நண்பர்கள்

19 செப்., 2015

திருவேட்களம், சிதம்பரம் ----------------------------------------

தேடிதரிசித்த திருதலங்கள்

'கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.'
-திருநாவுக்கரசர்

சோழ நாட்டு வடகரை காவிரித் தலங்களில் இரண்டாவதான இத்தலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. கோயிலின் அருகே மட்டுமல்ல, வாசலிலும் காய்கறிச் சந்தை அமைந்திருக்கிறது. ஆனால், கோயிலுக்குள் நுழைந்து விட்டால், சந்தையிரைச்சல் ஏதுமின்றி அமைதி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள கோயில் சுமார் 1910 வாக்கில் கானாடுகாத்த செட்டியார் என்பவரால் அமைக்கப்பட்டதாகும்.

தலபுராணம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முதலாவது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம்.
அம்மன் சன்னதியில் அர்ஜுனன் தவம் குறித்த சிற்பங்களைக் காணலாம்.

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அனைத்து அஸ்திரங்களையும் கரைகண்ட அர்ச்சுனன், இறுதியாகப் பாசபத அஸ்திரம் வேண்டி சிவபெருமானைத் தொழுதிருந்தான்.

அப்போது, அவனைச் சோதிக்க முக்கண்ணன் அனுப்பிய பன்றியானது வில்லாளனின் தவத்திற்கு இடையூறு செய்ய, சினமுற்ற விஜயன் அதைத் துரத்த, அது கையில் அகப்படாமல் ஓடியவண்ணமே இருக்க, வெகுண்ட பார்த்திபன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.

அதே கணம், அங்கு தோன்றிய வேடனொருவன் அது தனது பாணத்தால் வீழ்ந்தது என்று சாதிக்க, வாய்ச்சணடை கைச்சண்டையாக முற்றி அர்ச்சுனனம் தன் வில்லால் வேடன் மண்டையில் ஓங்கியடிக்க, அந்த நொடியில் வேடன் உரு மறைந்து அங்கே சாம்பசிவன் நின்றிருந்தான். அர்ச்சுனனின் தவத்தைப் போற்றி, சங்கரன் அவனுக்கு பாசுபத அஸ்திரத்தையும் அருளினான். அத்தகைய புகழ் பெற்ற தலமாகும், அள்ளாமலை நகரில் அமைந்துள்ள திருவேட்களம் என்னும் இத்திருக்கோயில்.

இங்கு நடராசன் முருகனாகவும், வேலன் முக்கண்ணனாகவும் தோன்றி அருள் பாலித்தனர் என்பர்.

மூலவரின் பெயர் பாசுபதீஸ்வரர்.
தாயாரின் திவ்யநாமம் சற்குணாம்பாள். அழகு தமிழில் நல்லநாயகி.

திருஞான சம்பந்தர் இங்கிருந்துதான் சிதம்பர ஆடல்வல்லானை தரிசித்தார் என்பர்.
அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றதாகும் இததலம்.

தலச்சிறப்பு

சூரியனும் சந்திரனும் அருகருகே அமைந்துள்ல இக்கோயிலில், சூரிய சந்திர கிரகண காலங்களில் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

வில்லாளனுக்கு அஸ்திரம் அளித்த பெருமான் சொல்லாடலிலும் குறைகளைப் போக்குவார் என்று புகழ் பெற்றார். பேச்சுக் குறைபாடு உள்ளோர் இங்கு பிரசாதமாக வழங்கப்படும் மண் உருண்டையை உண்டால், தங்கள் குறை நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.

தலப்பண்

கல்லாலே அடித்தவனும் சொல்லால் அடித்தவனும்
பல்லாண்டு வாழ்த்தியேதம் பிறவிக்கடன் தீர்த்தவனாம்
வில்லாலே அடித்தநல் விஜயனுக்கும் அருளீந்தான்
இல்லையொரு பெம்மான் அவன்போலே இவ்வுலகில்

ஓம் நமச்சிவாய!

15 செப்., 2015

பிரதோஷ விரத மகிமை

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

4 செப்., 2015

நேதாஜி

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...



;;தோமாரா இ லாகியா கலங்கோர் போஜ்ஜா ,,
பஹிதே ஆமாரா ஸூக் ""

இது நேதாஜி மண்டலாய் சிறையிலிருந்தப் போது தென் கல்கத்தா சேவக சமிதியின் உபகாரியதரிசி அநாதபந்து தத் என்பவருக்கு 1926-டிசம்பர் மாதம் எழுதியுள்ள கவிதை வரிகள் இதன் பொருள்

"" உன் பொருட்டு இந்தக் களங்கச் சுமையை வகிப்பதே எனது இன்பம் '' என்பதே ஆகும் !

வெறும் வார்த்தைச் சொல்லாடல் மட்டுமல்லாமல் .களங்கம் கஷ்டம் எதையும் பொருட்படுத்தாமல் பாரத நாட்டை விடுதலை செய்யத் தமக்கென தனிப்பாதை வகுத்தது அதில் தம்மையே அர்ப்பணம் செய்து கொண்டவர் இன்றைய பதிவில் நாம் படிக்கப் போகும் நேதாஜி' என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!' என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம் பாரத விடுதலைப் அடைய இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள "பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்" தொடங்கினார். பின்னர், 1913ல் "கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்" தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு "கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்" சேர்ந்த அவர், "சி.எஃப் ஓட்டன்" என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், "ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்" சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்', சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நடந்த தாக்குதலே , வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
சுதந்திர போராளி
நேதாஜி
'தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது' எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. "கொல்கத்தா தொண்டர் படையின்" தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.

சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் "சுயாட்சிக் கட்சியை" தொடங்கியது மட்டுமல்லாமல், "சுயராஜ்ஜியா" என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்தியின் முடிவை, 'தவறு' என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், "நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை" என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், 'நேதாஜி' (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே "பட்டாபி சீதாராமையாவை" நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி காந்தியின் நிர்ப்பந்தத்தால் காங்கிரஸ்லிருந்து தானாகவே வெளியேறி பார்வர்ட் பிளாக் என்று தனிக்கட்சி கண்டார் .

'பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்' என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 'இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது சிறையில் இவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க துவங்கினார் எனவே ஆங்கில அரசு இவரை வீட்டுக் காவலில் வைக்க முடிவு செய்தது வீட்டுக் காவலில் இருந்த சுபாஷ் நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவெடுத்தார் ஆம்
"" அயல் நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கிருந்து தமது போராட்டத்தை துவங்குவது என அந்த நாளில் இவர் வீட்டைச் சுற்றி புகழ்பெற்ற ""ஸ்காட்லாண்ட் யார்டு '' எனும் புகழ்பெற்ற துப்பறியும் போலீசார் இருந்தனர் அப்போதுதான்
பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்' என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார் வீட்டுக் காவலில் இருந்து நேதாஜி தப்பிய செய்தி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இடியாகவும் பாரத மக்கள் மனதில் தேனாகவும் விழுந்தது

ராஷ் பிகாரி போஸ்ஸின் சுதந்திர இந்திய ராணுவம் மீண்டும் துவங்கியது

1941 ஆம் ஆண்டு "சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் "வான் ரிப்பன் டிராபின்" உதவியுடன் சிங்கப்பூரில் "ராஷ் பிகாரி போஸ்" தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே "இந்திய தேசிய ராணுவப்படையை" கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு "இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை" "ஜெய் ஹிந்த்" என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பாரதம் விடுதலையடைந்தது

போஸ் மரணம் குறித்த சர்ச்சை

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
அதேவேளை இனியாவது
நேதாஜியின் மாயமானதன் மர்மம் குறித்து
விசாரணை நடத்த வேண்டும் என நினைக்கிறேன்

Shivanianantham Yadav's photo.
Shivanianantham Yadav's photo.

பூலித்தேவர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...



கூண்டுக்கிளியாகப் பழமும் பால்சோறும் உண்டுகொழுத்து வாழ்பவன் அல்ல !
விடுதலை என வீறு கொண்டு எழுந்து வெள்ளையருக்கு ஏதிராக வீரவாள் சுழறிய மாவீரர்களில் ஒருவர் பூலித்தேவர் அவரைப்பற்றி சற்று சுருக்கமாக இன்றைய பதிவில் காண்போம்
ழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.பூலித்தேவருக்குபன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல்எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் வீரமிக்கவர்களான மறவர்கள் இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர்.வாழ்க்கைஇவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன்பூலித்தேவர்ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால்பூலித்தேவரைஎல்லோரும்புலித்தேவர்என்றே அழைத்து வந்தனர்.காத்தப்ப பூலித்தேவரின்திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள்கயல்கண்ணிஎன்கின்றஇலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர்சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்குகோமதி முத்துத் தலவாச்சி,சித்திரபுத்திரத் தேவன்மற்றும்சிவஞானப்பாண்டியன்என்று மூன்று மக்கள் பிறந்தனர்.பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில்,பால்வண்ணநாதர்கோயில், வாசுதேவநல்லூர்அர்த்தநாரீசுவரர்கோயில், நெல்லைவாகையாடி அம்மன்கோயில் மற்றும் மதுரைசொக்கநாதர்கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும்பூலித்தேவர்திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.விடுதலைப்போராட்டத்தில் பங்கு1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்துஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.பூலித்தேவனும் இராபர்ட்கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.1755ஆம் ஆண்டுகர்னல் கீரோன்(கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டுகப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை
விரட்டினார் [அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டுகேப்டன் பௌட்சன்வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் சூழ்ச்சிக்கும் பெயர் பெற்றவனுமாகியகான்சாகிப்வால்பூலித்தேவரைஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள்போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
அன்னியர்களை எதிர்த்து பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.அந்த சூழலில் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின்உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிடஆரம்பித்தனர்.பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் கூட நம் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சிஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது.உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர்.ஹிந்துவாய் பிறந்த பின்னர் நாளடைவில் மதம் மாறியவன் தான் இந்த யூசப்கான் கடந்த பதிவிலேயே நாம் கண்டோம் மாவீரன் அழகுமுத்துக் கோனை சூழ்ச்சியால் வென்று பீரங்கி வாயிலாக கொன்றதை கண்டோம் இவன் ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் பதவி ஆசைக்காக பூலித்தேவரையும் கடுமையாக எதிர்த்தான் !

1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.-------
தொடரும் மீதி அடுத்த பதிவில்

Shivanianantham Yadav's photo.

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...



1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் போர் நடந்தது பத்தாண்டுகளாய் நடைபெற்ற நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.அதற்குப்பின்ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர்.1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர்.இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும்பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் அது சாத்தியமாகவில்லை பின் குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர்.அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர்.ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார்.தப்பி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மறைந்து கொண்டார்.பின்னர்1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போராகும்இவரின் படையில் ஒண்டிவீரன் பகடை , வெண்ணிக் காவடி போன்ற வீரர்கள் இருந்துள்ளனர் அதேவேளை பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.ஒன்று இவர் தப்பிச் சென்றாலும் இவர் உயிரைகுறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் இவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் ,அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழசோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால்"பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில்உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.அதேவேளை மற்றொருகருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம்என்றும் நம்பப்படுகின்றது
இவரின் நினைவாக இவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு இவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.நாளையப் பதிவில் சுதந்திர போராட்ட வீரர் மங்கள் பாண்டே

Shivanianantham Yadav's photo.

மாவீரர் மங்கள் பாண்டே

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றைய பதிவிலே நாம் காணும் மாவீரர் மங்கள் பாண்டே வங்கசேனை என்ற படைப் பிரிவில் இருந்த வீரர் .

மங்கள் பாண்டே 29-3-1857 லில் பாரக்பூர் எனும் இராணுவ முகாமில் அன்னியர்களுக்கு ஏதிராக கலகக் கொடியை உயர்த்தினார் .ஹென்சன் என்ற வெள்ளைகார மேஜர் இந்த மங்கள் பாண்டேவைச் சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டப் போதும் அங்கிருந்த இந்திய சிப்பாய்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர் .அதேவேளை மங்கள் பாண்டே மூன்று வெள்ளை சிப்பாய்களைக் கொன்று வீழ்த்தினார் எனினும் இறுதியாக இந்த சண்டையில் பாண்டே படுகாயமடைந்தர் பிறகு மங்கள் பாண்டே மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1857-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-நாள் தூக்கிலிட்ப்பட்டார் .

நமது பாடப் புத்தகத்தில் தேச விடுதலை வீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரர்களில் மங்கள் பாண்டேவும் ஒருவர் !

நாளையப் பதிவு வ.உ.சிதம்பரனார் பற்றியது நன்றி

வந்தேமாதரம்

Shivanianantham Yadav's photo.

வ.உ.சிதம்பரனார்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றைய பதிவில் நாம் படிக்கப் போகும்வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி சொன்னால் பாட்டுக்குப் பாரதியார் பேச்சுக்கு சிதம்பரம் பிள்ளை என்பார்கள் !தென்னாட்டுத் திலகர் என்றும் 'வ. உ. சி' என்று அழைக்கப்பட்டார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார்.அவருக்கு, புரட்சி மனப்பான்மையும்,ஆங்கிலேயருக்கு எதிராக இவரது துணிச்சலான தன்மையே இவருக்கு 'கப்பலோட்டிய தமிழன்' என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், 'தமிழ் ஹெல்ம்ஸ்மேன்' என்று கூறுகின்றனர். 'கப்பலோட்டிய தமிழன்' என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக இவரின் பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் 5.9.1872ல் பிறந்தார்.இவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள்ஒருவர். வ.உ.சிதம்பரனார்திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, சட்டப்பள்ளியில்சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்துசட்டத்தொழிலில், மிகச் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தார்இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரவிந்த்கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.இதேபோல் , வ.உ.சிஇந்தியா சுதந்திரம் பெறுவதற்காக இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின்ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட இவர், நவம்பர் 12, 1906ல், 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை' நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான "எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்", சக சுதேசி உறுப்பினர்களான அரவிந்த் கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. இவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி', பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தைல மேலும் குறைத்தார்.கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றதுஇதன்பின் திருநெல்வேலியிலுள்ள 'கோரல் மில்ஸ்' தொழிலாளர்களின்ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்குஎதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று இவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். இவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்இவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.வ.உ.சி.சிறையில் இருந்த அந்நாட்களில், கடின உழைப்பில் ஈடுபட்டார். இதனால்இவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் இவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால்,டிசம்பர் 12, 1912 அன்று இவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, இவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், இவர் விடுதலை செய்யப்பட்டார்.அதேவேளை 'பாரிஸ்டர் பட்டம்' இவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், இவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் இலக்கியத்திலும்இவர் ஒரு சிறந்தவர் புதுவையில் அரவிந்தரை இவர் சந்தித்தப் போது 27-மொழிகளில் பத்திரிகை நடத்தி சுதந்திர கிளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என சொன்னார் எனினும் அது நிறைவேறவில்லை வ.உ.சி. சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கி 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அதேவேளை ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், இவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார் .செல்வ சீமானாய்வாழ்ந்தவர்தான் தனது இறுதி காலத்தில் நோய்க்கு மருந்து பெறக் கூட காசின்றி 1936-நவம்பர் -18 அன்று இறந்து போனார்.சுதந்திரத்திற்கு பின்னர், இவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் 'வ.உ.சி போர்ட்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.செப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை இவரின் பெயரில் வெளியிட்டது கோயம்புத்தூரிலுள்ள 'வ.உ.சி பூங்கா' மற்றும் 'வ.உ.சி மைதானம்' மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.அதேவேளை கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக இன்று கோவை சிறை வளாகத்தில் உள்ளே ஒரு 'நினைவுச்சின்னம்' இவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு 'வ.உ.சி பாலம்' என பெயரிடப்பட்டதுநாளையப் பதிவில் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியதுவந்தேமாதரம்

Shivanianantham Yadav's photo.

வ.உ.சிதம்பரனார்

வ.உ.சிதம்பரனாரின் வாழ்வில் முக்கியமான அரசியல் நிகழ்வுகள்

1905ல் வ. உ.சி அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார்இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங ் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ.சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.
அதேவேளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவன் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,"இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை.அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினான் அதேவேளை தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.தவிர விடுமுறையும் கிடையாது. அவர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். அவர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி கூறினார் வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: 1. கூலிஉயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள்மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார்.நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ளஅனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களின் ஆதரவுடன் . வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரப்படுத்தினார் .மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள்.இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது.1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். பிறகு அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. யோசிச்சுப் பாருங்கள் அது தொழிற்சங்கங்கள் இல்லாதஒரு காலம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும்வெற்றி பெறச் செய்தார். கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். ஸ்ரீஅரவிந்தர்இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதியுள்ளார்
வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். இவர் "சுதேசி பிரச்சார சபை","தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றில் இவரது பங்கு அதிகம் இருந்தது!இதுபோன்ற சரித்திர சம்பவங்கள் வ.உ.சிதம்பரனாரின் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஆகும்

Shivanianantham Yadav's photo.

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றையப் பதிவில் நாம் பார்க்கப் போவது வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைப் பற்றி அதேவேளை பாளையகார்கள் எல்லோரும் பிரிட்டிஷ்ராரோடு கூடிக்குலவியவர்கள் என்றோ அல்லது எப்போதும் எதிர்த்துப் போராடியவர்கள் என்றோ ஒற்றை வரியில் கூறுவது கடினம் .ஏனென்றால் கட்டபொம்மன் பாட்டனார் பிரிட்டிஷ் கும்பினியாரிடம் சமரசமாக இருந்தவர் .அதேவேளை எட்டப்பனின் மூதாதையர்கள் கும்பினியாரை எதிர்த்துள்ளனர் !

ஆம் இரு பாளையத்தைச் சேர்ந்தவர்களும் எப்போதும் எதிர் எதிர் நிலையையே மேற்கொண்டு வந்துள்ளனர் .இதில் இப்போது நாம் காணப்போகும் வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டவர்
சுதந்திர போராட்ட செய்திகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 'வீரபாண்டியன்' என்றும், 'கட்டபொம்மன்' என்றும், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்றும், 'கட்டபொம்ம நாயக்கர்' என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாற்றை இன்று சற்று சுருக்கமாக பார்போம்
ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார்.இவர் மனைவி ஆறுமகத்தமாள் இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் பிறந்தவரே இன்றைய பதிவின் நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் இவரது இயற்பெயர் 'வீரபாண்டியன்' ஐந்துகுழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். இவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்ட), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.இவர் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததது அதேவேளை திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவன் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
அவர்களிடம் பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவன் கலெக்டராகப் பதவியேற்றான் . ஆங்கிலேய ஆதிக்கத்தில் அவர்களுக்கு கட்டபொம்மனும் இலக்காக இருந்தார் . கட்டபொம்மனுக்கு பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் அவர்கள் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரையும் அப்போது ஒருவர் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் இவரைக் கைது செய்தனர்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு "எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடத்தினேன்" என்று முழங்கியவாறு தூக்குமேடையேறிய ஏறினார் அப்போது
இவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது.
ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன்
இவரது வரலாறு '' கட்டபொம்மன் கூத்து "" மற்றும்
கட்டபொம்மு கதைப் பாடல்கள் என மக்களிடையே இன்றும் இடம்பெற்றுள்ளது . 1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், சக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தமிழக அரசின் முயற்சியாக தோன்றின.அங்கு நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள்,அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடுஅரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வந்தேமாதரம்


சுப்பிரமணிய சிவா

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


எனது ஜாதி பாரத ஜாதி, எனது மதம் பாரதிய மதம், என் வழிபடு தெய்வம் பாரத மாதா' என்று பாரத மாதாவுக்கு ஆசிரமம் அமைத்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்து நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்து 47-ல் நாம் விடுதலை பெற 41 வயதிலேயே வீரமரணமடைந்தவர் சிவா என்ற சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியுமா?ஒருபுறம் வறுமை, மறுபுறம் தொழு நோய் என்ற இருபுறத் தாக்குதலுக்கு அஞ்சாமல், தேச பக்திக்கனலை மூட்டி அந்த தியாக வேள்வியில் கற்பூரமாகக்கரைந்தவர் தான் சுப்பிரமணிய சிவா அவர்களைப் பற்றி சொன்னால் ஆங்கிலேய
அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்தார் எனலாம் "சிவாவுக்குத் தங்க இடம் தந்து,பொதுக் கூட்டம் நடத்தி உணவு தந்து உபசரித்த பெருங் குற்றத்திற்காக வ.உ.சிக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனைவிதிப்போம்" என்று பின்ஹே என்ற நீதிபதி தீர்ப்பனித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சிவா ஆங்கிலேய அரசிற்கு எவ்வளவு மிரட்டலாக இருந்திருப்பார் இவரின் வாழ்க்கை பதிவுகளைச் சற்று சுருக்கமாக பார்போம் ''சிவம் பேசினால் சவம் எழும் ''
என்று சுதந்திர போராட்ட காலத்தில் எழுச்சிப் பேச்சிற்க்காக உதாரணமாக திகழ்ந்தவரைத்தான் இன்றையப் பதிவிற்கு சொந்தகாரர்.இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் ' இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்க்கு பிறந்தார் இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி படித்தார் பின கோவையில் கல்லூரி மேற்படிப்பு படித்துள்ளார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியுள்ளார் நாட்டு விடுதலைக்குப் பேச்சு, எழுத்து, இதழியல், நாடகம், நடிப்பு என்ற பல துறையிலும் தொண்டு செய்த சுப்பிரமணிய சிவம் அடுத்தடுத்த சிறைவாசம், தன் உடல்நலத்தைக் கவனிக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார் சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர் என்ற செய்தியை புத்தகத்தில் படிக்கின்ற போது கொடியது கொடியது இளமையிலேயே வருமை என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது . இவர் கடந்த பதிவிலே நாம் படித்த வ.உ.சிதம்பரனருடன் 1908 ல் சிறைச் சென்றவர் தமிழகம் முழுவதும்பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடைவிதித்ததுள்ளது என்றால் பாருங்கள் ஆங்கிலேயரின் அற்ப புத்தியை இருப்பினும், கால்நடையாகவும், மாட்டு வண்டியிலும் ஊர், ஊராக பயண ம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டி னார். 22.7.1925-ல் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்ப ர்களுடன் மிக உற்சாகமாக பேசி க்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வய தில் இயற்கை எய்தினார். இதைப்பற்றி பாரதியார் கூறுகையில் .'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் – பின்னர்வேறொன்று கொள் வாரோ?- என பாடினார் .
விடுதலைப் போராட்டத்தில் இவர்களைப் போன்றவர்களின் ரத்தமும் தியாகமும் அடங்கியுள்ளது என்பதே யாராலும் மறுக்கமுடியாத உண்மை !

வந்தேமாதரம்

லோகமான்ய பாலகங்காதர திலகர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


காந்தி 'இந்திய அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பே நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தை முன் நின்று வழிநடத்திய தலைவர்கள் மூவர் .LaL ,BaL ,PaL.என்று அன்புடன் அழைக்கப்படும்
லாலா லஜபதிராய்
பாலகங்காதர திலகர்
மற்றும் பிபின் சந்திரபால் அவர்கள்! இன்றைய தலைமுறையினருக்கு இவர்களைப் பற்றி அதிகம் தெரியாமல் இருபது நமது துரதிர்ஷ்டமே !
இதில் இன்றையப் பதிவின் நாயகர்
லோகமான்ய பாலகங்காதர திலகர் ஆவார் இவர் ஒரு தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். "சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியவர். 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை' என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம்
'பால கங்காதர திலகர்' என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள "ரத்தினகிரி" என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மராத்தி சித்பவன் மகனாக பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கியவர் .திலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கிய இவர் "டெக்கான் கல்லூரியில்" சேர்ந்து கல்விக் கற்று, 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக் கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், 'நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்' என்றனர். அதற்கு திலகர், "என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்!" என்றார். அவர் நினைத்தது போலவே, சட்டம் பயின்று பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.
1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து "கேசரி" என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் ' தி மராட்டா" என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் "கேசரி" இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றியும் எழுதப்பட்டது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1893-ல் மராட்டிய பிரதேசம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வழி செய்தார்
1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே "பிளேக்" நோய் தீவிரமாக பரவியது. அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து 'வரி கொடா இயக்கத்தையும் நடத்தியதோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது. விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898 சென்னை மற்றும் 1899 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர், 1907 ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி 'மிதவாதிகள்', 'தீவிரவாதிகள்' என இரு பிரிவுகளாக பிளவுபட்டது .இதில் திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர். இதனால், 1906 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் திலகர், சிறையில் கீதையின் சிறப்பை உணர்த்தும் வகையில் "கீதா ரகசியம்" என்ற நூலை மாண்டலே சிறையில் எழுதினார்.நமது ஹிந்து தர்மத்தின் தத்துவ தரிசனங்கள் 'வாழ்க்கை வழிகள் தர்மநெறிகளை 'எல்லாம் சிறப்பு வாய்ந்தவை என சுட்டிக்காட்டியவர்
தன்னுடைய இறுதி காலம் வரை, பாரத மக்களைக் காப்பாற்றி விடுதலைப் பெற வேண்டும் என போராடியவர் ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் காலமானார்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, "சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் பாரத மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகரின் கொள்கைகள் போற்றத்தக்க ஒன்றாகும்.
வந்தேமாதரம் .

பெருந்தலைவர் காமராஜர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடைவைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.கண்ணனைப் பாரதி "கண்ணம்மா" ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை "காமாட்சி" ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை "ராஜா" என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, 'காமராஜ்' என்று ஆனது.காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில்கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்களுக்கு ஏதிராக சுதந்திர போராட்ட நடந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில்கேட்ட பொதுக் கூட்டங்களே இவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது."தந்தையொடு கல்விபோம்" – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். இவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயேஇருந்தது. உப்புச் சத்தியாகிரகத்தில்பங்கு பெற்றார்.
இதனால் இவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார்.அதன் விவரங்கள் இனிவருகிறது அதேவேளை
காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனானார் 1942-ல் ஆகஸ்ட் கிளர்ச்சியையொட்டி தமிழ் நாட்டில் காமராஜர் சிறையில் அடைக்கப்பட்டு 1945-ல் விடுதலையானார் அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் .

1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் முதலமைச்சரானார் காமராஜர்.ஆம்
தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானார் ! மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்'என்று கூறி பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், காமராசரின் ஆட்சி காலத்தில்
14000 ப பள்ளிகள் கட்டினார் அதேவேளை
படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தார்
விவசாயிகள் நலனுக்காக
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
போன்ற
பாசனத்திட்டங்களைக் கொண்டுவந்தார் காமராஜ்.
அதேபோல்
கிண்டி,விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கியுள்ளார்
சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்குதமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் தான் கர்மவீரர் ! காமராஜர்
முதலமைச்சராக இருந்த போது இவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராஜரிடம் தெரிவித்தர். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும். என்ற கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார்.சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராஜரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடாபோன்வற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராஜர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன் அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையேசிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார்.1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட காமராஜரை தி.மு.க வேட்பாளர், மாணவன் சீனிவாசனிடம் தோற்றபோது அவரது கட்சிக்காரர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள் "இதுதான்யா ஜனநாயகம், ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப்போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னவர். காமராஜர் தமிழகத்தின் தலைசிறந்த மக்கள் தலைவர், தன்னலமில்லாத அரசியல்வாதி, பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வாழ்ந்து காட்டியவர்.தனக்கென ஒரு குடும்பம் வேண்டாம், சொத்தும் வேண்டாம், உறவு வேண்டாம் ஏன்பெற்றத் தாயின் அரவணைப்பும் வேண்டாம் எனப் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்காமராசர்.இவரைப்போல ஒரு அரசியல்வாதியை நாம் இன்று காணமுடியுமா? "காமராஜர் ஆட்சிமீண்டும் வரவேண்டும்' என்று காங்கிரசுக் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்; எதற்கு? காமராஜரைப் போல இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த மடிவதற்கா? இல்லை இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் கோடிகளில் புரள்வதற்கா!1975 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் மாலை காமராஜர் தனதுஇறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். இவர் இறந்த போது இவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா? பத்து கதர் சட்டை, வேட்டி, ரூ.100 இவ்வளவுதான் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்தவர் தன்னகரில்லாத காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்தார் என்றால் அது மிகையல்ல
சென்னை தியாகராய நகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகியது தமிழக அரசு .சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என பெயர் சூடியது.அதேபோல் மதுரை பல்கலைக்கழகத்திற்க்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது !இன்றைய அரசியலில் இவரின் பெயர் புழக்கத்தில் உள்ளது.நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் அமைப்போம் எனதான் கூறுகிறார்கள் .ஆனால் அப்படி கூறுபவர்கள் இவர் தன் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் 'தூய்மையும் ஏனோ மறந்துவிடுகிறார்கள் !

நாளையப் பதிவின் நாயகன் பகத்சிங் அவர்கள்.
வந்தேமாதரம்


‘பகத்சிங்’

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றையப் பதிவின் நாயகன் 'பகத்சிங்' அவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால்
பகத்சிங்கும் புரட்சியும் வேறு வேறல்ல ! பகத்சிங் என்றால் புரட்சி !
புரட்சி என்றாலே பகத்சிங் !இவர் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள "பங்கா" என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய ஜாட் சமுக குடும்பத்தில் பிறந்தார். இவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.இவர் விடுதலைப்போராட்டவீரர்களை கொண்டசீக்கியக்குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின்ரஞ்சித் சிங்மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.இவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமிதயானந்த சரஸ்வதியின்இந்து சீர்திருத்த இயக்கமானஆர்ய சமாஜைத்தைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் தன்னுடைய பதின்மூன்று வயதில், காந்தியின் ஒத்துழையாமைஇயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த "சௌரி சௌரா" வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். 'அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!' என முடிவுக்கு வந்தார். 1924ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட "இந்துஸ்தான் குடியரசுக் கழகம்" என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் சுதந்திர போராட்ட கலத்தில் பகத்சிங், சுகதேவ், பவதிசரணம் வேரா, எஷ்பால் போன்ற நண்பர்களுடன் இணைந்து "நவ்ஜவான் பாரத் சபா" என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர். இறப்புசென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக இவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது அப்போது
1931-மார்ச் 23ஆம் நாள் காந்தியிடம் மாளவியா கலக்கத்தோடு " இன்று மாலை பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிடப் போகிறாங்க நீங்கள் கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரலாம் புறப்படுங்கள் ''என்றவுடன் காந்தி 'நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்துவிட்டேன் .இனிமேல் ஒன்றுமில்லை '' என ஒரு பேப்பரில் எழுதி காட்டிவிட்டு மற்றோர் புறம்
காந்தி. "அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது" எனவும் இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தியை எதிர்த்து, "பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ" என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர் மக்கள்.
பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தது காங்கிரஸ் என கடந்த சில பதிவுகளிலே நாம் பார்த்தோமே ஆம் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள். சிறையில் தனது தம்பி குல்வீர்க்குமாருக்கு இவர் 1931-ல் எழுதிய கடைசி கடிதத்தில், "நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவது போல் நானும் காலை ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் குறிக்கோள் என்றும் நிலைத்திருக்கும். இன்று மறைந்து நாளை மீண்டும் பிறப்போம். நம் இந்தியத் தாய்களின் வயிற்றில் எண்ணற்ற இந்நாட்டின் வீரர்கள் வடிவில்" என்று குறிப்பிட்டு, மறுநாள் (மார்ச் 23) துாக்கு மேடை நோக்கி வீரநடைபோட்டு 24 வயதில் இந்த தேசத்திற்காக உயிரைக் கொடுத்து இளைஞர்களின் இதயங்களை வென்ற வீரனாய் மறைந்தார் பகத்சிங். இம்மாவீரனை நமது தேசத்தின் தியாகச் சுடர்களை நினைத்து பார்ப்போம். இவர்களின் கால்தடங்களையும், நினைவுகளையும் சுமந்து நிற்கும் வரலாற்றை வாசிப்போம். பாரதநாட்டை நேசிப்போம்.
வந்தேமாதரம்

அலெக்ஸாண்டரைப் பந்தாடிய மாவீரன்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்று ரக்‌ஷாபந்தன் என்பதால் அதனுடன் தொடர்புடைய ஒரு மாவீரனைப் பற்றி பதிவு !
இவர் சுதந்திர போராட்ட காலத்தை சார்ந்தவர் அல்ல .அதேபோல் இந்த பதவிக்காக நான் எடுத்துக் கொண்ட ஆதாரங்கள் எதுவும் RSS காரர்களோ 'வேறு இந்திய வரலாற்று ஆசிரியர்களோ அல்ல !முழுவதும் படியுங்கள் .எல்லாம் கிரேக்க ஆசிரியர்கள் கூறியதே !

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னியர்கள் கிரேக்கர்களையும் 'ஆங்கிலேயர்கள் வானளாவப் புகழ்ந்து பேசும் அலெக்ஸாண்டரை பந்தாடிய மாவீரன்

போரஸ் எனும் புருஷோத்தமன் .
கிமு .326-ல் நமது பாரத்தின் செல்வ வளத்தையும் பாரத்தின் புகழையும் தேசியாஸ் என்ற கிரேக்க அறிஞரும் ஸ்கைலாஸ் மற்றும் ஹெரோட்டஸ் என்பவர்கள் மூலமாக பாலும் தேனும் பாய்கின்ற செல்வ வளமிக்க பூமி எனக் கண்டுகொண்ட அலெக்ஸாண்டர் நமது நாட்டின் மீது படையெடுத்தான் அதுவும் நேரடியாக அல்ல !

ஜீலம் நதியின் மேற்குக்கரையில் பிரமாண்டமான யானைகள் படைகள் !
போரஸ் யதுவம்சத்தின் கீரத்தி பெற்ற மன்னர்களில் ஒருவர் புருஷோத்தமன் !
ஆனால் அவருக்கு துரோகி அருகிலேயே இருந்தான் அவன் பெயர் அம்பி ஆம் அவன் தான் அலெக்ஸாண்டருக்கு ஆட்பட்டு அடிமையாக தலைவணங்கியவன் அம்பி .ஆம்
அம்பிக்கு முன்பே போரஸ் மீது பகை அதை அலெக்சாண்டர் படையெடுப்பின் போது பயன்படுத்திக் கொண்டான் .

படையெடுப்பு விவரங்கள் பற்றி விரிவான செய்திகள் பல புத்தகத்தில் வந்துள்ளது !

ஏன் நீங்கள் Gogol லில் போனா கூட எளிதாக படித்துவிடலாம் !இங்கு சுருக்கமாக சில செய்திகள் மட்டுமே தருகிறேன் நான் .

கிரேக்க ஆசிரியர் கிரியாஸ் எழுதியுள்ளார் .

என் எதிரில் காட்சி தரும் இப்படைகளைப் பார்க்கிற போது முதல் முதலாக என் வாழ்வில் ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது .கொடிய யானைகளும் அச்சமற்ற அசாதாரண பலம் படைத்த வீரர்களை என் கண் முன்னே இப்போது தான் பார்க்கிறேன் என்று குரல் தழும்பி கூறினார் என நான் சொல்லவில்லை.
கிரேக்க எழுத்தாளர் கிரியாஸ் சொல்லியிருக்கார் மேலும் ஜீலம் நதிக்கரையில் கண்ட போரஸ் படைவீரர்கள் தான் இதற்கு முன் கண்ட பாரசீகர்கள் 'பாபிலோனியர்கள் போல் இல்லை என விரத்தியில் புலம்பியவன் அலெக்ஸாண்டர் என கூறிப்பிடுகிறார் .

இவராவது பரவாயில்லை இன்னுமொருவர் சொல்கிறார் அவர் பெயர் ஜோசப் பென்குரியன்
Note -loss to the enemy was heavy ; numberless horse were killed .the Greek soldiers wept and howled like dogs and wished to throw down their ar as and forsake Alexander .when Alexander saw this .he drew sigh into their midst and wished to stop the fight -

இப்போரில் கிரேக்கர்கள் அளவிடமுடியாத நஷ்டத்தை அடைந்தனர் .ஆயிரக்கணக்கான வீரர்களும் குதிரைகளும் கிரேக்கர்களுக்கு ஏற்பட்ட இழப்பு .இதனால் கிரேக்க வீரர்கள் துக்கத்தின் வசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதனர் .கதறினர் .நாய்களைப் போல் அழுது ஊளையிட்டனர் .ஆயுதங்களை எல்லாம் எரிந்து விட்டனர் .இதனால் அலெக்ஸாண்டர் பெருமூச்சுவிட்டுக் கொண்டே போரினை நிறுத்திவிடப் போவதாக கூறி அவர்களை சமாதானம் செய்தார் என
இதேபோல் புளூடார்ச் என்ற சரித்திர ஆசிரியர் கூறியது

அலெக்ஸாண்டர் சமாதானத்தை விரும்பினார்.எனவே போரஸ்சின் உறவினன் மோரோஸ் என்பவரை சமாதானம் பேசி போரஸ்சிடம் போர் நிறுத்தம் செய்தார் என

சரி இந்த செய்திகளை ஏன் இன்று சொல்கிறேன் தெரியுமா ?

போரில் போரஸ்சிடம் தன் செல்ல குதிரை பூஸேபாலஸ் யை இழந்து அலெக்சாண்டர் அழுத்தைப் பற்றியே பத்து பதிவு போடலாம் அவ்வளவு இருக்கு .
துரோகி அம்பியிடம் இப்போரில் வெற்றி பெற பல வழிகளை கேட்டான் அலெக்ஸண்டர் அவன் சொல் கேட்டு போரஸ் படையில் உள்ள யானைகளை குறிவைத்து தாக்கினான் யானைகளின் துதிக்கைகளையும் வெட்டினான் .தீப்பந்தங்களைக் கொளுத்தி வீசினான் ஏன் போரஸையே நேருக்கு நேர் சந்திக்க பயந்து மழையில் மறைந்து கிழக்கு கரையில் வந்து முன்னும் பின்னும் இரு முனைகளில் போரை தொடுத்தான் அலெக்சாண்டர் எனினும் வெற்றி பெற வில்லை .ஆம் செல்யூகஸ் நிகேதார் என்ற அலெக்சாண்டரின் தளபதியை அழைத்து சென்று அலெக்சாண்டர் மனைவி ரோக்ஸானா போரஸ்சின் கையில் கையில் கட்டி தன் கணவர் அலெக்சாண்டர் உயிரை காக்க வேண்டி கட்டிய ராக்கியே அலெக்சாண்டர் உயிரை காத்தது .இதற்கு பிறகு கிரேக்கர்கள் தங்கள் படையெடுப்பை இந்தியாவில் தொடரவில்லை என்பதே உண்மை இதை பள்ளிக்கூட பாடத்தில் சொல்லக் கூட இங்கே உள்ள மெக்கலே கல்விமுறையில் துணிவில்லை

போரஸ்சின் வீரம் கண்டு வியந்த அலெக்சாண்டர் அவரையும் நண்பராக்கிக் கொண்டார் பிறகு நாட்டை நண்பர் போரஸ்யிடமே கொடுத்து விட்டு சென்றார் என்கிறார்கள் "அட அறிவுகொட்ட ஆங்கிலேய அடிமைகளா யார்கிட்ட டா கதை விடரீங்க தர்மத்துக்கு கட்டுப்படாதவன் நட்புக்கு கட்டுப்பாடுவானா ?

மிஞ்சினால் கெஞ்சுவதும் .

கெஞ்சினால் மிஞ்சுவதும் தாண்டா ஆங்கிலேயன் குணம் தன் படைகளை இழந்து கண்கலங்கியவன் போகிறதும் போகிறோம் கொஞ்சம் மானமரியாதையோடு மனைவியின் மூலமாக உயிர் பிச்சை வாங்கி போனவன் தான் அலெக்சாண்டர் இதையும் நான் சொல்லவில்லை கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் தான் சொல்லியிருக்காக .

ஆனா நம்ம்நாட்டில்
புருஷோத்தமன் என்ற போரஸ்
வீரத்தையும் சுதேசியத்தையும் கொச்சைபடுத்தும் விதமாய் பள்ளிக்கூடங்களில் சரித்திர நூல்களில் கூறியது ஆங்கிலேயர் சூழ்ச்சி

பாரத்தின் வரலாற்றை எழுதிய அன்னியர்கள்
நம் தாய்நாடு எப்போதும் வீழ்ச்சியே சந்தித்தாகவும்
ஆங்கிலேயர்கள் எப்போதும் வெற்றித்தாயின் திருவடியில் அமர்ந்து இருந்தது போலவும் நம் கல்விமுறையில் எழுதிவிட்டான்
அந்த விசமாயக்கம் நம்மை விட்டு நீங்காத்தால் அதே கல்விமுறையை பின்பற்றுகிறோம் உண்மை என்ன சற்று சிந்தியுங்கள் நீங்களே !

வந்தேமாதரம்


சீத்தாராமராஜூ

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


அவரை உயிரோடு காட்டிக் கொடுத்தாலோ ;
பிணமாக ஒப்படைத்தாலோ ரூபாய் 15,000 பரிசு வழங்கப்படும் "என பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் .1922-ம் ஆண்டு இது நடந்தது .
அன்று அவ்வளவு தொகை தர பிரிட்டிஷ் அரசு தயாரானது என்றால் எவ்வளவு தூரம் இவரைக் கண்டு பயந்திருக்கும் ஆங்கிலேய அரசு என்பதை நாம் யூகிக்கலாம் .ஆம் அவர்தான் இன்றையப் பதிவுன் நாயகன்.
சீத்தாராமராஜூ அவர்கள் .
ஆந்திர மாநிலம் ரம்பா வட்டாரத்தில் 1922-ல் இவரின் கிளர்ச்சி போராட்டம் ஆங்கிலேய அரசை அதிரவைத்தது .
இந்த கிளர்ச்சி போராட்டத்தில் இவரோடு பெருமளவு பங்கேற்றவர்கள் அவ்வட்டாரத்தின் மக்கள் ஆவர் .அவர்களுக்கு தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தியவர் தான் சீத்தாராம் ராஜூ இவர் நேர்மையான மனிதர் துறவிப் போன்று வாழ்ந்தவர் .அவ்வட்டாரத்தில் விவசாய மக்களில் சுமார் 300-இளைஞர்களை ரகசியமாக திரட்டிப் போர் பயிற்சி அளித்தார் .எனவே இவரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலை வைத்தது .எவரும் இவரைக் காட்டிக் கொடுக்க வில்லை .மக்கள் இவர் பக்கம் இருந்தனர் .
1922-செப்டம்பர் 23-ம் நாள் குஸ்ரிகாட் ராணுவ முகாம் மீது சீத்தாராம் தொண்டர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டனர் போக்குவரத்து'தந்தி 'என அனைத்து முழுமையாக தடைபட்டது .மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி இன்னொரு தாக்குதலை தொடுத்து கடோசி காவல் நிலையத்தை கைப்பற்றினர் இவர் .

ஆங்கில அரசு வெட வெடத்துப் போயினர் .பிறகு பீரங்கி படைகள் 'எண்ணற்ற இயந்திர துப்பாக்கி படைகள் எனப் பெரும் படைகளை வரவழைத்து அவ்வட்டாரத்தையே சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார் ஆங்கிலேயர் .ஆயினும் ஆறு மாதங்கள் சீத்தாராமை நெருங்க கூட முடியவில்லை ஆங்கிலேயர் படையால் இறுதியாக 1924-மே 7-ம் தேதி சீத்தாராம் ராஜூவை கைது செய்தனர் .விசாரணை ஏதுமின்றி உடனே சீத்தாராம் ராஜூவை சுட்டுக் கொன்றனர் இவரது சக போராளிகள் பலர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
அல்லூரி சீத்தாராம் ராஜூ ஆந்திர மாநிலத்தின் விடுதலைப் போராட்ட நாயக்கரானார் .

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றையப் பதிவிலே நாம் காணபோகும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ""வீறுமிக்க தமிழில் பேச்சால் பாமரர்களுக்கும் சமய 'அரசியல் விழிப்பூட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் . தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை நடத்தியவர் அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் இவர் நமது தர்மத்தை எடுத்துரைத்தவர்.
( சீர்திருத்தவாதிகள் ....சம்மான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாக காணோம் .இஸ்லாம் மதத்தை பற்றி கூறினால் அமததத்தைச் சேர்ந்தவர்கள் கண்ட இடங்களில் கூட்டமாக் கூடி இவர்களை தாக்க வருவார்கள் .
கிருஸ்தவதை பற்றி கூறினால் கிருஸ்தவ அரசு இவர்களை உள்ளே தள்ளி விடுவார்கள் .
இதனால்தான் சீர்திருத்தவாதீகள் அவைகளை விட்டுவிட்டு இந்து மதத்தை ஏகப்பொதுச் சொத்தாக எடுத்துக் கையாண்டு வருகிறார்கள் என 12-6-1949-அன்று தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மாநாட்டில் பேசினார் பசும்பொன் அவர்கள் !
தமது இளவயதிலேயே அரசியல் ஞானியாகவும் 'ஆத்மஞானியாகவும் விளங்கிய இவரைப் பற்றியும் விடுதலை போராட்ட காலத்தில் இவரின் பங்களிப்பையும் சற்றே சுருக்கமாக காண்போம் .( விரிவான வரலாறு வேண்டுவோர் சான்றோர்கள் எழுதிய நூல்களை வாங்கி படிக்கவும்.
முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார்.தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார்.இவரின் இளம் வயதிலேயே மறைந்தார் .இவர் பொதுவாழ்க்கைக்கு தனது 19ஆவது வயதில் 1927 ஆம் வந்தார் ஆண்டில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார்.அங்கு தான் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.ஆம் அப்போது
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு 4 நாளும் உறுதுணையாக தேவர் இருந்தார் இந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், தேவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.முதல் மேடை1933 ஆம் ஆண்டு.சாயல்குடியிலுள்ள விவேகானந்தர் வாசக சாலையில் நடந்த முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் சுமார் 3 மணி நேரத்திற்கு உரையாற்றினார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் சேதுராமன் செட்டியார் அவர்கள் ஆவார்
அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார்.1939-ஆம் ஆண்டு செப்டம்பர் .6 ஆம் தேதி மதுரை நகருக்கு வருகை தந்த நேதாஜியை வரவேற்று அன்று மாலை நடந்த ஊர்வலத்தில் இவர் செய்த சொற்பொழிவை கண்ட ஆங்கில அரசு அச்சம் கொண்டதே இவரின் பேச்சு திறமைக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்குதெய்வத்திருமகன்என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார் தேவர்.
சுதந்திர போராட்ட காலத்தில்
காங்கிரசில் காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவியது. திரிபுரா காங்கிரசில் காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார்.நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும்.அப்போது தான் காந்தி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச்சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இந்த தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் சென்றபோது வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். ஆம் விடுதலை போராட்ட காலத்தில் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார் இவர் வாழ்ந்த நாட்கள் 20,075,
அதில் சிறையில் இவர் கழித்த நாட்கள் 4.000 நாட்கள் ஆகும்.
தெய்வீக நம்பிக்கையும் தேசியப்பற்றும் கொண்டு
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக சீடராக விளங்கிய இவர்
1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்30 ஆம் நாள் அவரது 55-வது பிறந்த நாளன்று இயற்க்கை எய்தினார். சுதந்திரப் போராட்டத் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின்தலைமையில்பிரித்தானிய அரசசைஎதிர்த்தஇந்திய தேசிய இராணுவத்திற்குதமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
வந்தேமாதரம்