பெற்ற மன்னர்களில் ஒருவர் புருஷோத்தமன் !
ஆனால் அவருக்கு துரோகி அருகிலேயே இருந்தான் அவன் பெயர் அம்பி ஆம் அவன் தான் அலெக்ஸாண்டருக்கு ஆட்பட்டு அடிமையாக தலைவணங்கியவன் அம்பி .ஆம்
அம்பிக்கு முன்பே போரஸ் மீது பகை அதை அலெக்சாண்டர் படையெடுப்பின் போது பயன்படுத்திக் கொண்டான் .
படையெடுப்பு விவரங்கள் பற்றி விரிவான செய்திகள் பல புத்தகத்தில் வந்துள்ளது !
ஏன் நீங்கள் Gogol லில் போனா கூட எளிதாக படித்துவிடலாம் !இங்கு சுருக்கமாக சில செய்திகள் மட்டுமே தருகிறேன் நான் .
கிரேக்க ஆசிரியர் கிரியாஸ் எழுதியுள்ளார் .
என் எதிரில் காட்சி தரும் இப்படைகளைப் பார்க்கிற போது முதல் முதலாக என் வாழ்வில் ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது .கொடிய யானைகளும் அச்சமற்ற அசாதாரண பலம் படைத்த வீரர்களை என் கண் முன்னே இப்போது தான் பார்க்கிறேன் என்று குரல் தழும்பி கூறினார் என நான் சொல்லவில்லை.
கிரேக்க எழுத்தாளர் கிரியாஸ் சொல்லியிருக்கார் மேலும் ஜீலம் நதிக்கரையில் கண்ட போரஸ் படைவீரர்கள் தான் இதற்கு முன் கண்ட பாரசீகர்கள் 'பாபிலோனியர்கள் போல் இல்லை என விரத்தியில் புலம்பியவன் அலெக்ஸாண்டர் என கூறிப்பிடுகிறார் .
இவராவது பரவாயில்லை இன்னுமொருவர் சொல்கிறார் அவர் பெயர் ஜோசப் பென்குரியன்
Note -loss to the enemy was heavy ; numberless horse were killed .the Greek soldiers wept and howled like dogs and wished to throw down their ar as and forsake Alexander .when Alexander saw this .he drew sigh into their midst and wished to stop the fight -
இப்போரில் கிரேக்கர்கள் அளவிடமுடியாத நஷ்டத்தை அடைந்தனர் .ஆயிரக்கணக்கான வீரர்களும் குதிரைகளும் கிரேக்கர்களுக்கு ஏற்பட்ட இழப்பு .இதனால் கிரேக்க வீரர்கள் துக்கத்தின் வசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதனர் .கதறினர் .நாய்களைப் போல் அழுது ஊளையிட்டனர் .ஆயுதங்களை எல்லாம் எரிந்து விட்டனர் .இதனால் அலெக்ஸாண்டர் பெருமூச்சுவிட்டுக் கொண்டே போரினை நிறுத்திவிடப் போவதாக கூறி அவர்களை சமாதானம் செய்தார் என
இதேபோல் புளூடார்ச் என்ற சரித்திர ஆசிரியர் கூறியது
அலெக்ஸாண்டர் சமாதானத்தை விரும்பினார்.எனவே போரஸ்சின் உறவினன் மோரோஸ் என்பவரை சமாதானம் பேசி போரஸ்சிடம் போர் நிறுத்தம் செய்தார் என
சரி இந்த செய்திகளை ஏன் இன்று சொல்கிறேன் தெரியுமா ?
போரில் போரஸ்சிடம் தன் செல்ல குதிரை பூஸேபாலஸ் யை இழந்து அலெக்சாண்டர் அழுத்தைப் பற்றியே பத்து பதிவு போடலாம் அவ்வளவு இருக்கு .
துரோகி அம்பியிடம் இப்போரில் வெற்றி பெற பல வழிகளை கேட்டான் அலெக்ஸண்டர் அவன் சொல் கேட்டு போரஸ் படையில் உள்ள யானைகளை குறிவைத்து தாக்கினான் யானைகளின் துதிக்கைகளையும் வெட்டினான் .தீப்பந்தங்களைக் கொளுத்தி வீசினான் ஏன் போரஸையே நேருக்கு நேர் சந்திக்க பயந்து மழையில் மறைந்து கிழக்கு கரையில் வந்து முன்னும் பின்னும் இரு முனைகளில் போரை தொடுத்தான் அலெக்சாண்டர் எனினும் வெற்றி பெற வில்லை .ஆம் செல்யூகஸ் நிகேதார் என்ற அலெக்சாண்டரின் தளபதியை அழைத்து சென்று அலெக்சாண்டர் மனைவி ரோக்ஸானா போரஸ்சின் கையில் கையில் கட்டி தன் கணவர் அலெக்சாண்டர் உயிரை காக்க வேண்டி கட்டிய ராக்கியே அலெக்சாண்டர் உயிரை காத்தது .இதற்கு பிறகு கிரேக்கர்கள் தங்கள் படையெடுப்பை இந்தியாவில் தொடரவில்லை என்பதே உண்மை இதை பள்ளிக்கூட பாடத்தில் சொல்லக் கூட இங்கே உள்ள மெக்கலே கல்விமுறையில் துணிவில்லை
போரஸ்சின் வீரம் கண்டு வியந்த அலெக்சாண்டர் அவரையும் நண்பராக்கிக் கொண்டார் பிறகு நாட்டை நண்பர் போரஸ்யிடமே கொடுத்து விட்டு சென்றார் என்கிறார்கள் "அட அறிவுகொட்ட ஆங்கிலேய அடிமைகளா யார்கிட்ட டா கதை விடரீங்க தர்மத்துக்கு கட்டுப்படாதவன் நட்புக்கு கட்டுப்பாடுவானா ?
மிஞ்சினால் கெஞ்சுவதும் .
கெஞ்சினால் மிஞ்சுவதும் தாண்டா ஆங்கிலேயன் குணம் தன் படைகளை இழந்து கண்கலங்கியவன் போகிறதும் போகிறோம் கொஞ்சம் மானமரியாதையோடு மனைவியின் மூலமாக உயிர் பிச்சை வாங்கி போனவன் தான் அலெக்சாண்டர் இதையும் நான் சொல்லவில்லை கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் தான் சொல்லியிருக்காக .
ஆனா நம்ம்நாட்டில்
புருஷோத்தமன் என்ற போரஸ்
வீரத்தையும் சுதேசியத்தையும் கொச்சைபடுத்தும் விதமாய் பள்ளிக்கூடங்களில் சரித்திர நூல்களில் கூறியது ஆங்கிலேயர் சூழ்ச்சி
பாரத்தின் வரலாற்றை எழுதிய அன்னியர்கள்
நம் தாய்நாடு எப்போதும் வீழ்ச்சியே சந்தித்தாகவும்
ஆங்கிலேயர்கள் எப்போதும் வெற்றித்தாயின் திருவடியில் அமர்ந்து இருந்தது போலவும் நம் கல்விமுறையில் எழுதிவிட்டான்
அந்த விசமாயக்கம் நம்மை விட்டு நீங்காத்தால் அதே கல்விமுறையை பின்பற்றுகிறோம் உண்மை என்ன சற்று சிந்தியுங்கள் நீங்களே !
வந்தேமாதரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக