நண்பர்கள்

4 செப்., 2015

பெருந்தலைவர் காமராஜர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடைவைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.கண்ணனைப் பாரதி "கண்ணம்மா" ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை "காமாட்சி" ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை "ராஜா" என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, 'காமராஜ்' என்று ஆனது.காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில்கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்களுக்கு ஏதிராக சுதந்திர போராட்ட நடந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில்கேட்ட பொதுக் கூட்டங்களே இவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது."தந்தையொடு கல்விபோம்" – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். இவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயேஇருந்தது. உப்புச் சத்தியாகிரகத்தில்பங்கு பெற்றார்.
இதனால் இவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார்.அதன் விவரங்கள் இனிவருகிறது அதேவேளை
காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனானார் 1942-ல் ஆகஸ்ட் கிளர்ச்சியையொட்டி தமிழ் நாட்டில் காமராஜர் சிறையில் அடைக்கப்பட்டு 1945-ல் விடுதலையானார் அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் .

1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் முதலமைச்சரானார் காமராஜர்.ஆம்
தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானார் ! மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்'என்று கூறி பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், காமராசரின் ஆட்சி காலத்தில்
14000 ப பள்ளிகள் கட்டினார் அதேவேளை
படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தார்
விவசாயிகள் நலனுக்காக
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
போன்ற
பாசனத்திட்டங்களைக் கொண்டுவந்தார் காமராஜ்.
அதேபோல்
கிண்டி,விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கியுள்ளார்
சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்குதமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் தான் கர்மவீரர் ! காமராஜர்
முதலமைச்சராக இருந்த போது இவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராஜரிடம் தெரிவித்தர். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும். என்ற கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார்.சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராஜரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடாபோன்வற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராஜர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன் அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையேசிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார்.1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட காமராஜரை தி.மு.க வேட்பாளர், மாணவன் சீனிவாசனிடம் தோற்றபோது அவரது கட்சிக்காரர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள் "இதுதான்யா ஜனநாயகம், ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப்போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னவர். காமராஜர் தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர், தன்னலமில்லாத அரசியல்வாதி, பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்ந்து காட்டியவர்.தனக்கென ஒரு குடும்பம் வேண்டாம், சொத்தும் வேண்டாம், உறவு வேண்டாம் ஏன்பெற்றத் தாயின் அரவணைப்பும் வேண்டாம் எனப் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்காமராசர்.இவரைப்போல ஒரு அரசியல்வாதியை நாம் இன்று காணமுடியுமா? "காமராஜர் ஆட்சிமீண்டும் வரவேண்டும்' என்று காங்கிரசுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்; எதற்கு? காமராஜரைப் போல இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த மடிவதற்கா? இல்லை இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் கோடிகளில் புரள்வதற்கா!1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் மாலை காமராஜர் தனதுஇறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். இவர் இறந்த போது இவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா? பத்து கதர் சட்டை, வேட்டி, ரூ.100 இவ்வளவுதான் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்தவர் தன்னகரில்லாத காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்தார் என்றால் அது மிகையல்ல
சென்னை தியாகராய நகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகியது தமிழக அரசு .சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என பெயர் சூடியது.அதேபோல் மதுரை பல்கலைக்கழகத்திற்க்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது !இன்றைய அரசியலில் இவரின் பெயர் புழக்கத்தில் உள்ளது.நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் அமைப்போம் எனதான் கூறுகிறார்கள் .ஆனால் அப்படி கூறுபவர்கள் இவர் தன் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் 'தூய்மையும் ஏனோ மறந்துவிடுகிறார்கள் !

நாளையப் பதிவின் நாயகன் பகத்சிங் அவர்கள்.
வந்தேமாதரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக