நன்றி ..
Achuthan Iyangar
பயம் என்பது அவன் வாழ்வில் அறியாத விஷயம் ! வெள்ளையர்களை இந்த நாட்டை விட்டு விரட்ட தீவிரமாகப் போராடி உயிர்நீத்த பல வீரர்களில் அவனும் ஒருவன் ! வடநாட்டு வாஞ்சிநாதன்!
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாபில் ஜெனரல் டயர் என்பவன் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கில் இந்திய மக்களைக் கொன்றழித்து ரத்த ஆறை ஓட வைத்தான் !!
அன்றைக்கு உதம் சிங் என்ற அந்த பஞ்சாப் மாநில மாவீரனுக்கு வயது 20. நம் இந்திய மக்களின் ரத்தம் ஆறாக ஓடுவதைக் கண்ட அந்த வீரன் அதற்குக் காரணமான ஜெனெரல் டயரைக் கொன்று பழிதீர்க்க அப்பொழுதே உறுதிமொழி எடுத்தான் !! பல்வேறு பெயர்கள், பல்வேறு வேடங்கள், பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்தான் உதம் சிங்! பகத் சிங்கின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவுக்கு வந்த உதம் சிங் உடனடியாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்! அதன் பின் சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் மாறுவேடம் புனைந்து ஜெனரல் டயரை அழிக்க நேரத்தைப் பார்த்துக் காத்திருந்தார்!!
1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் நாள் அவர் எதிர்பார்த்த நேரம் வந்தது! இங்கிலாந்தில் உள்ள ஒரு மன்றத்தில் உரை நிகழ்த்திய ஜெனெரல் டயர் பேசி முடித்த நேரத்தில் உதம் சிங் தான் ஒரு புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜெனரல் டயரை சுட்டு வீழ்த்தினார் !! ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக அந்த சம்பவம் நடந்த பிறகு 21 ஆண்டுகள் கழிந்த பின்னர் அந்த வெள்ளையனை தொடர்ந்து சென்று பழிதீர்த்தார் உதம்சிங் !! இந்திய சுதந்திரப் போரில் தன் சிறந்த பங்களிப்பை அளித்து முடித்தான் !!
டயரை வீழ்த்திய பின்னால் கைது செய்யப்பட்ட மாவீரன் உதம்சிங் 1940 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் தூக்கில் இடப்பட்டார் !! இன்று அவருடைய 75 ஆம் நினைவு நாள் ஆகும் !! வீட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இடையே நாட்டு சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அந்த மாவீரனுக்கு வீர வணக்கங்கள் !! உங்கள் குழந்தைகளுக்கு இவன் கதையைக் கூறுங்கள் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக