நண்பர்கள்

17 டிச., 2015

வீர சாவர்கர்

ஹிந்துத்துவம் என்ற சொல்லை உலகிற்கு பிரபலமாக்க, ஹிந்துத்துவம் என்ற புத்தகம் எழுதி, யார் ஹிந்து என்பதை வரையறுத்து ஹிந்துத்துவ கருத்துக்கு பிதாமகர் ஆன வீர சாவர்க்கர்

1) மனுஸ்மிருதி குறித்தும்,
2) தீண்டாமை குறித்தும்,
3) ஆலயத்தில் பூஜை செய்யும் தகுதிகளை குறித்தும் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

அனைத்து ஹிந்துக்களையும் அர்ச்சகர்கள் ஆகும் செயல்திட்ட்த்தை முதன்முதலில் முன்வைத்தவர்கள் திராவிட அமைப்புகளோ அல்லது பொரியாரோ அல்ல.

சுதந்திரவீர விநாயக தமோதர சாவர்க்கரே அதற்கான செயல்திட்டத்துக்கு 1929 இல் அடிக்கல் இட்டார்.

இன்று திராவிட இயக்கத்தவர் தாம் செய்த்தாக உரிமை கோரும் பல முற்போக்கு செயல்களை வெறுப்பு இல்லாமல் செய்த முன்னோடி சமூக சீர்திருத்தவாதிகள் இந்துத்துவர்களே ஆவார்கள்.

பிறப்படிப்படையிலான புரோகிதர்கள் தேவைப்படாத இந்து திருமண சட்டத்தை ஹிந்துத்துவரான நாராயண் பாஸ்கர் காரேயே முதலில் கொண்டு வந்தார்.

ஹிந்துத்துவரான ஹர்பிலாஸ் சாரதாவே குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஸ்வதந்திரவீர விநாயக தாமோதர சாவர்க்கர் (28-05-1883 முதல் 26-02-1966) ஒரு பயமற்ற சுதந்திரப் போராட்டவீரர்; சமூக சீர்திருத்தவாதி; எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; வரலாற்றாசிரியர்; அரசியல் தலைவர்; தத்துவவாதி எனப் பல திறமைகள் கொண்டவர்.

சாவர்க்கரின்கருத்துக்களை பார்க்கலாம்.

1) மனுஸ்மிருதி குறித்து:

சாவர்க்கர் மனுஸ்மிருதி குறித்த தனது கருத்துக்களை 1933 முதல் 1935 வரையிலான காலகட்டத்திலும், பின்பு 1956லிம் விரிவாக கூறியுள்ளார்.

1933ல் கணேக்ஷ் உத்சவத்தின்போதும், நவராத்திரியின்போதும் 9 நாட்கள் மனுஸ்மிருதி குறித்து உரையாற்றியுள்ளார்.

"மனுஸ்மிருதியில் பெண்கள்" என்ற தலைப்பில் 4 கட்டுரைகள் 1933ல் எழுதினார். அவை முற்போக்கு மராத்திய மாத இதழான "கிர்லோஸ்கரில்" பிரசுரமானது. மற்றொரு கட்டுரையும் இதே கருத்துடன் 1937ல் பிரசுரமானது. 'எது சரியான சனாதன தர்மம்" என்பது அது.

சாவர்க்கரின் கருத்துக்களை சுருக்கமாக கூறுவதென்றால்,

"மனுஸ்மிருதி கூறியபடி வாழ்வது இக்காலத்தில் சாத்தியமில்லை. ஏனெனில் காலம் மாறிவிட்டது; அதன் கருத்துக்கள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை அல்ல."

1936ல் சாவர்க்கர் கூறியது, (ஸம்கர சாவர்கர் வங்மய, தொகுதி-3, பக்-641) "தற்போதைய பிறப்பு அடிப்படையிலான சாதியும், சமூக ஏற்றத் தாழ்வும் ஒழிந்தால்தான் சமூகப் புரட்சி ஏற்படும். இது இந்து தேசம் எழுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும், உன்னத வளர்ச்சி அடைவதற்கும் அவசியம். அந்த கொடிய நச்சு மரம் அழியும்போது அதில் படர்ந்த கொடிகளும் தன்னாலேயே அழிந்துவிடும்"

ஒருமுறை சாவர்க்கர் தனது தொண்டர்களிடம் கூறினார் "நான் நடுக்கடலில் குதித்த ஆங்கிலேயர்களிடமிருந்து தப்ப முயற்சித்ததைக் கூட நீங்கள் மறக்கலாம்; ஆனால் சமூக சீர்திருத்தம் குறித்த எனது கருத்துக்களை மறக்க கூடாது"

2) தீண்டாமை குறித்து:

"தாழ்த்தப்பட்ட என சொல்லப்படும் மக்கள் பொது நீர்நிலைகளை பயன்படுத்துவதும், கோவில்களில் நுழைவதும் முற்றிலும் நியாயமானது; யாராலும் தடுக்க முடியாது. அனைத்து புண்யதலங்களும், கோவில்களும், வரலாற்று இடங்களும் மற்ற அனைத்து இந்துக்களுக்கும் என்ன விதிப்படி அனுமதிக்கப்படுகிறதோ, அவ்வாறே ஜாதி வேறுபாடின்றி இவர்களுக்கும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று எழுதியுள்ளார். JATYACHCHEDAK NIBANTH- ESSAYS ON ABOLITION OF CASTE, SAMAGRA SAVARKAR VANGMAYA(SSV), 3:480.

1920ல் அந்தமான் சிறையில் இருந்து எழுதிய ஒரு கடிதத்தில் "அந்நிய ஆட்சியை இந்துஸ்தானத்திலிருந்து அகற்ற நான் போராடுவதைப் போல, ஜாதி ஏற்றத் தாழ்வு, தீண்டாமையை எதிர்த்து உறுதியாக போராடுவேன்" என எழுதினார்.

1924ல் "நான் உறுதியாக நம்புகிறேன்; தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதை எனது மரணத்திற்கு முன் பார்ப்பேன் என்று."

"இறந்த எனது உடலை தாழ்த்தப்பட்ட மக்களுடன், பிராமணர்களும், பனியாக்களும் இணைந்து தூக்க வேண்டும். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும்" என்றார்.

1941ல் 'சமூக சீர்திருத்தம், சமூக ஒற்றுமை செய்யப்படாத சுதந்திரம் வீணாகி விடும்' என அறிவித்தார். (balarao savarkar, akhand Hindustan ladhaa parva or the battle for undivided Hindustan, veer savarkar prakashan, 1976, p-202)

3) வேத சடங்குகளை செய்ய அனைவருக்கும் உரிமை:

"வேத சடங்குகளை வாசிக்கவும், கற்றுக் கொள்ளவும், விரும்பினால் அதை தானே செய்யவும் அனைத்து இந்துக்களுக்கும் உரிமை உள்ளது. பூஜாரி உரிமை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இந்து பூஜாரிக்கான தகுதிகளை அடைந்த எந்த இந்துவும் பூஜாரியாகலாம்." (1935, ஜத்யுச்செடக் நிபந்த, ஸம்கர சாவர்கர் வங்மய, தொகுதி-3, பக்-480).

ரத்னகிரியில் 'பதித பாவன மந்திர்' என்ற கோவிலைக் கட்டி எல்லா ஹிந்துக்களும் சாதி வேறுபாடுகள் இன்றி இன்றும் வழிபாடு நடத்த செய்தவர் வீரசாவர்க்கர்.

ஹரிஜன சமுதாயத்தை சேர்ந்தவரை அர்ச்சகர் ஆக்கிய முதல் இந்திய அரசியல் தலைவர் வீர்சாவர்க்கர்தான்.

அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு "சமூக சமத்துவத்தைப் பொறுத்தவரையில் பழமைவாதத்தை மிகக் கடுமையாக எதிர்த்து போராடிய விசயத்தில் சாவர்க்கருக்கு இணையாக டாக்டர் அம்பேத்கர் தவிர வேறு யாருமில்லை. " என்றது

திருக்குறளுக்கு மேலும் ஒரு மகுடம்

Pugal Machendran Pugal
நாடாளுமன்றத்தில் திருக்குறள்....

தமிழகத்தின் அதிமுக,திமுக நிகழ்த்தாதை நிகழ்த்திய பாஐக ....

திருக்குறள்களில் தேர்ச்சி பெற்ற 133 குழந்தைகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று, பார்லிமெண்ட்டில் அவர்களை, குறள்கள் சொல்ல வைத்து, அதை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையெல்லாம் கேட்க வைத்து, திருக்குறளை இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழி பெயர்ப்போம் என்று அறிவித்து, அந்த குழந்தைகளையும், மூன்று தமிழ் ஆர்வலர்களையும் கௌரவப் படுத்தினார்கள் பிஜேபி அரசாங்கம்..!

Centre Wellல் குழந்தைகள் உட்கார்ந்து சொல்ல, MPs சுற்றி அமர்ந்து கேட்க, நம் தமிழின் பெருமையாம் திருக்குறள் பார்லிமெண்ட்டில் எல்லாப் புறமும் கணீரெண்றொலிப்பதைப் பார்க்க மிகப் பெருமையாய் இருந்தது..!

திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் வானளாவிய பெருமை சேர்த்து விட்டார்கள் என்பதில் ஐயமே இல்லை..!

ஒரு காலத்தில் காங்கிரஸ் தமிழகத்தில் கோலோச்சியது..! பின்பு தி.மு,க..! அதற்கு பின் அ.தி.மு.க..!

பல நேரங்களில் இவர்கள் ஒவ்வொருவரும் டெல்லியில் மிக சக்தி வாய்ந்த நிலையில் இருந்தார்கள்..! ஆனால், ஒருவருக்கு கூட இதை செய்யத் தோன்றவில்லை, முடியவில்லை..!

ஆனால், இங்கே தமிழகத்தில் இன்னும் எவனுமே மதிக்காத பி.ஜே.பி அரசாங்கம் டெல்லியில் செய்கிறது..!

மூன்று ஆர்வலர்களில் ஒருவரான வைரமுத்து சொல்கிறார்: "இப்படி தமிழுக்கு பெரும் மரியாதை கிடைப்பது இதுதான் முதல் தடவை..!

அவர் மனதில் 'தன் வழிகாட்டுதலின்படியே நடக்கிறது..' என்று போன காங்கிரஸ் ஆட்சியில் கலைஞர் சொல்வாரே, ஏன் அவர் முயலவில்லை..?' என்ற எண்ணம் ஓடியிருக்குமா..? ஓடியிருந்தாலும் வெளியே சொல்வாரா என்ன..?

பெருமைப்படுத்தப்பட்ட சிறுவர்களில் ஒருவன் சொன்னான்: "எங்களுக்கு இப்படிப்பட்ட பெருமை திருவள்ளுவரால் கிடைத்தது..!.. திருவள்ளுவருக்கு நன்றி..!"

நான், 'என்னது..? இது சரியில்லையே..! தமிழன் யாராவது நன்றி என்று சொல்ல வேண்டுமானால் அது அந்த ஒருவருக்குத்தானே சொல்ல வேண்டும்..?' என்று நினைத்துக் கொண்டே பார்க்க, அந்தக் கூட்ட்த்தில் அ.தி.மு.க எம்பிக்கள் யாரையுமே காணும்..!

இன்னமும் 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க இரண்டில் ஒன்றுதான்… பி.ஜே.பிக்கெல்லாம் இங்கே இடம் கிடையாது..' என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமா தமிழர்கள் நாம்..?

நன்றி Shankar Rajarathnam

பகவத்கீதை

சஞ்ஜயன் கூறினான்
மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அனுகிப் பின்வருமாறு கூறினான்
                 பகவத்கீதை 1:2

ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப்பாருங்கள்
                      பகவத்கீதை 1:3

அந்த சேனையில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான வில்லாலிகள் பலரும் இருக்கின்றனர்: யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.
                       பகவத்கீதை 1:4

மேலும் திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர்வீரர்கள் பலரும் உள்ளனர்.
                       பகவத்கீதை 1:5
வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் உள்ளனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்
                  பகவத்கீதை 1:6

ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்துகொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதிவாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.
                       பகவத்கீதை 1:7

மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியார்,அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்வரன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே
                  பகவத்கீதை 1:8

எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்தத்தில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்
                பகவத்கீதை 1:9

பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கமுடியாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே
                      பகவத்கீதை 1:10

பகவத்கீதை

திருதராஷ்டிரர் கூறினார்,
சஞ்ஜயனே, போர்புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?
           பகவத்கீதை 1:1

9 நவ., 2015

கங்கா ஸ்னானம் ஆச்சா

நன்றி Raman Iyenga

கங்கா ஸ்னானம் ஆச்சா ......
தீபாவளி தினத்தன்று காலை ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கேட்கும் முதல் கேள்வியே, "என்ன...கங்கா ஸ்னானம் ஆச்சாப'' என்பதாகத்தான் இருக்கும். அதாவது அன்று புனித கங்கையில் நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பது ஐதீகமாகும்.
ஆனால் எல்லாராலும் புனித கங்கைக்கு சென்று நீராடுவது என்பது இயலாத காரியமாகும். அதனால் தான் தீபாவளி தினத்தன்று எல்லா நீர்நிலைகளிலும் கங்கை ஐக்கியமாவதாக நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.
அன்று வெந்நீரில் கங்கையை நினைத்து நீராடினாலே புனித கங்கையில் குளித்த புனிதமும் புண்ணியமும் கிடைத்துவிடும். தீபாவளி தினத்தன்று கங்கையாக பாவித்து நாம் நீராடுவதால் எல்லா தோஷங்களும் நீங்கும். நம் உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சித் தோன்றும்.
அதோடு செல்வத்தையும் செல்வாக்கையும் இந்த நீராடல் பெற்றுத்தரும். அதனால் தான் யுகங்கள் கடந்தும், தீபாவளி திருநாளில் மட்டும், கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்கும் வழக்கம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
கங்கையில் நீராடுவது என்பது எந்த அளவுக்கு புண்ணியம் தர வல்லது என்பதை சிவபெருமானே ஒரு சம்பவம் மூலம் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். ஈசன் செய்த அந்த சம்பவம் வருமாறு:-
ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம் சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள். இந்த நாளில் இரண்டு புண்ணிய வான்களையாவது பார்க்க வேண்டும்'' என்றார். அதற்கு விசுவநாதர் "சரிவா'' போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.
நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு புண்ணியவான்கள்தான் என்னைக்காப்பாற்ற முடியும் என்றும் சொல்லு'' என்றார். கங்கைக்கரை, பழுத்த சுமங்கலியாய் விசாலாட்சி கரையில் நிற்கிறாள்.
பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுவநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார். "என் புருஷனை யாராவது காப்பாற்றுங்கள்'' என்று குரல் கொடுக்கிறாள் அன்னை. நீர் கொள்ளாத மனிதத் தலைகள்.
சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே எனத்தவிக்கின்றனர். "ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும்.
பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கிமாள்வார்கள்'' என்றாள் பார்வதி பலர் பின் வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள். "நீங்கள் இருவரும் பாவமே செய்த தில்லையா?'' என்று கேட்டாள் அன்னை "தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது.
என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை என்றிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்துக்கு முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு சாகலாம் பாருங்கள்'' என்றான் ஒருவன்.
இரண்டாமவன், அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்'' என்றான்.
இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர். "தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?'' என்றார் சதாசிவன்.
"என்னை மன்னியுங்கள்! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப்புனிதமானவள்.
தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்'' என ஒப்புக்கொண்டாள் அன்னை. அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.

3 நவ., 2015

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் பற்றிப் பார்ப்போம்

சிவமயம் சிவாயநம

1. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

2. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

3. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

6. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

7. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

8. காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

9. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி ( கெட்டவிசயம்) தெரியாது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

10. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

11. சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

12. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

13. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்துக்  கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

14. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று  கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

15. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

16. அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

17. யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

18. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

19. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

20. சிங்கத்தின்  குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

21. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

22. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

23. எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீனான மனிதன் ஆவான்.

24. மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

25. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

26. கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

27. வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

28. பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

29. வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்தூய்மை வராது.

30. கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கிச்  செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களையும் தர்மங்களையும்  செய்யுங்கள்

திருச்சிற்றம்பலம்

22 அக்., 2015

அக்ஷ்பகுல்லாகான் & சசீந்திரநாத் சன்யால்

சச்சீந்திரநாத் சன்யால் காசியில் வசித்து வந்த வங்காளி. விவேகானந்தர் அரவிந்தர் வழியை பின்பற்றிய புரட்சியாளர். ஆன்மீகமும் புரட்சியும் ஒன்றே என்று எண்ணியவர். 1912-18ஆம் ஆண்டுகளில்'அனுசீலன் சமிதி' என்ற புரட்சி இயக்கக் கிளையை உத்திரப் பிரதேசத்தில் தொடங்கி வைத்தவர்.

தேசபக்த வீரரான ராக்ஷ் பிகாரி போஸின் சீடர்.
1919ல் முதல் உலகப் போரில் பிரிட்டன் வெற்றி கண்டதை அடுத்து இந்திய சிறையிலிருந்த அரசியல் கைதிகள் பலர் விடுதல் செய்யப்பட்டனர். அவர்களில் சன்யாலும் ஒருவர். 'பந்தி ஜீவன்' என்ற அவரது நூல் வங்காள இளைஞர் அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட புரட்சி இலக்கியம்.

இளைஞர்களின் மனக் குமுறலை அறிந்த சன்யால் 'ஹிந்துஸ்தான் குடியரசுச் சங்கம்' (HINDUSTAN REPUBLIC ASSOCIATION) என்ற அமைப்பை காசியில் தொடங்கி பல துடிப்பான இளைஞர்களையும், மாணவர்களையும் தயார்படுத்தினார்.

அதே சமயம் வங்கப் புரட்சியாளர் இருவர் காசிக்கு வந்து 'கல்யாண் ஆசிரமம்' என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தை நிறுவி புரட்சி இயக்கப் பணிகளை நடத்தி வந்தனர்.

அவர்கள் மன்மதநாத் குப்தா, அவரது தம்பி மன்மோகன் குப்தா. மேலும் அதில் ராம்நாத் பிஸ்மில், அக்ஷ்பகுல்லாகான், போன்றோரும் இருந்தனர். அதில் 20 வயது சந்திரசேகர ஆசாத்தும் உண்டு.

'புரட்சிக்காரன்' என்ற 4 பக்க பத்திரைக்கை ஒன்றை ரகசியமாக அச்சடித்து நாடெங்கும் அனுப்பினார் சன்யால். அதில்,

"இந்தியாவின் வீர இளைஞர்களே! சுதந்திரம் என்பது சும்மா வராது. புதிதாக ஒரு குழந்தையைப் பெற தாய் மரண வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்."

"புதிய சுதந்திர நாடு பிறக்க வேண்டுமெனில் அதற்கு விலையாக இரத்தம் சிந்தியே ஆக வேண்டும். அவசியமானால் நமது இன்னுயிரையும் தர வேண்டும்."

"அகிம்சையும், கோழைத்தனமும் நிச்சயம் கோழைத்தனத்தை பெற்றுத் தராது. வீரமும் தியாகமுமே பெற்றுத் தரும்."

"புரட்சிக் காரர்கள் வெறும் பயங்கரவாதிகளோ குழப்பக்காரர்களோ அல்ல. சுயநலம் அற்ற தேசநலம் ஒன்றையே பெரிதாக மதிக்கும் ஆண்களும், பெண்களுமாக சில ஆயிரம் பேர் தங்கள் உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கிவிட்டால் வலிமை மிக்க ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை ஒரு நொடியில் வங்கக் கடலில் தூக்கி எறிந்து விடலாம்"

மன்மதநாத் குப்தாவின் முயற்சியால் கல்யாண் ஆசிரம புரட்சியாளர்களும், ஹிந்துஸ்தான் குடியரசு சங்கத்தினரும் சன்யால் தலையில் ஒன்றாக செயல்பட முடிவெடுத்தனர். உத்திர பிரதேசத்தில் மட்டும் 23 கிளைகள் தொடங்கப்பட்டன.

புரட்சி வேலைகள் அதிகரிக்க அதிகரிக்க பணம் தேவைப்பட்டது. அரசாங்க பணத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது. 09-08-1925ல் லக்னோவிலிருந்து சகாரன்பூர் ஊருக்கு செல்லும் 8 வது பாசஞ்சர் வண்டியில் கொண்டு வரப்படும் பணத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது. வெற்றிகரமாக பணமும் கைப்பற்றப்பட்டது.

20-09-1925ல் கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து சன்யால், மன்மதநாத் குப்தா, ராம்பிரசாத் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்திரசேகர ஆசாத், அக்ஷ்பகுல்லாகான் ஆகியோர் தலைமறைவாயினர்.

இவர்கள் மேல் மேலும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்கு நடக்கும்போதே ஆசாத் தவிர இதர புரட்சியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

புரட்சியாளர்கள் சார்பில் பண்டிட் கோவிந்த வல்லப் பந்த் (பிற்காலத்தில் மத்திய உள்துறை அமைச்சர்), சி.பி.குப்தா (பிற்காலத்தில் உ.பி. முதல்வர்), கலிக்குஸ்ஸமான் போன்றோர் ஆஜராயினர்.

18 மாதங்களாக நடந்த இவ்வழக்கில் 06-04-1927ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அக்ஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங், ராஜேந்திரநாத் லஹரி ஆகிய நால்வர்க்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

மன்மதநாத் குப்தாவிற்கு 14 ஆண்டு சிறை, சன்யால், ஜோகேஸ் சந்திர சட்டர்ஜி உள்ளிட்ட ஐவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

17-12-1927ல் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி ஆகியோர் கோரக்பூர் சிறையிலும், 19-12-1927ல் அலகாபாத் சிறையில் தாக்கூர் ரோசன் சிங்கும், பைசாபாத் சிறையில் அக்ஷ்பகுல்லாகானும் தூக்கிலிடப்பட்டனர்.

அக்ஷ்பகுல்லாகான் தான் தூக்கிலிடப்படும்போது ஒரு கையில் புனித நூலான திருக்குரானையும் தனது புரட்சியாள நண்பர்கள் நினைவாக ஒரு கையில் பகவத் கீதையையும் வைத்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்ன் பாலபாரதி வெளியிட்ட 'அக்ஷ்பகுல்லாகானின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

"இந்த பத்தான் தேசபக்தர், தூக்குக் கயிறை, வாயில் அல்லாவின் நாமத்துடன் முத்தமிட்டார். இரும்பு உடலும், எஃகு உறுதியும் கொண்ட இந்த இளைஞர் தன் அனைத்தையும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்தார்.

'இறைவன் எனக்கு நீதி அளிப்பான்' என அமைதியாகக் கூறிய அந்த இளைஞனின் தெளிவான பிரார்த்தனை தூக்கு மேடையில் தெளிவாக ஒலித்தது. 'லா இல்லாஹி இல் அல்லாஹ், முகமது உர் ரசூல் அல்லா'. தூக்கு கயிறு இறுக்கப்பட்டது. அக்ஷ்பகுல்லாகான் என்றும் அழியா மகாத்மாக்களின் வரிசையில் ஒருவரானார்

15 அக்., 2015

முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை - 12–10–2015—நமது பித்ருக்கள் நம்மை ஆசிர்வதிக்கும் நன்நாள்...... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.

அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.

அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்...
மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங் களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படு கிறது.

இது பிதுர் தேவதைகளுடைய திருப்தி யின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை சிறப்பு வாய்ந்ததாகும்.

தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன்களைச் செய்வது சாலச்சிறந்தது.

சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலஷேத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.

தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படு கிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங் களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபாவசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார் களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.

A.P.VidyaMani,
AstroAnalyst & Gemologist
9943394405

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
Mohan Raj

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -

யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -

அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "

(சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
> Mohan Raj
>
> மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.
>
> இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -
>
> யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -
>
> அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "
>
> (சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

நன்றி Satheesh T

இந்த உலகிற்க்கு
முதன்முதலில் அறுவை
சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள்
'இந்துக்கள்'
அறுவை சிகிச்சையின் தந்தை
சுஸ்ருதர் (காலம் கி.மு. 600)
...
சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
மருத்துவமாமேதை. இவர்
ரிஷி விஸ்வாமித்திரருக்குப்
பிறந்தவர். உலகின் முதல்
அறுவை சிகிச்சை கலைக்
களஞ்சியமான "சுஸ்ருத
சம்ஹிதையை" மனித
சமுதாயத்திற்க்கு
வழங்கியவர். மயக்க மருந்து
அறிவியல் மற்றும்
பிளாஸ்டிக் சர்ஜரியின்
தந்தையாகப்
போற்றப்படுபவர்.
.
இவர் தமது சுஸ்ருத
சம்ஹிதையில், பன்னிரண்டு
விதமான எலும்பு
முறிவுக்கும், ஆறு விதமான
மூட்டு நகர்வகளுக்கும்
உண்டான மருத்துவ
முறையை விளக்கிருக்கிறார்.
125 விதமான அறுவை
சிகிச்சை கருவிகளை
உபயோகப்படுத்தியுள்ளார்.
இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண
சிகிச்சைக்கான
சிறிய கத்திகள், இரட்டை
விளிம்பு கத்திகள், வடிக்கும்
ரப்பர் குழாய் மற்றும்
மலக்குடல் சீரமைப்புக்
கருவிகள் போன்றவை
விலங்கு மற்றும்
பறவைகளின் தாடை
எளும்புகளில் இருந்து
வடிவமைக்கப்பட்டவை.
.
இவர் மேலும் பல்வேறு
தையல்
முறைகளைப்பற்றியும்
விளக்கியுள்ளார்.
குதிரையின் முடி,
மரப்பட்டைகளின் இழை,
நரம்பு போன்றவற்றை
நூலாக்க்
கொண்டு தைத்திருக்கிறார்.
சுஸ்ருத சம்ஹிதையில், 300
விதமான அறுவை
சிகிச்சை முறைகள்
விளக்கப்பட்டுள்ளன.
ஆச்சார்யர் சுஸ்ருதர்,
மருத்துவ
உலகின், குறிப்பாக அறுவை
சிகிச்சையின் மாமேதை
என்று
போற்றப்படுகிறார்.

பிரதோஷ விரத மகிமை

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

19 செப்., 2015

திருவேட்களம், சிதம்பரம் ----------------------------------------

தேடிதரிசித்த திருதலங்கள்

'கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.'
-திருநாவுக்கரசர்

சோழ நாட்டு வடகரை காவிரித் தலங்களில் இரண்டாவதான இத்தலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. கோயிலின் அருகே மட்டுமல்ல, வாசலிலும் காய்கறிச் சந்தை அமைந்திருக்கிறது. ஆனால், கோயிலுக்குள் நுழைந்து விட்டால், சந்தையிரைச்சல் ஏதுமின்றி அமைதி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள கோயில் சுமார் 1910 வாக்கில் கானாடுகாத்த செட்டியார் என்பவரால் அமைக்கப்பட்டதாகும்.

தலபுராணம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முதலாவது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம்.
அம்மன் சன்னதியில் அர்ஜுனன் தவம் குறித்த சிற்பங்களைக் காணலாம்.

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அனைத்து அஸ்திரங்களையும் கரைகண்ட அர்ச்சுனன், இறுதியாகப் பாசபத அஸ்திரம் வேண்டி சிவபெருமானைத் தொழுதிருந்தான்.

அப்போது, அவனைச் சோதிக்க முக்கண்ணன் அனுப்பிய பன்றியானது வில்லாளனின் தவத்திற்கு இடையூறு செய்ய, சினமுற்ற விஜயன் அதைத் துரத்த, அது கையில் அகப்படாமல் ஓடியவண்ணமே இருக்க, வெகுண்ட பார்த்திபன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.

அதே கணம், அங்கு தோன்றிய வேடனொருவன் அது தனது பாணத்தால் வீழ்ந்தது என்று சாதிக்க, வாய்ச்சணடை கைச்சண்டையாக முற்றி அர்ச்சுனனம் தன் வில்லால் வேடன் மண்டையில் ஓங்கியடிக்க, அந்த நொடியில் வேடன் உரு மறைந்து அங்கே சாம்பசிவன் நின்றிருந்தான். அர்ச்சுனனின் தவத்தைப் போற்றி, சங்கரன் அவனுக்கு பாசுபத அஸ்திரத்தையும் அருளினான். அத்தகைய புகழ் பெற்ற தலமாகும், அள்ளாமலை நகரில் அமைந்துள்ள திருவேட்களம் என்னும் இத்திருக்கோயில்.

இங்கு நடராசன் முருகனாகவும், வேலன் முக்கண்ணனாகவும் தோன்றி அருள் பாலித்தனர் என்பர்.

மூலவரின் பெயர் பாசுபதீஸ்வரர்.
தாயாரின் திவ்யநாமம் சற்குணாம்பாள். அழகு தமிழில் நல்லநாயகி.

திருஞான சம்பந்தர் இங்கிருந்துதான் சிதம்பர ஆடல்வல்லானை தரிசித்தார் என்பர்.
அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றதாகும் இததலம்.

தலச்சிறப்பு

சூரியனும் சந்திரனும் அருகருகே அமைந்துள்ல இக்கோயிலில், சூரிய சந்திர கிரகண காலங்களில் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

வில்லாளனுக்கு அஸ்திரம் அளித்த பெருமான் சொல்லாடலிலும் குறைகளைப் போக்குவார் என்று புகழ் பெற்றார். பேச்சுக் குறைபாடு உள்ளோர் இங்கு பிரசாதமாக வழங்கப்படும் மண் உருண்டையை உண்டால், தங்கள் குறை நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.

தலப்பண்

கல்லாலே அடித்தவனும் சொல்லால் அடித்தவனும்
பல்லாண்டு வாழ்த்தியேதம் பிறவிக்கடன் தீர்த்தவனாம்
வில்லாலே அடித்தநல் விஜயனுக்கும் அருளீந்தான்
இல்லையொரு பெம்மான் அவன்போலே இவ்வுலகில்

ஓம் நமச்சிவாய!

15 செப்., 2015

பிரதோஷ விரத மகிமை

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

4 செப்., 2015

நேதாஜி

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...



;;தோமாரா இ லாகியா கலங்கோர் போஜ்ஜா ,,
பஹிதே ஆமாரா ஸூக் ""

இது நேதாஜி மண்டலாய் சிறையிலிருந்தப் போது தென் கல்கத்தா சேவக சமிதியின் உபகாரியதரிசி அநாதபந்து தத் என்பவருக்கு 1926-டிசம்பர் மாதம் எழுதியுள்ள கவிதை வரிகள் இதன் பொருள்

"" உன் பொருட்டு இந்தக் களங்கச் சுமையை வகிப்பதே எனது இன்பம் '' என்பதே ஆகும் !

வெறும் வார்த்தைச் சொல்லாடல் மட்டுமல்லாமல் .களங்கம் கஷ்டம் எதையும் பொருட்படுத்தாமல் பாரத நாட்டை விடுதலை செய்யத் தமக்கென தனிப்பாதை வகுத்தது அதில் தம்மையே அர்ப்பணம் செய்து கொண்டவர் இன்றைய பதிவில் நாம் படிக்கப் போகும் நேதாஜி' என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!' என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம் பாரத விடுதலைப் அடைய இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள "பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்" தொடங்கினார். பின்னர், 1913ல் "கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்" தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு "கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்" சேர்ந்த அவர், "சி.எஃப் ஓட்டன்" என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், "ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்" சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்', சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நடந்த தாக்குதலே , வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
சுதந்திர போராளி
நேதாஜி
'தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது' எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. "கொல்கத்தா தொண்டர் படையின்" தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.

சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் "சுயாட்சிக் கட்சியை" தொடங்கியது மட்டுமல்லாமல், "சுயராஜ்ஜியா" என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்தியின் முடிவை, 'தவறு' என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், "நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை" என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், 'நேதாஜி' (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே "பட்டாபி சீதாராமையாவை" நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி காந்தியின் நிர்ப்பந்தத்தால் காங்கிரஸ்லிருந்து தானாகவே வெளியேறி பார்வர்ட் பிளாக் என்று தனிக்கட்சி கண்டார் .

'பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்' என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. 'இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது சிறையில் இவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க துவங்கினார் எனவே ஆங்கில அரசு இவரை வீட்டுக் காவலில் வைக்க முடிவு செய்தது வீட்டுக் காவலில் இருந்த சுபாஷ் நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவெடுத்தார் ஆம்
"" அயல் நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கிருந்து தமது போராட்டத்தை துவங்குவது என அந்த நாளில் இவர் வீட்டைச் சுற்றி புகழ்பெற்ற ""ஸ்காட்லாண்ட் யார்டு '' எனும் புகழ்பெற்ற துப்பறியும் போலீசார் இருந்தனர் அப்போதுதான்
பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்' என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார் வீட்டுக் காவலில் இருந்து நேதாஜி தப்பிய செய்தி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இடியாகவும் பாரத மக்கள் மனதில் தேனாகவும் விழுந்தது

ராஷ் பிகாரி போஸ்ஸின் சுதந்திர இந்திய ராணுவம் மீண்டும் துவங்கியது

1941 ஆம் ஆண்டு "சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் "வான் ரிப்பன் டிராபின்" உதவியுடன் சிங்கப்பூரில் "ராஷ் பிகாரி போஸ்" தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே "இந்திய தேசிய ராணுவப்படையை" கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு "இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை" "ஜெய் ஹிந்த்" என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பாரதம் விடுதலையடைந்தது

போஸ் மரணம் குறித்த சர்ச்சை

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
அதேவேளை இனியாவது
நேதாஜியின் மாயமானதன் மர்மம் குறித்து
விசாரணை நடத்த வேண்டும் என நினைக்கிறேன்

Shivanianantham Yadav's photo.
Shivanianantham Yadav's photo.

பூலித்தேவர்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...



கூண்டுக்கிளியாகப் பழமும் பால்சோறும் உண்டுகொழுத்து வாழ்பவன் அல்ல !
விடுதலை என வீறு கொண்டு எழுந்து வெள்ளையருக்கு ஏதிராக வீரவாள் சுழறிய மாவீரர்களில் ஒருவர் பூலித்தேவர் அவரைப்பற்றி சற்று சுருக்கமாக இன்றைய பதிவில் காண்போம்
ழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.பூலித்தேவருக்குபன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல்எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் வீரமிக்கவர்களான மறவர்கள் இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர்.வாழ்க்கைஇவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன்பூலித்தேவர்ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால்பூலித்தேவரைஎல்லோரும்புலித்தேவர்என்றே அழைத்து வந்தனர்.காத்தப்ப பூலித்தேவரின்திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள்கயல்கண்ணிஎன்கின்றஇலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர்சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்குகோமதி முத்துத் தலவாச்சி,சித்திரபுத்திரத் தேவன்மற்றும்சிவஞானப்பாண்டியன்என்று மூன்று மக்கள் பிறந்தனர்.பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில்,பால்வண்ணநாதர்கோயில், வாசுதேவநல்லூர்அர்த்தநாரீசுவரர்கோயில், நெல்லைவாகையாடி அம்மன்கோயில் மற்றும் மதுரைசொக்கநாதர்கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும்பூலித்தேவர்திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.விடுதலைப்போராட்டத்தில் பங்கு1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்துஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.பூலித்தேவனும் இராபர்ட்கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.1755ஆம் ஆண்டுகர்னல் கீரோன்(கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டுகப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை
விரட்டினார் [அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டுகேப்டன் பௌட்சன்வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் சூழ்ச்சிக்கும் பெயர் பெற்றவனுமாகியகான்சாகிப்வால்பூலித்தேவரைஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள்போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
அன்னியர்களை எதிர்த்து பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.அந்த சூழலில் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின்உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிடஆரம்பித்தனர்.பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் கூட நம் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சிஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது.உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர்.ஹிந்துவாய் பிறந்த பின்னர் நாளடைவில் மதம் மாறியவன் தான் இந்த யூசப்கான் கடந்த பதிவிலேயே நாம் கண்டோம் மாவீரன் அழகுமுத்துக் கோனை சூழ்ச்சியால் வென்று பீரங்கி வாயிலாக கொன்றதை கண்டோம் இவன் ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் பதவி ஆசைக்காக பூலித்தேவரையும் கடுமையாக எதிர்த்தான் !

1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.-------
தொடரும் மீதி அடுத்த பதிவில்

Shivanianantham Yadav's photo.

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...



1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் போர் நடந்தது பத்தாண்டுகளாய் நடைபெற்ற நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.அதற்குப்பின்ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர்.1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர்.இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும்பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் அது சாத்தியமாகவில்லை பின் குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர்.அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர்.ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார்.தப்பி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மறைந்து கொண்டார்.பின்னர்1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போராகும்இவரின் படையில் ஒண்டிவீரன் பகடை , வெண்ணிக் காவடி போன்ற வீரர்கள் இருந்துள்ளனர் அதேவேளை பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.ஒன்று இவர் தப்பிச் சென்றாலும் இவர் உயிரைகுறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் இவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் ,அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழசோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால்"பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில்உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.அதேவேளை மற்றொருகருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம்என்றும் நம்பப்படுகின்றது
இவரின் நினைவாக இவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு இவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.நாளையப் பதிவில் சுதந்திர போராட்ட வீரர் மங்கள் பாண்டே

Shivanianantham Yadav's photo.

மாவீரர் மங்கள் பாண்டே

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றைய பதிவிலே நாம் காணும் மாவீரர் மங்கள் பாண்டே வங்கசேனை என்ற படைப் பிரிவில் இருந்த வீரர் .

மங்கள் பாண்டே 29-3-1857 லில் பாரக்பூர் எனும் இராணுவ முகாமில் அன்னியர்களுக்கு ஏதிராக கலகக் கொடியை உயர்த்தினார் .ஹென்சன் என்ற வெள்ளைகார மேஜர் இந்த மங்கள் பாண்டேவைச் சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டப் போதும் அங்கிருந்த இந்திய சிப்பாய்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர் .அதேவேளை மங்கள் பாண்டே மூன்று வெள்ளை சிப்பாய்களைக் கொன்று வீழ்த்தினார் எனினும் இறுதியாக இந்த சண்டையில் பாண்டே படுகாயமடைந்தர் பிறகு மங்கள் பாண்டே மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1857-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-நாள் தூக்கிலிட்ப்பட்டார் .

நமது பாடப் புத்தகத்தில் தேச விடுதலை வீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரர்களில் மங்கள் பாண்டேவும் ஒருவர் !

நாளையப் பதிவு வ.உ.சிதம்பரனார் பற்றியது நன்றி

வந்தேமாதரம்

Shivanianantham Yadav's photo.

வ.உ.சிதம்பரனார்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றைய பதிவில் நாம் படிக்கப் போகும்வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி சொன்னால் பாட்டுக்குப் பாரதியார் பேச்சுக்கு சிதம்பரம் பிள்ளை என்பார்கள் !தென்னாட்டுத் திலகர் என்றும் 'வ. உ. சி' என்று அழைக்கப்பட்டார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார்.அவருக்கு, புரட்சி மனப்பான்மையும்,ஆங்கிலேயருக்கு எதிராக இவரது துணிச்சலான தன்மையே இவருக்கு 'கப்பலோட்டிய தமிழன்' என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், 'தமிழ் ஹெல்ம்ஸ்மேன்' என்று கூறுகின்றனர். 'கப்பலோட்டிய தமிழன்' என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக இவரின் பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் 5.9.1872ல் பிறந்தார்.இவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள்ஒருவர். வ.உ.சிதம்பரனார்திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, சட்டப்பள்ளியில்சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்துசட்டத்தொழிலில், மிகச் சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தார்இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரவிந்த்கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.இதேபோல் , வ.உ.சிஇந்தியா சுதந்திரம் பெறுவதற்காக இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின்ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட இவர், நவம்பர் 12, 1906ல், 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை' நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான "எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்", சக சுதேசி உறுப்பினர்களான அரவிந்த் கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. இவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி', பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தைல மேலும் குறைத்தார்.கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.மேலும், பயணிகளுக்கு இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றதுஇதன்பின் திருநெல்வேலியிலுள்ள 'கோரல் மில்ஸ்' தொழிலாளர்களின்ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்குஎதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று இவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். இவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்இவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.வ.உ.சி.சிறையில் இருந்த அந்நாட்களில், கடின உழைப்பில் ஈடுபட்டார். இதனால்இவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் இவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால்,டிசம்பர் 12, 1912 அன்று இவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது, இவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், இவர் விடுதலை செய்யப்பட்டார்.அதேவேளை 'பாரிஸ்டர் பட்டம்' இவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், இவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் இலக்கியத்திலும்இவர் ஒரு சிறந்தவர் புதுவையில் அரவிந்தரை இவர் சந்தித்தப் போது 27-மொழிகளில் பத்திரிகை நடத்தி சுதந்திர கிளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என சொன்னார் எனினும் அது நிறைவேறவில்லை வ.உ.சி. சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கி 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அதேவேளை ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், இவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார் .செல்வ சீமானாய்வாழ்ந்தவர்தான் தனது இறுதி காலத்தில் நோய்க்கு மருந்து பெறக் கூட காசின்றி 1936-நவம்பர் -18 அன்று இறந்து போனார்.சுதந்திரத்திற்கு பின்னர், இவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் 'வ.உ.சி போர்ட்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.செப்டம்பர் 5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை இவரின் பெயரில் வெளியிட்டது கோயம்புத்தூரிலுள்ள 'வ.உ.சி பூங்கா' மற்றும் 'வ.உ.சி மைதானம்' மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.அதேவேளை கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக இன்று கோவை சிறை வளாகத்தில் உள்ளே ஒரு 'நினைவுச்சின்னம்' இவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு 'வ.உ.சி பாலம்' என பெயரிடப்பட்டதுநாளையப் பதிவில் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியதுவந்தேமாதரம்

Shivanianantham Yadav's photo.

வ.உ.சிதம்பரனார்

வ.உ.சிதம்பரனாரின் வாழ்வில் முக்கியமான அரசியல் நிகழ்வுகள்

1905ல் வ. உ.சி அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார்இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங ் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ.சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.
அதேவேளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவன் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில்,"இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை.அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினான் அதேவேளை தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.தவிர விடுமுறையும் கிடையாது. அவர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். அவர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி கூறினார் வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: 1. கூலிஉயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள்மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார்.நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ளஅனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களின் ஆதரவுடன் . வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரப்படுத்தினார் .மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள்.இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது.1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். பிறகு அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. யோசிச்சுப் பாருங்கள் அது தொழிற்சங்கங்கள் இல்லாதஒரு காலம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும்வெற்றி பெறச் செய்தார். கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். ஸ்ரீஅரவிந்தர்இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதியுள்ளார்
வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். இவர் "சுதேசி பிரச்சார சபை","தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றில் இவரது பங்கு அதிகம் இருந்தது!இதுபோன்ற சரித்திர சம்பவங்கள் வ.உ.சிதம்பரனாரின் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஆகும்

Shivanianantham Yadav's photo.

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...


இன்றையப் பதிவில் நாம் பார்க்கப் போவது வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைப் பற்றி அதேவேளை பாளையகார்கள் எல்லோரும் பிரிட்டிஷ்ராரோடு கூடிக்குலவியவர்கள் என்றோ அல்லது எப்போதும் எதிர்த்துப் போராடியவர்கள் என்றோ ஒற்றை வரியில் கூறுவது கடினம் .ஏனென்றால் கட்டபொம்மன் பாட்டனார் பிரிட்டிஷ் கும்பினியாரிடம் சமரசமாக இருந்தவர் .அதேவேளை எட்டப்பனின் மூதாதையர்கள் கும்பினியாரை எதிர்த்துள்ளனர் !

ஆம் இரு பாளையத்தைச் சேர்ந்தவர்களும் எப்போதும் எதிர் எதிர் நிலையையே மேற்கொண்டு வந்துள்ளனர் .இதில் இப்போது நாம் காணப்போகும் வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டவர்
சுதந்திர போராட்ட செய்திகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 'வீரபாண்டியன்' என்றும், 'கட்டபொம்மன்' என்றும், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்றும், 'கட்டபொம்ம நாயக்கர்' என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாற்றை இன்று சற்று சுருக்கமாக பார்போம்
ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார்.இவர் மனைவி ஆறுமகத்தமாள் இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் பிறந்தவரே இன்றைய பதிவின் நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் இவரது இயற்பெயர் 'வீரபாண்டியன்' ஐந்துகுழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். இவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்ட), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.இவர் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததது அதேவேளை திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவன் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
அவர்களிடம் பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவன் கலெக்டராகப் பதவியேற்றான் . ஆங்கிலேய ஆதிக்கத்தில் அவர்களுக்கு கட்டபொம்மனும் இலக்காக இருந்தார் . கட்டபொம்மனுக்கு பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் அவர்கள் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரையும் அப்போது ஒருவர் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் இவரைக் கைது செய்தனர்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு "எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடத்தினேன்" என்று முழங்கியவாறு தூக்குமேடையேறிய ஏறினார் அப்போது
இவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது.
ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன்
இவரது வரலாறு '' கட்டபொம்மன் கூத்து "" மற்றும்
கட்டபொம்மு கதைப் பாடல்கள் என மக்களிடையே இன்றும் இடம்பெற்றுள்ளது . 1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், சக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தமிழக அரசின் முயற்சியாக தோன்றின.அங்கு நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள்,அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடுஅரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வந்தேமாதரம்