பரமபூஜினிய ஸ்ரீ குருஜி கூரியது .....
இந்த தாய்நாடு நமது அன்னை. அவள் ஷக்தி வடிவமனவள். ஆதிசக்தி, உலகத்திற்கே தாயாக விளங்குபவள். வெறும் கல் மண் அல்ல. ஆகவே அவளை வழிபடுகின்றோம். இவள் நம்முடைய வணங்கத்தக்க தெய்வமாக இருக்கின்றாள் !!!
பரமபூஜினிய ஸ்ரீ குருஜி கூரியது .....
இந்த தாய்நாடு நமது அன்னை. அவள் ஷக்தி வடிவமனவள். ஆதிசக்தி, உலகத்திற்கே தாயாக விளங்குபவள். வெறும் கல் மண் அல்ல. ஆகவே அவளை வழிபடுகின்றோம். இவள் நம்முடைய வணங்கத்தக்க தெய்வமாக இருக்கின்றாள் !!!
> சுவாமி மலை, தஞ்சாவூர்
> ----------------------------------------------------------------------------------------------
> 'கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
> தருமா கடப்ப மைந்த தொடைமாலை
> கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
> கருணா கரப்ர சண்ட கதிர்வேலா
> வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
> முடியான துற்று கந்து பணிவோனே
> வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
> மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி
> அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
> னருளால ளிக்கு கந்த பெரியோனே
> அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
> ணருளே தழைத்து கந்து வரவேணும்
> செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
> படிதான லக்க ணிங்க ணுறலாமோ
> திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
> திருவேர கத்த மர்ந்த பெருமாளே.'
> - அருணகிரி நாதர்
>
> தமிழ்க்கடவுளான முருகப்பெம்மான் ஆறுபடைவீடுகளுள் ஒன்றான சுவாமி மலை தஞ்சையிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இரு நகரங்களிலிருந்தும் பஸ் வசதி கோயில் வரை உண்டு. திருவேரகம் என்ற புராணப் பெயர் கொண்ட இத்திருத்தலத்திற்கு அருகில் திரு புள்ளம் பூதங்குடி மற்றும் திரு ஆதனூர் என்னும் வைணவ திவ்யதேசங்கள் இரண்டு அமைந்துள்ளன. சுவாமி மலைக்கு வெகு அருகிலேயே திருவலஞ்சுழி என்னும் தென்க்ரைத் தேவாரத் திருத்தலமும் அமைந்துள்ளது. இவற்றை அடுத்தடுத்துக் காணலாம்.
>
> தலபுராணம்
>
> முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஞான வடிவாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்டிர் அணைத்து வளர்த்த கந்தன் ஒரு முறை படைப்புக் கடவுளான பிரமனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டு, அவர் பதில் கூறாதிருக்கவே அவரைச் சிறையிலிட, இதனால் தேவர்களும், இந்திரனும் சிவபெருமானிடம் முறையிட்டனர். எம்பெருமான் தன் பிள்ளையிடம் அம்மந்திரத்திரத்திற்கான பொருளை உரைக்கும்படி தன் மடியில் வைத்துக் கொண்டு வினவ, அவரது காதில் ஓம் எனும் மந்திரத்தின் பொருளை உணர்த்தினார் கார்த்திகேயன். தந்தைக்கே மந்திரம் சொன்னவர் என்பதால், பிள்ளையே சுவாமி ஆயினன். சுவாமிக்கே நாதன் என்றானதால் சுவாமி நாதனும் ஆயினன். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனும் ஆனான்.
>
> ஞானத்தின் முன்னால் தகப்பன் மகன் என்ற உறவு கூடப் பெரிதல்ல என்பதை உணர்த்துவதே இத்தல புராணம்.
>
> சுவாமிநாதர் என்றும் சுப்பையா என்றும் அழைக்கப் பெறும் வேலவன் இங்கு வள்ளி தெய்வயானை சமேதனாகக் காட்சி தருகிறான்.
>
> மூலஸ்தானத்தில் முருகப் பெம்மானின் பீடம் ஆவுடையாகவும், அவர் பாண லிங்கமாகவும் அமைந்திருப்பதாக ஐதீகம். இதன் காரணமாக, இங்கு கதிர்வேலன் சிவ ரூபமாக விளங்குகிறான் என்று சொல்வர்.
>
> இங்கு கோயிலை அடையக் கடக்க வேண்டிய அறுபது படிகள், அறுபது தமிழ் வருடங்களைக் குறிக்கும் என்று சொல்வர்.
>
> தலச்சிறப்பு
>
> குருமலை, குருகிரி என்னும் பெயர்களும் கொண்ட இத்தலம் கல்வி, கேள்வியிற் சிறந்து விளங்கவும், பரிபூரண ஞானமடையவும் வழிபடவேண்டிய கோயிலாகும்.
> தந்தை மகன் உறவில் பிணக்குகள் தீர இது நிவர்த்தித் தலமாகும்.
> ஹரிகேதன் என்னும் அரக்கனை வென்ற தலமாதலால், இது சத்ரு சம்ஹாரத் தலமுமாகும். ஜாதகத்தில் ஆறாமிடமான மறைமுக சத்ருக்கள் ஸ்தானத்தால் அவதியுறுவோர் இங்கு மயில்வாகனனைப் பணிந்து மனதில் அமைதி பெறலாம்.
>
> தலப்பண்
>
> எப்போதும் புத்திமதி பிள்ளைக் கியம்பிடுவான்
> அப்பனென் றூரார் அறிந்ததை மாற்றியிவன்
> தப்பாது ஓங்கா ரமுரைத்தே தானானான்
> அப்பனாய் சாமிமலை ஆங்கு.
>
> ஓம் சரவணபவ!
Sabari Manickam
மகர ஜோதி மலையில் தெரியும் ஜோதி .....
நமக்கு ஒரு வருடம் என்பது சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் பூமியில் 24 மணி நேரம் ஒரு நாள் என நாம் கணக்கிடுகிறோம் அல்லவா? சூரிய குடும்ப என்ற நம் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றிவருவதை குறிக்கும். அதாவது பூமி தன்னை தானே சுற்றினால் நமக்கு ஒரு நாள்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வந்தால் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் தானே? வானவியல் (astronomy) இக்கருத்தை ஒத்துக்கொள்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது சைடீரியல் டைம் என கூறுகிறார்கள்.
சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் என உருவகப்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் ஒரு நாள் நமக்கு ஒருவருடம் ஆகிறது. தேவர்களின் இந்த ஒரு நாள் இரவு பகல் என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? நமக்கு 12 மணி நேரம் பிரிப்பதை போல இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என கூறலாம். இத்தகைய தேவர்களின் இரவு பகல் என்பதையே உத்திராயணம், தட்ஷிணாயனம் என்கிறோம்.
நம் நாள் எப்படி சூரிய உதயத்திலிருந்து துவங்குகிறதோ அது போல உத்திராயணம் என்ற தேவர்களின் பகல் சூரியன் குறிப்பிட்ட நிலைக்கு வருவதால் துவங்குகிறது. ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில் 6 ராசிகள் பகல் வேளையும் 6 ராசிகள் இரவு வேளையும் குறிக்கும். பகல் வேளையை குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.
மகர ராசியில் சூரியன் நுழைந்து உத்திராயண காலத்தை துவக்கும் வேளையை மகர ஜோதி என்கிறார்கள். இது மகர ராசியில் ஜோதி சொரூபமாக இருக்கும் சூரியனை குறிப்பதாகும். இதை தவிர்த்து காந்த மலை என்ற இடத்தில் தெரியும் ஜோதி , அதிசயம் அற்புதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மகர சங்கிரமம், மகர ஜோதி என்பது சூரியனின் நிலையையும், உத்திராயண காலத்தையும் குறிக்குமே தவிர மலையில் தெரியும் ஜோதியை அல்ல.
மலையில் தெரியும் ஜோதி இயற்கையாக தெரியும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயமே...!
பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..!
திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதை போல சபரிமலையிலும் தை மாதம் ஒன்றாம் தேதி (உத்திராயண ஆரம்பம்) கோவில் நிர்வாக குழுவினரால் ஜோதி ஏற்றப்படுகிறது. இது எனது கருத்து மட்டுமே. நீங்கள் இது இயற்கையாக இறைவனே ஜோதியாக வருகிறான் என நினைத்தீர்கள் என்றால் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!
திருப்பதி அதிசயம், சமய புரம் அதிசயம் என வதந்தியை கிளப்பிவிடும் நபர்கள் தான் இது போன்ற வதந்தியையும் துவக்கி இருக்க வேண்டும். ஆன்மீக யோகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ளே தான் அதிசயம் நடக்க வேண்டுமே தவிர வெளியே அல்ல...!
48 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து எளிமையாக வாழ்ந்து இறைவனை காண செல்லும் பொழுது ஜோதி வெளியே தெரிய வேண்டுமா அல்லது உள்ளே தெரிய வேண்டுமா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...!
நன்றி ஒம்கார்சுவாமிகள்...
நமது சாஸ்திரங்கள் கடலை ஆணாகவும், நதிகளை பெண்ணாகவும் போற்றுகின்றன. பெண் மென்மையானவள். அனைவரையும் அரவணைத்து, அந்தக் குடும்பத்தார் அனைவரின் நலனுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவள். சூரியனால் கடல் நீரானது நீராவியாகி, மேகங்களின் வாயிலாக மழையாகப் பெய்து, அவை நதிகளின் மூலம் ஊர்மக்கள் பயனடைய வளைந்து மெலிந்து ஓடி, கடைசியில் கடலிலேயே நதிகள் சங்கமிக்கின்றன. இது போன்று பெண்ணானவள் ஒரு குடும்பம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து, புரிந்துகொண்டு, தியாகம் செய்து வாழ்கிறாள். அவள் எவ்வளவு தியாகம் செய்திடினும், முடிவில் தனது கணவன் இன்னார், இன்னாரின் மனைவியே தான் என்பதிலேயே பெருமை கொள்கிறாள். வளர்ச்சிக்கு வித்தாக பெண்களும் நதிகளும் விளங்குவதினால். நதிகள் கங்கா, காவிரி, யமுனா என்று பெண்பால் சொற்களாலேயே சிறப்பிக்கப்படுகின்றன. உலகம் இன்று இருப்பது பெண்களால்தான்! அதுபோன்று, நதிகளே ஒரு தேசத்தை உயர்ந்ததாக ஆக்குகின்றன. பெண்கள் இணைந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு வளர்ச்சி என்பது போன்று. நதிகள் அனைத்தும் இணைந்தால் நமது நாடும் வளம்பெறும்.
Rajesh RK > ''Kootan Choru''(கூட்டாஞ்சோறு)
சிகரெட் இல்லாமல் ஒருவரால் வாழமுடியும்...ஆனாலும், சிகரெட் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.
மதுவில்லாமல் ஒருவரால் வாழமுடியும்...ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.
மொபைல் இல்லாமலும் ஒருவர் வாழமுடியும்...ஆனாலும், மொபைல் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.
உணவில்லாமல் எவரும் வாழமுடியாது!...ஆனாலும், உணவு உற்பத்தியாளர்களான விவசாயிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர் இன்னமும் ...!
Puradsifm
நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும். பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகு பதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகிய பதம் வந்தவுடன் இறக்க வேண்டும். ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.
இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்கு பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும். பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாட்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். காய கல்பமாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.
நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாக்காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாக தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்த வேண்டும். நீர் சுண்டி சருகு போல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்து விட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.
நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.
ஹிந்துத்வா கிருஷ்ண ஸ்ரீ
சிவபெருமான், தனது மூன்றாவது விழியை பெண்ணான பார்வதியிடமிருந்தே பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மூன்றாவது கண் இருந்த இடம் ஆக்ஞை சக்கர மையம் என்றும், உணர்வு மையம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் பெற்ற மூன்றாவது விழி, சிவபெருமானின் ஆற்றலை மேலும் அதிகரித்தது. தன்னுடைய ஆக்ஞை ஆற்றல் முழுவதுமாக சிவபெருமானிடம் கொடுத்துவிட்டார். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள். என்னே, உயர்ந்தவன் பார்வதிதேவி ! சிவபெருமான், தன்னிடம் சரணாகதி அடைந்த பார்வதிதேவியின்மூன்றாவது விழிச் சக்கரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நெற்றியில் திலகமிட்டார்.
அந்தத் தூண்டுதலால், பார்வதிதேவி மாறாத உறுதியான பெண்மைத்தன்மை குறையாத ஆன்மிகப்பாதையை அடைய வழி செய்தார். சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்புடன் அவரைப் பின்பற்றி மிகவும் அதிக சக்தி வாய்ந்தவளாக பார்வதிதேவி திகழ்ந்தாள். பெண்ணின் மூன்றாம் ஆக்ஞை சக்கரம் ஆற்றல் பெற்றுவிட்டால் அவள் சரணாகதி அடையமாட்டாள் என்பதை உணர்ந்தே சிவபெருமான் இதைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. பெண் துணிச்சலுடன் தனித்து நிற்பது, சாதாரணமாகக் காணப்படும் நிகழ்வு இல்லை. பெண்ணுக்குப் பற்றிக்கொள்ள இன்னொரு கை வேண்டும் ; சாய்ந்துகொள்ள இன்னொரு தோள் வேண்டும்; யாராவது அவளை வழிநடத்திச் செல்ல வேண்டும். இதில் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். பெண்ணின் நெற்றியில் இடப்படும் வட்டத் திலகமானது, அதை அவள் நெற்றியில் இட்ட கணவரிடம் மாறாத, உறுதியான தொடர்பு கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.
கணவனின் ஆழ்ந்த தொடர்புடன் வட்டத் திலகத்தை அவள் சரியான இடத்தில் அணிந்துகொண்டால், அவள் அவனைப் பின்பற்றி நடப்பாள். அவள் பெண்மையும் பாதிக்காது. அவளின் ஆக்ஞை மையம் தூண்டப்பெறும். அவள், கணவனுக்கு எதிராகச் செல்லமாட்டாள். அதேசமயம் அவள் மற்றவரைவிட அதிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்வாள் ! தன் நெற்றியில் வட்டக் குங்குமம் இட்ட கணவனிடம் மட்டுமே மனோவசியம் செய்யப்பட்டவர்போல் பந்தப்பட்டு விடுகிறாள். அவளது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்த தன் கணவன் கிசுகிசுத்தாலும் தன் உணர்வு பெறுகிறாள். மற்றவரின் உரத்த குரல்கூட அவள் காதில் விழாது. அவள் தன் கணவனைச் சரணடைகிறாள். அவளது பெண்மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது.
திலகம் என்பது, மிகுந்த ஆழமான கருத்து கொண்டது. சரியான இடத்தில் சரியான பொருள் கொண்டு சரியானவர் வைக்கவேண்டும். குங்குமம் அல்லாத வேறு பொருட்களுக்கு எந்தவித நன்மதிப்பும் அறிவியல் ஆதாரமும் இல்லை.
அவை வெறும் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே வைப்பதாகும். திலகம் என்பது, மிகுந்த ஆழமான, அறிவியல் பூர்வமான பூரண பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியது. பெண்கள், இந்தத் திலகம் எனும் பொட்டை முதல்முதலின் தன் தாயின் வழியாகவும், இரண்டாம் நிலையில் கணவனால் மட்டுமே இட அனுமதிக்கப்பட வேண்டும். வேறு யாரும் தன் நெற்றியில் இட அனுமதிக்கக் கூடாது. இன்று பெண்கள் போலிச் சாமியார்களிடமும், கபடநாடக வேடதாரிகளிடமும்தன்னை அறியாமலேயே இந்தப் பொட்டு இடும் நிலையில் மயக்கப்படுகின்றனர். இதில் பெண்கள் மிக மிக விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். அம்பாள் கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமம் - பெண்ணின் மூன்றாம் விழிச் சக்கரத்தை நினைவுபடுத்துவதுடன் தன் கணவனை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்துகிறது. அம்பாளான பார்வதிதேவி, கற்பகாம்பாள், மூகாம்பிகை, சாரதாம்பாளுக்குகுங்குமத்தாலேயேஆராதனைசெய்யப்படுகின்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். நெற்றித் திலகம் என்பது தனக்குள் பிரத்தியேகமான அறிவியல் ஆழத்துடன் மறைந்திருக்கும்உண்மை என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து மாசில்லா மகத்துவத்தைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்,,
Vinodh Akkalraj
வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும் அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், "எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?" என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார்.
ஒரு ஜென் குருவைப் பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். "ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர்; அவரிடம் பாடம் கற்றால், மனம் தெளிவாகும்… வாழ்வு எளிதாகும்" என்றெல்லாம் சொன்னார்கள். மிக்க ஆவலுடன் அவரைத் தேடிப் போனார். அவர் காலில் வீழ்ந்து வணங்கி, "ஐயா… ஜென் தத்துவத்தை எனக்கு விளக்க வேண்டும்…' என்றார்.
'ஜென் தத்துவம் என்றால்…' என்று தொடங்கிய குரு, 'நீ போய் சிறுநீர் கழித்துவிட்டு வா…' என்றார். வந்தவருக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. எரிச்சலாகவும் இருந்தது. 'என்ன மனிதர் இவர்…? இவரைப் போய் மிகப்பெரிய ஆள் என்கிறார்களே… அடிப்படை நாகரிகம் தெரியவில்லையே… எனக்குத் தேவை என்றால் நான் போய்க்கொள்ள மாட்டேனா… இவர் ஏன் இதைச் சொல்கிறார்… மிகப்பெரிய தத்துவ ஞானங்களைச் சொல்வார் என்று நம்பி வந்தால், படிப்பறிவு இல்லாதவரைப் போல் நடந்து கொள்கிறாரே…' என்றெல்லாம் மனத்துக்குள் சலித்துக் கொண்டவர், வேறு வழியின்றி எழுந்து போய் விட்டு வந்தார்.
'புரிந்ததா…?' என்றார் குரு. 'இதில் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது…' என்பதைப் போல அவரைப் பார்த்தார் வந்தவர்.
'அரசனோ, மிகப் பெரிய அறிஞனோ, அல்லது ஒன்றும் தெரியாத முட்டாளோ, ஊரையே விலைக்கு வாங்கும் அளவுக்குப் பணக்காரனோ, அல்லது அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவனோ, எவராக இருந்தாலும், இப்போது நீ போய் செய்துவிட்டு வந்த வேலையைச் செய்யாமல் இருக்க முடியுமா? எல்லோரும் மனிதர்கள். எல்லோரும் சமமானவர்கள்.
அப்படி இருக்கையில் மனிதர்களுக்குள் வேறுபாடு என்பது எப்படி இருக்க முடியும்?
'அது மட்டுமல்ல… நான் உன்னைச் செய்யச் சொன்னது அற்பமானது தான். ஆனால், அது எவ்வளவு முக்கியமானது…..? உனக்கு, நீதான் போய் அந்த வேலையைச் செய்ய வேண்டும்… எனக்கு நான் தான் போக வேண்டும். அதிகாரிக்காக, அவனுடைய வேலைக்காரனையோ, பணக்காரனுக்காக ஓர் ஏழையையோ அனுப்ப முடியுமா? எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும் அவரவர் வேலையை அவரவர்தான் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையைத் தடுக்காமலும் இருக்க வேண்டும்.' வந்தவர் வாயடைத்துப் போய்விட்டார்.
மிக ஆழமான கருத்துக்களை, இந்தக் கதை நமக்கு விளக்கிவிடுகிறது. மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை; அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். அதற்கு மற்றவர் தடையாக இருக்கக்கூடாது. இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருக்கும் சூழலைக் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது?
ஹிந்துத்வா கிருஷ்ண ஸ்ரீ
இந்து மதம் மிகத் தொன்மையானது.
இது ஆதிகாலத்தில் வாழ்க்கையுடன் இணைந்து இயல்பான வாழ்க்கை முறையாகவே இருந்ததால் இதற்கு ஒரு பெயரே ஏற்படவில்லை. அதற்கு மாற்றாக மற்றொன்று இருந்தால் தானே பெயர் தேவைப்படும்!
பெயர் வந்த விதம்:
பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று.
கோட்பாடுகள்:
இயல்பாக விளைந்த ஒன்றை கோட்பாடுகள், விதிமுறைகள் என்று கட்டம் கட்டும் முயற்சி பின்னர் நடந்தது. இன்றைய இந்து மதத்தை ஒரு வரியில் சொல்லுவதாக இருந்தால் 'வேதத்தை நம்புபவர்கள்' என்று சொல்லலாம். இவர்களது விதிமுறைகள் என்று ஆரம்பித்தால் ஒரு வரியில் சொல்வதானால் 'எல்லாமே' என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஒரு வரியிலோ அல்லது ஒரு பக்கத்திலோ கூட சொல்லுவது கடினம்.
ஆரம்பம்:
இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள்,சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.
இயல்பு:
பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.
கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை.மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.
எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன
இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது.
ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும்
நாட்டில்.
மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற
தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின்
பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும்
வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக்
குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும்
குறைவில்லை என்பதையும்
இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.
இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும்
தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும்
தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன்
இன்றும் கூறுகிறார்கள்.
கோயில்
திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ்
நாட்டிலும் ஈழத்திலும்
நடைபெறுவதுபொலவே இங்கும்
நடைபெறுகின்றன.
முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ்
செல்வந்தர்களால் ஸ்ரீ
கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில்
நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ்
துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன்
கோயிலும் கிளெமென்சியாவில்
அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches
என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும்
நிர்மாணிக்கப்பட்டன.
இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில்
காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள்
எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும்
இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட
விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும்
ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள்
உறுதியாக நம்புகிறார்கள்.
எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த
உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும்
சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!
#ராக்கிரேவந்த்
ஓமன் நாட்டின் மன்னராக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சுல்தான் குவாபூஸ் பின் சையத் அல் சையத் (72), இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் முதல் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு பின்னர் கடந்தஅக்டோபர் 2-ம் தேதி ஓமன் நாட்டு அரண்மணை வட்டாரம் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.இந்நிலையில் , மன்னர் பூரண நலமாக வேண்டி சிறப்பு யாகம் நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த சந்திரசேகர சுவாமி என்ற ஜோதிடரின் ஆலோசனைப்படி அவரதுதலைமையில் வேத விற்பன்னர்கள் சமீபத்தில் மஸ்காட் சென்று சிறப்பு ஹோமம் நடத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.அதே போன்று இந்தியாவில் மங்களூரூவில் சிறப்பு யாகம் கடந்த 9-ம் தேதி மங்களூரூவில் துவங்கியது.22 வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க , மகா தன்வந்திரி யாகம், பூர்ண நவக்கிரக சாந்தி ஹோமம், உள்ளிட்ட யாகம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஓமன் அரண்மணை வட்டாரத்திடமிருந்து ரூ. 30 லட்சம் யாகத்திற்காக வழங்கப்பட்டது. இந்த யாகத்தில் ஓமன் மன்னரின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
================================
திருச்சி ஆர். எஸ். எஸ்.
அலுவலக
தொலைபேசி எண்கள்:
சாதானா அறக்கட்டளை, தென்
தமிழ் நாடு மாநிலத்
தலைமை அலுவலகம்,
சோழராஜபுரம் சாலை,
உறையூர், திருச்சி: 0431-2761333.
தீக்ஷா, ஆர். எஸ். எஸ்.
அலுவலகம். சேஷபுரம்
மஹாத்மா காந்தி கண்
மருத்துவ மனை எதிரில்,
தென்னூர், திருச்சி: 0431-4023364.
==============================
கோவை RSS அலுவலகம் 0422
2232422.
==========================
பெரம்பலூர் ... வக்கீல்
ராமகிருஷ்ணன் அவர்கள்..
9150628642.
=======================
நாகப்பட்டினம் மாவட்டம் Call
9842424931.
==================
விழுப்புரம் - 98 94 085534.
==========================
NAMAKAL-MOHANRAJ 9994196944.
======================
KanyaKumari-Sudhan Vazhode-9488089309
=========================
Thirunelveli - L.T.Doss(city Secretary)-9488156183.
===========================
Vellore - Anand ji - 9965599991.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பாகுபாடு இந்து மதத்தில் மட்டும் இருப்பதாக நினைப்பது தவறு, எல்லா மதங்களிலும் இருப்பதாக எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தில் உள்ளபடி, மீனாட்சிபுரம் கிராமத்தில், ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து பல கீழ்ஜாதி குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. மதம் மாறிய குடும்பங்கள் இஸ்லாம் மதத்திற்குரிய வழிபாடுகளையும், மதப் பழக்கவழக்கங்களையும் நெறி தவறாமல் கடைபிடிக்கின்றனர். ஆனாலும் மதம் மாறியவர்களின் பெண் பிள்ளைகளுக்க்கு திருமணத்திற்க்காக வரன் பார்க்கும் போது அங்கேயும் ஜாதீ தீ தலைவிரித்தாடுகிறது. "நவ் முஸ்லிம்கள்" என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை. திருமண வயதை கடந்து பல ஆண்டுகளாகியும் கன்னியாக காலத்தை தள்ளும் நிலைக்கு உள்ளாகும் பல இஸ்லாமிற்கு மாறிய பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற உண்மையை வெளி உலகிற்கு எடுத்து சொல்கிறது இந்த புத்தகம்.
மதம் மாறிய கருப்பாயி என்ற பெண் நூர்ஜஹான் தனது தந்தைக்கு எழுதும் கடிதம் நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. "மதங்கள் மனிதர்களின் பாதையை வேண்டுமானால் திசை மாற்றலாம், ஆனால் பயணங்கள் ஒன்று தான்" என்னும் வரிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
--------------------------------------------------------------------------------------------
பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு.
மதுரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.
இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.
கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.
அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.
அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.
திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.
இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை அதை. எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதிபோடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.
சம்போ மகாதேவா!!