நன்றி. Thuladharan Kanna
சாத்திரங்கள் எந்தச் சாமியாரையும் நம்பச் சொல்லவில்லை. எந்தச் சாமியாரிடமும் அடிமையாக இருக்கச் சொல்லவில்லை. இருந்தும் நாம் வழிகாட்ட மாட்டானா என்று இறைவனிடம் கேளாமல் போலிச் சாமியார்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு வழிகாட்டுபவர்களைக் குருவாக ஏற்கலாம். ஆனால், கடவுளின் மறு அவதாரமாக அவர்களைப் பார்ப்பது நமது ஆன்ம முன்னத்தை கேள்விக்குறியாக்கும்.
நாம் சார்ந்திருக்கும் மதத்திற்கு இந்தப் போலிச் சாமியார்கள் களங்கமென்றால், மிகப் பெரும் களங்கம் அவர்களை நம்பும் மக்கள் கூட்டம் தான்.
சாத்திரங்களை நம்புங்கள், கலைகளை நம்புங்கள். சொல்பவர்களை நம்ப வேண்டும் என்பதில்லையே.
துறவி என்பவன் முற்றையும் முற்றிலும் துறந்தவன்.
பணத்தைத் துறக்காத எந்தச் சாமியாரையும் என்னால் காண முடியவில்லை.
பங்காரு, ஜக்கி, நித்தி, பால்தினகரன், மோகன் சி லாசரஸ் என ஏகப்பட்ட சாமியார்கள் பணத்தில் புரண்டு கொண்டிருக்கிறார்கள்.
நெஞ்செலும்பு தெரிய சுயத்தை ஒடுக்கிக் கொண்டு, உண்மை ஞானத்தை அடைய விரும்புபவனே உண்மையான துறவி..
நான் பார்க்கும் சாமியார்க்ள அனைவரும் தொப்பை பெருத்தவர்களாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு ஆன்மிக அறிவை வைத்துக் கொண்டு பெரும் மக்கள் கூட்டத்தை தவறாக வழிநடத்திச் செல்கிறார்கள்.
எந்த மதச் சாமியார்களையும் நம்பாமல் நம் முன் சாத்திரங்களை மட்டுமே நம்பி, அவற்றை ஆராய்ந்து நமக்கும் கடவுளுக்கும் நேரடியான தொடர்பை வைத்துக் கொள்வதே உண்மையான ஆன்மிகம்...
சிந்திப்போமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக