~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பாகுபாடு இந்து மதத்தில் மட்டும் இருப்பதாக நினைப்பது தவறு, எல்லா மதங்களிலும் இருப்பதாக எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தில் உள்ளபடி, மீனாட்சிபுரம் கிராமத்தில், ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து பல கீழ்ஜாதி குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. மதம் மாறிய குடும்பங்கள் இஸ்லாம் மதத்திற்குரிய வழிபாடுகளையும், மதப் பழக்கவழக்கங்களையும் நெறி தவறாமல் கடைபிடிக்கின்றனர். ஆனாலும் மதம் மாறியவர்களின் பெண் பிள்ளைகளுக்க்கு திருமணத்திற்க்காக வரன் பார்க்கும் போது அங்கேயும் ஜாதீ தீ தலைவிரித்தாடுகிறது. "நவ் முஸ்லிம்கள்" என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை. திருமண வயதை கடந்து பல ஆண்டுகளாகியும் கன்னியாக காலத்தை தள்ளும் நிலைக்கு உள்ளாகும் பல இஸ்லாமிற்கு மாறிய பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற உண்மையை வெளி உலகிற்கு எடுத்து சொல்கிறது இந்த புத்தகம்.
மதம் மாறிய கருப்பாயி என்ற பெண் நூர்ஜஹான் தனது தந்தைக்கு எழுதும் கடிதம் நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. "மதங்கள் மனிதர்களின் பாதையை வேண்டுமானால் திசை மாற்றலாம், ஆனால் பயணங்கள் ஒன்று தான்" என்னும் வரிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
--------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக