நண்பர்கள்

7 மார்., 2015

ஏன் ஹிந்துவாக வாழ வேண்டும்?

நன்றி
தாமரை நாயகி

1. மத சகிப்புத்தன்மையின், மத நல்லிணக்கத்தின் தூணாக விளங்குகிறது. வழிபடும் முறை வேறாக இருந்தாலும் வழிபடும் உருவம் வெவ்வேறாக இருந்தாலும் மக்கள் அனைவரும் வழிபடும் பரம்பொருள் ஒன்றே என்ற தத்துவம் உடையது. இதனால் எந்த இனத்தையோ, மதத்தையோ, உயிர்களையோ வெறுக்காமல் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

2. ஆதி அந்தம் இல்லாதது. எந்த தனி நபராலும் தோற்றுவிக்கப்படவில்லை.

3. மனிதனை ஆன்மீக வழியில் உயரச் செய்ய யோகா, பிராணாயாமம், தியானம், யாத்திரை போன்ற பல்வேறு ஆன்மீகப் பயிற்சிகளை உள்ளடக்கியது.

4. முழுமையான வழிபாட்டு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. எவரையும் இந்த வழியில்தான் வழிபட வேண்டும். இல்லாவிட்டால் நரகம் என்று பயமுறுத்தவில்லை.

5. நாத்திகனையும் ஏற்றுக்கொள்கிறது.பிற மதங்கள் நாத்திகர்களை வெறுக்கின்றன. கொலை செய்துள்ளன.

6. இதன் ஆன்மீக அடிப்படை காரணமாக பிற எல்லா மதங்களையும் விட ஏராளமான ஞானிகளையும், மகரிஷிகளையும், சித்தர்களையும், மகான்களையும் தந்து கொண்டேயிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கால அளவில் உலகிலேயே பெரும் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் எத்தனை மகான்கள் தோன்றியிருக்கின்றனர் என்று கணக்கிட்டு அவர்களுடன் நம் நாட்டில் தோன்றியவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பாருங்கள்.

7. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை போதிக்கிறது. எண்ணற்ற தெய்வங்களும் அவர்களுக்குரிய பிராணிகளையும், தாவரங்களையும் போற்றி பாதுகாக்க சொல்கிறது.

8. கலைகளிலும் இறைவழிபாட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு தெய்வத்தைக் கொண்டுள்ளது. (இசை-சரஸ்வதி, நடனம்-நடராஜர்)

9. சித்தர் பெருமக்கள் சித்த வைத்தியம், ஜோதிடம், சிற்பக்கலை போன்றவற்றை இந்து மத ஆன்மீக அடிப்படையில் உணர்ந்து உலகுக்கு அருளியுள்ளனர்.

10. மூடநம்பிக்கை என நீங்கள் கருதும் ஒன்றை நீங்கள் செய்யாமல் இருப்பதற்கு இந்து மதம் எந்த தடையும் சொல்லவில்லை. நீங்கள் கட்டாயம் அந்த செயலை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவதில்லை. கிறிஸ்தவமும் இஸ்லாமும் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் பின்பற்றச் சொல்கின்றன.

11. நம் கர்ம வினைகளுக்கேற்ப நம் இன்பங்களையோ துன்பங்களையோ அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று போதிக்கிறது. எனவே ஒரு செயலை செய்யும்போது அது பிறருக்கு துன்பம் தரக்கூடிய பாவமான செயலா என்று நாம் சிந்தித்து அவைகளிலிருந்து விலகி இருக்க கூறுகிறது.

12. ஒவ்வொருவரும் கணவன்-மனைவிக்கு பெற்றோர் - குழந்தைகளுக்கு பிள்ளைகள் - பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் போதிக்கிறது. பிரதிபலன் பாராமல் நம் கடமைகளைச் செய்ய கூறுகிறது.

13. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் (காலை எழுவது முதல் இரவு படுக்கைக்கு செல்லும்வரை) இறைவனை நினைக்கும்படி மந்திரங்களையும் செயல்களை செய்ய வேண்டிய முறைகளையும் கூறுகிறது. ஆனால் கட்டாயப்படுத்தவில்லை.

14. பிற மதங்களைப் போல் ஒரு சில புத்தகங்களில் அடங்கிவிடவில்லை. நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்கள், ஸ்மிருதிகள் , திருமுறைகள், பிரபந்தங்கள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது.

15. அத்வைதம், த்வைதம், விசிஸ்டாத்வைதம், சித்தாந்தம், வேதாந்தம் என ஏராளமான தத்துவங்களைக் கொண்டது. ஞான வழிகாட்டும் இத்தகைய தத்துவங்கள் பிற மதங்களில் இல்லை.

16. உடலையும், மனதையும் கட்டுப்படுத்த விரதங்களும், விழாக்களும் ஏராளமாகக் கொண்டுள்ளது. பவுர்ணமி, அமாவாசை, ஏகாதசி, செவ்வாய், வெள்ளிக்கிழமை விரதம், பிரதோஷம், கார்த்திகை விரதம் என மாதத்தில் பல நாட்கள் விரதங்கள் மேற்கொண்டு ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக