Pugal Machendran Pugal
நாடாளுமன்றத்தில் திருக்குறள்....
தமிழகத்தின் அதிமுக,திமுக நிகழ்த்தாதை நிகழ்த்திய பாஐக ....
திருக்குறள்களில் தேர்ச்சி பெற்ற 133 குழந்தைகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று, பார்லிமெண்ட்டில் அவர்களை, குறள்கள் சொல்ல வைத்து, அதை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களையெல்லாம் கேட்க வைத்து, திருக்குறளை இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழி பெயர்ப்போம் என்று அறிவித்து, அந்த குழந்தைகளையும், மூன்று தமிழ் ஆர்வலர்களையும் கௌரவப் படுத்தினார்கள் பிஜேபி அரசாங்கம்..!
Centre Wellல் குழந்தைகள் உட்கார்ந்து சொல்ல, MPs சுற்றி அமர்ந்து கேட்க, நம் தமிழின் பெருமையாம் திருக்குறள் பார்லிமெண்ட்டில் எல்லாப் புறமும் கணீரெண்றொலிப்பதைப் பார்க்க மிகப் பெருமையாய் இருந்தது..!
திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் வானளாவிய பெருமை சேர்த்து விட்டார்கள் என்பதில் ஐயமே இல்லை..!
ஒரு காலத்தில் காங்கிரஸ் தமிழகத்தில் கோலோச்சியது..! பின்பு தி.மு,க..! அதற்கு பின் அ.தி.மு.க..!
பல நேரங்களில் இவர்கள் ஒவ்வொருவரும் டெல்லியில் மிக சக்தி வாய்ந்த நிலையில் இருந்தார்கள்..! ஆனால், ஒருவருக்கு கூட இதை செய்யத் தோன்றவில்லை, முடியவில்லை..!
ஆனால், இங்கே தமிழகத்தில் இன்னும் எவனுமே மதிக்காத பி.ஜே.பி அரசாங்கம் டெல்லியில் செய்கிறது..!
மூன்று ஆர்வலர்களில் ஒருவரான வைரமுத்து சொல்கிறார்: "இப்படி தமிழுக்கு பெரும் மரியாதை கிடைப்பது இதுதான் முதல் தடவை..!
அவர் மனதில் 'தன் வழிகாட்டுதலின்படியே நடக்கிறது..' என்று போன காங்கிரஸ் ஆட்சியில் கலைஞர் சொல்வாரே, ஏன் அவர் முயலவில்லை..?' என்ற எண்ணம் ஓடியிருக்குமா..? ஓடியிருந்தாலும் வெளியே சொல்வாரா என்ன..?
பெருமைப்படுத்தப்பட்ட சிறுவர்களில் ஒருவன் சொன்னான்: "எங்களுக்கு இப்படிப்பட்ட பெருமை திருவள்ளுவரால் கிடைத்தது..!.. திருவள்ளுவருக்கு நன்றி..!"
நான், 'என்னது..? இது சரியில்லையே..! தமிழன் யாராவது நன்றி என்று சொல்ல வேண்டுமானால் அது அந்த ஒருவருக்குத்தானே சொல்ல வேண்டும்..?' என்று நினைத்துக் கொண்டே பார்க்க, அந்தக் கூட்ட்த்தில் அ.தி.மு.க எம்பிக்கள் யாரையுமே காணும்..!
இன்னமும் 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க இரண்டில் ஒன்றுதான்… பி.ஜே.பிக்கெல்லாம் இங்கே இடம் கிடையாது..' என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோமா தமிழர்கள் நாம்..?
நன்றி Shankar Rajarathnam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக