நண்பர்கள்

3 ஆக., 2015

தீரன் சின்னமலை

இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...

இன்று ஆடி பதினெட்டு எனவே வரலாற்றோடு தொடர்புடைய ஒரு மாவீரர் சின்னமலையை பற்றி பதிவு செய்தால் சிறப்பு என தேன்றியதால் இந்த பதிவு சரியாக 31-7-1805 அன்று ஆடி பதினெட்டு விழாவிற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது ஆம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஆங்கில அரசு ஆம்

( காலைப் பிடித்து நிலத்தடிப்பான் -கருங்

காகம் கழுகுக்கு இரையிடுவான்

ஆலைக் கரும்பு போல் வெள்ளைப் படையை

அழித்து களிப்பானாம் சின்னமலை "

இன்றும் கிராமங்களில் ஒலிக்கும் இந்த கும்மி பாடல்களில் தான் மாவீரன் சின்னமலையின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டி உள்ளது ஆம் வழக்கம் போல் பள்ளி வரலாற்று பாடத்தில் மறக்கப்பட்ட மாவீரர்களில் இவரும் ஒருவர் தீரன் சின்னமலை,
அழகுமுத்துக் கோனார் , பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். 'தீர்த்தகிரி கவுண்டர்' என்றும், 'தீர்த்தகிரி சர்க்கரை' என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கிலேயர்களைத் எதிர்த்த போர்கள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும் முகநூல் அன்பர்களே இன்று தீரன் சின்னமலையின் வீரத்தை நினைவில் கொள்வோம் !

தீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

இவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி நான் படித்ததில்

பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து, அவர்கள் வாயடைக்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காக அவர்களுக்குப் பரிசில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள், அவர்களின் மரபு வந்ததால், அவர் இளம்பருவத்திலே 'தீர்த்தகிரிச் சர்க்கரை' என்றும் அழைக்கப்பட்டார். மேலும் அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.

தீரன் சின்னமலை பெயர் காரணம்

தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை

அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து பல போர் செய்து வெற்றிகள் பெற்ற மாவீரர்

கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார்.

கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.

வீரமரணம்

ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்

ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, 'தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை' வெளியிட்டது.

1799: தனது படைகளைப் பெருக்கினார்.

1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.

1801ல் பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.

1802 ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.

1803 ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.

நினைத்து பாருங்கள் மீண்டும் 1805 ல் நடந்ததை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று கொங்கு மண்ணே கதறியழ, பீரங்கிகள் புடை சூழ, சின்னமலையும், சகோதரர்களும் சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வரும் மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள். வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றை தாங்களே மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி இவ்வுலகை விட்டு பிரிந்தது இவ்வுலகம் உள்ளவரை தீரன் சின்னமலை புகழ் ஓங்கி ஒளிரட்டும்.

2 ஆக., 2015

வீட்டில் பூஜை செய்ய சில கடைபிடிக்க வேண்டிய விதிகள்....

நன்றி ...
Jothidar Vidyamaniap

வயதானவர்கள் முடிந்தவற்றையே செய்யலாம்...இளம்வயதினர் சிலவற்றையேனும் முறைப்படி கடைபிடிக்கலாமே...

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.

நன்றி ...
சிதம்பரம் நடராஜர்

மேற்கு வங்காளத்திலுள்ள பர்சிங்கா
என்னும் கிராமத்தில் ரயில் நின்றது.
அதிலிருந்து கோட்டும், சூட்டும்
அணிந்த இளைஞன் ஒருவன்
இறங்கினான். அவனுடைய சூட்கேஸ்,
படுக்கையை ரயிலில் இருந்து இறக்க
கூலியாளைத் தேடினான். கூலி!
கூலி! என்று கத்தினான். யாரையும்
காணவில்லை. ரயில்
கிளம்புவதற்குள் சுமையை இறக்க
வேண்டுமே! என்ன செய்வது? என
பரபரத்துக் கொண்டிருந்தான்.அப்போது
வேட்டியும், துண்டும் அணிந்த
ஒருவர் அந்தப் பக்கம் வந்தார்.
சுமையைரயிலில் இருந்து இறக்கி
வைத்தார்.என்னப்பா இது! எவ்வளவு
நேரமா கூலி! கூலி!ன்னு கத்துறேன்?
மெதுவா வர்றியே! சரி...சரி..இதை
எடுத்துகிட்டு புறப்படு என்று
வெறுப்பும் அதிகாரமும் கலந்து
பேசினான் இளைஞன். அவரும்
துõக்கிக் கொண்டு நடந்தார். வீட்டை
அடைந்ததும் இளைஞன் சில்லரை
எடுக்க பைக்குள் கையை
விட்டான்.கூலி வேண்டாம் என்றவர்
சுமையை இறக்கி விட்டு திரும்பினார்.
அப்போது இளைஞனின் சகோதரரர்
வெளியே வந்தார். தம்பி! என்ன
காரியம் பண்ணுனே? இவர் தான்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
மிகப்பெரிய கல்வியாளர். இவரைப்
போய் சுமை துõக்க வச்சிட்டியே!
என்றார் வருத்தத்துடன். ஐயா!
என்னை மன்னியுங்கள் என்று உருகி
நின்றான் இளைஞன்.அப்போது அவர்,
நம்முடைய வேலையை நாமே
செய்வதில் அவமானம் கிடையாது.
ஏமாற்றிப் பிழைப்பது தான் கேவலம்.
உழைப்பில் உண்டாகும் சுகத்திற்கு
இணை ஏதுமில்லை, என்று
அறிவுறுத்தி விட்டு
நடந்தார்.கல்லுõரிப் பேராசிரியராக
பணிபுரிந்த இவர், பொதுப்பணி
செய்வதற்காக தனது பணியை விட
நேர்ந்தது. இனி சாப்பாட்டுக்கு என்ன
செய்யப் போகிறீர்கள்? என்று
நண்பர்கள் கேட்டனர். தெருத்தெருவாய்
காய்கறி விற்று கிடைக்கும் சொற்ப
காசு எனக்கு போதும். பணத்தை விட
பொதுப்பணியே பெரிது, என்றார்
வித்யாசாகர்.

குருபகவான் & தட்சிணாமூர்த்தி

குரு பெயர்ச்சிக்கு யாருக்கு பரிகாரம் செய்வது?

நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்வது எந்த வகையில் சரி? "அந்த குரு தான் இந்த குரு!" என்று சொன்னது எந்த மகானுபாவர் என்று தெரியவில்லை. கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டும், இந்த தவறு அனுமதிக்கப்படுகிறது. பல கோவில்களில் இதை வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

நமக்கும் இந்த அறியாமை இருந்ததுண்டு. சொற்பொழிவு ஒன்றில் ஒரு பெரியவர் இது குறித்து விளக்கியபோது தான் உண்மையை உணர்ந்து. கொண்டோம்.

நம் குடும்பத்தினருக்கு இந்த அறியாமை இருக்கக்கூடாது என்று கருதி, ஆதாரப்பூர்வமாக ஒரு பதிவு வெளியிட நீண்ட நாட்களாகவே முயன்றுவந்தோம்.

அண்மையில் இது குறித்த ஒரு அற்புதமான கட்டுரையை தினகரன் நாளிதழில் படிக்க நேர்ந்தது. இதோ உங்கள் கவனத்திற்கு அந்த கட்டுரை. படியுங்கள். குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள்.

குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது?

நவக்கிரக குருவையா, ஞான குருவையா?

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரிதானா?இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.  அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர். ('ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…' என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள்.) உண்மை  நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது,  தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை.  வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே   தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று  போற்றப்படுகிறார்.  அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன்  என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.  ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன்  என்றும், ப்ரத்யதி  தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய  அவசியம் என்ன?  இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த  ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ
குருவே நம:

– இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் 'குரு' என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு  பகவானுக்கு  உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். இறைவன் இட்ட பணியைச்  செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச்  செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த  காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந் தால் திருமணம்  நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.  திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம்  கிட்டவும், உயர் கல்வியில் இடம்  பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய  விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,  இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும்  வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும்,  கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து  வடக்கு முகமாய்  நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை  வழிபடலாம். வியாழக்கிழமைதான்  என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு  முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று  மனம் தெளிவடையும். இந்த குரு பெயர்ச்சி நாளன்று ஞான குரு  வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான  பலனை அடைவோம்.

(நன்றி : திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா | தினகரன்)

மலர்ந்த உள்ளம்

நன்றி ...
சிதம்பரம் நடராஜர்

மழை பெய்து கொண்டிருந்தது.
மகளை அழைத்த தாய், பானையைக்
கொண்டு போய், கூடுவாய்க்குக் கீழே
வை. மழை நீரைப் பிடித்து வைத்தால்
நமக்குப் பயன்படும்,
மற்றவர்களுக்கும் தரலாம் என்றாள்.
மகள், பானையைக் கொண்டு போய்
கூடு வாய்க்கு நேரே வைத்தாள்.
மழை விட்டதும் தாய் சென்று
பார்த்தாள். பானையில் சொட்டு
தண்ணீர் கூட இல்லை.
கூடுவாய்க்கு நேராகத்தான்
பானையை வைத்தாள். நன்றாக மழை
பெய்தது. பானையில் துளி
ஓட்டையும் இல்லை. ஆனாலும்
பானையில் சொட்டு தண்ணீர் இல்லை.
ஏன் இல்லை? பானையைக் கவிழ்த்து
வைத்து விட்டாள். பானையைக்
கவிழ்த்து வைத்தால் மழை நீர் எப்படி
உள்ளே போகும்? அதேபோல உள்ளம்
கவிழ்ந்து கிடந்தால், இறையருள்
உள்ளே புகாது. உள்ளம் மலர்ந்து
இருக்க வேண்டும். அப்போதுதான்
இறையருள் உள்ளே புகும். மலர்ந்த
உள்ளம் என்பது என்ன? தான் வாழ,
பிறரும் வாழ வேண்டும் என்ற
எண்ணம் வேண்டும். அதுதான்
மலர்ந்த உள்ளம்.

கடவுள்

நன்றி ...
Vinoth R

வீட்ல பூஜை அறை இருக்கு, சாமி இருக்கு, வீட்டில் உட்கார்ந்து பூஜை செஞ்சு, சாமி கும்பிட்டா பத்தாதா? எதுக்கு கஷ்டப்பட்டு நடந்து, அல்லது பிரயாணம் பண்ணி, கோவிலுக்கு போகணும்? அதுவும் இப்பல்லாம் கோவில்கள்லயும் கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு! தள்ளு முள்ளுல போயி, இடிச்சுக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு பதில், அக்கடான்னு வீட்ல விளக்கேத்தி அமைதியா கும்பிட்டுட்டுப் போகலாம்… இந்த மாதிரி அங்கலாய்ப்புகளை நீங்களும் கேட்டிருப்பீங்கதானே…

நானும் அப்படித்தான் நினைப்பேன், முன்னல்லாம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னுதானே சொல்றாங்க, அப்படி இருக்கறப்ப, எங்கே வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கும்பிடலாமே. கோவிலுக்குத்தான் போய்த்தான் கும்பிடணுமா என்ன? இப்படில்லாம் நானும் பேசி இருக்கேன். ஆனா, இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னு நிஜமாகவே நம்பி, அவனை எந்நேரமும் மனசில் வச்சு, அதற்குத் தகுந்தாற் போல ஒவ்வொரு நிமிஷமும் வாழறவங்க மட்டும்தான் அப்படிப் பேச முடியும். சுருக்கமா சொன்னா, தூய்மையான துறவிகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கு.

சாதாரண மனுஷங்களுக்கு, நல்ல விஷயங்களைப் பற்றி அப்பப்ப ஒரு நினைவூட்டல் தேவையா இருக்கு. இறைவனைப் பற்றியும்தான்! அவனைப் பற்றி நினைச்சுப் பார்க்க உதவியாத்தான் கோவில்கள் கட்டினாங்க. கோபுரங்களை உய…..ரமா கட்டறதுக்கும் அதுதான் காரணம். நாம எவ்வளவு தூ….ரத்தில் இருந்தாலும், புகைவண்டியில் போகும் போதோ, பேருந்தில் போகும் போதோ கூட கோபுரத்தைப் பார்த்தா, அந்த ஒரு நொடியாவது அவனை நினைச்சுக்கிறோமில்ல? கன்னத்தில் போட்டுக்கறோமில்ல? கோவில்களோட முக்கிய வேலை நம்முள் இருக்கிற ஆன்மீகத்தை உணரச் செய்யறதும், வளரச் செய்யறதும்தான்!

வீடு முழுக்க மின்சாரம் இருக்கத்தான் இருக்கு. ஆனா சுவிட்சைத் தட்டினாதானே விளக்கு எரியும்? ப்ளக் பாயிண்ட்ல சொருகினாதானே எந்த மின்சார பொருளும் வேலை செய்யும்? அதே போலத்தான் கோவில்களும். அதாவது, கோவில்களை ஒரு 'concentrated energy source' அப்படின்னு சொல்லலாம்.

சின்ன வயசில் முக்கால்வாசிப் பேர் இதைப் பண்ணி இருப்போம் – ஒரு குவி ஆடிக்குக் கீழ பேப்பரை வச்சு, சூரிய ஒளியை அதில் குவிச்சு, பேப்பரை எரிய வைக்கிறது. சூரிய ஒளி எல்லா இடத்திலும்தான் இருக்கு. அதுக்காக, பேப்பரை எங்கே வச்சாலும் எரிஞ்சிடுமா என்ன? அந்த சக்தியை ஒருமுகமாக்கி பயன்படுத்தும் போதுதான், அதனோட ஆற்றல் அதிகமா இருக்கு. அதே போலத்தான் கோவில்களும், அவற்றில் இருக்கிற தெய்வங்களும். அவை, ஒருமுகப் படுத்தப்பட்ட சக்தி.

'Vibrations' என்கிற சொல்லை எல்லோருமே இப்ப சர்வ சாதாரணமா பயன்படுத்தறோம். Vibrations அல்லது அதிர்வலைகள் என்பது இந்த அண்ட வெளியெங்கும் நிறைஞ்சிருக்கு; காற்றோடு கலந்திருக்கு. அவற்றில் நல்லவையும் இருக்கு; கெட்டவையும் இருக்கு. இதெல்லாம் அந்தக் காலத்தில் நம்ம ரிஷிகள் உணர்ந்து சொன்னதுதான். ஆனா இதையெல்லாம் இப்பத்தான் புதுசா கண்டு பிடிச்ச மாதிரி rediscover பண்ணிக்கிட்டே இருக்கோம். அதுவும், இதெல்லாம் வெளி ஆளுங்க வாயிலிருந்து வரும் போதுதான் நம்ம கவனத்தை அதிகமா கவருது. நம் சொந்த இந்திய மண்ணின் ஆன்மீக பலத்தை நாம புரிஞ்சிக்கலை என்பது மட்டுமில்ல, நாம அதை மதிக்கிறது கூட இல்லை என்பது தான் ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் frown emoticon

இப்ப இந்த அதிர்வலைகள் விஷயமும் அப்படித்தான். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும், எல்லாமே அதற்குண்டான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறதா சொல்றாங்க. அதனாலதான், அந்த மூணுமே எப்போதும் நல்லதாவே இருக்கணும்னு நம்ம பெரியவங்க வலியுறுத்தி வச்சிருக்காங்க. கூட்டுப் பிரார்த்தனை, உலக க்ஷேமத்துக்காக யாகங்கள் வளர்ப்பது, இதெல்லாம் நல்ல அதிர்வலைகளைத் தோற்றுவித்து நல்லது செய்யும். அதனாலதான் இதெல்லாம் செய்யறோம்.

தியானம் பண்றது கூட அப்படித்தான். தியானம் பண்றதுக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதே இடத்தில் தினமும் செய்யறது நல்லதுன்னு சொல்வாங்க. அதுக்கும் இதே காரணம்தான். தியானம் செய்யச் செய்ய, நாம ஏற்படுத்தும் அதிர்வலைகள் அந்த இடத்தில் நிறையுமாம். போகப் போக, நாம அதே இடத்தில் தியானம் செய்யச் செய்ய, நாம் சீக்கிரமே தியான நிலைக்குப் போகவும் அதே அதிர்வலைகள் உதவுமாம். இது ஓஷோ அவர்கள் சொல்வது.

கோவில்களில் பார்த்தீங்கன்னா, எப்பவும் மங்களகரமான மந்திரங்கள், வாத்தியங்கள், பாடல்கள், நல்ல விஷயங்கள், இதெல்லாம் தான் நடந்துகிட்டே இருக்கும். அதனால கோவிலில் உள்ள 'நல்ல' அதிர்வலைகள் மிக மிக அதிகம். மனசு குழப்பமா இருந்தாலோ, கஷ்டமா இருந்தாலோ எதுக்கு கோவிலைத் தேடிப் போறோம்? அங்கே போனா நமக்கு ஒரு மன அமைதி கிடைக்குது என்பது நம் உள்ளுணர்வுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கிறதாலதான். அதனாலதான் தினமும் கோவிலுக்குப் போறது நல்லதுன்னும் சொல்லி வெச்சாங்க.

சில பழங்காலக் கோவில்களில் எக்கச்சக்கமா கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். திருப்பதி, பழனி, மாதிரி கோவில்களில் எப்பவுமே, சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதறதுக்கு என்ன காரணம்? காலம் காலமாக அங்கே நடக்கிற பூஜைகளாலும், ஓதுகிற மந்திரங்களாலும், அந்த கோவில்களோட புனிதத் தன்மை மிக அதிகமாக இருக்கு. அதனால, அந்தக் கோவில்களோட ஆகர்ஷண சக்தியும் அதிகமா இருக்கு.

அதனால, இனி சமயம் கிடைக்கிற போதெல்லாம் கோவில்களுக்கு போகலாம். விசேஷ நாட்களில்தான் கூட்டம் அதிகமா இருக்கும், அதனால கூட்டத்தில் போக முடியலைன்னா, நாம மற்ற நாட்களில் போகலாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கலாம்; இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசலாம்; பிறருக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காத செயல்களை மட்டுமே செய்யலாம்…சரிதானே?

பி.கு. இதில் வருகிற உதாரணங்களெல்லாம் சொந்தச் சரக்கில்லை, மகான்களும், பல பெரியவங்களும் சொன்னவைகளைப் படிக்கிற போது கிடைச்சதுதான். எங்கே, யார் சொன்னது அப்படிங்கிற விவரங்கள் நிற்காட்டாலும்… சில விஷயங்கள் மட்டும் அப்படியே மனசில் நின்னுடும் இல்லையா? அதனாலதான் பெயர்களைக் குறிப்பிடலை. அனைத்து மகான்களையும் மிகுந்த பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன்.

வீர வணக்கம்

நன்றி ..
Achuthan Iyangar


பயம் என்பது அவன் வாழ்வில் அறியாத விஷயம் ! வெள்ளையர்களை இந்த நாட்டை விட்டு விரட்ட தீவிரமாகப் போராடி உயிர்நீத்த பல வீரர்களில் அவனும் ஒருவன் ! வடநாட்டு வாஞ்சிநாதன்!
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாபில் ஜெனரல் டயர் என்பவன் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கில் இந்திய மக்களைக் கொன்றழித்து ரத்த ஆறை ஓட வைத்தான் !!

அன்றைக்கு உதம் சிங் என்ற அந்த பஞ்சாப் மாநில மாவீரனுக்கு வயது 20. நம் இந்திய மக்களின் ரத்தம் ஆறாக ஓடுவதைக் கண்ட அந்த வீரன் அதற்குக் காரணமான ஜெனெரல் டயரைக் கொன்று பழிதீர்க்க அப்பொழுதே உறுதிமொழி எடுத்தான் !! பல்வேறு பெயர்கள், பல்வேறு வேடங்கள், பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்தான் உதம் சிங்! பகத் சிங்கின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவுக்கு வந்த உதம் சிங் உடனடியாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்! அதன் பின் சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் மாறுவேடம் புனைந்து ஜெனரல் டயரை அழிக்க நேரத்தைப் பார்த்துக் காத்திருந்தார்!!

1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் நாள் அவர் எதிர்பார்த்த நேரம் வந்தது! இங்கிலாந்தில் உள்ள ஒரு மன்றத்தில் உரை நிகழ்த்திய ஜெனெரல் டயர் பேசி முடித்த நேரத்தில் உதம் சிங் தான் ஒரு புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜெனரல் டயரை சுட்டு வீழ்த்தினார் !! ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக அந்த சம்பவம் நடந்த பிறகு 21 ஆண்டுகள் கழிந்த பின்னர் அந்த வெள்ளையனை தொடர்ந்து சென்று பழிதீர்த்தார் உதம்சிங் !! இந்திய சுதந்திரப் போரில் தன் சிறந்த பங்களிப்பை அளித்து முடித்தான் !!

டயரை வீழ்த்திய பின்னால் கைது செய்யப்பட்ட மாவீரன் உதம்சிங் 1940 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் தூக்கில் இடப்பட்டார் !! இன்று அவருடைய 75 ஆம் நினைவு நாள் ஆகும் !! வீட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இடையே நாட்டு சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அந்த மாவீரனுக்கு வீர வணக்கங்கள் !! உங்கள் குழந்தைகளுக்கு இவன் கதையைக் கூறுங்கள் !!

தியாகமறவன் தீரன் சின்னமலை

தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆடி-18 அன்று கொங்கு மண்டலம் முழுவதும் அரசு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும். சாதி சாயம் பூசாமல் தீரன் சின்னமலையின் வரலாற்றை அரசு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்களில் மாணவர்களும் , இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் சிறந்த ஒரு சுதந்திர போரட்ட மாவீரனை அரசு இனியும் புறகணிக்க கூடாது .

கி.பி.17-ஆம் நூற்றாண்டிலிருந்து வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் வளங்களால் ஈர்க்கப்பட்டு, இங்கிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை.
இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலியவைகளில் சிறந்து விளங்கியவர். கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆதிக்கத்திலிருந்த காலமது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டினம் ஐதர் அலியின் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டெழுந்து, அதனைத் திரும்பப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது.
ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று ஆங்கிலேயருக்கு எதிரான போரை தீவிரப்படுத்தினார். திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மைசூர் முழுவதும் பரவியிருந்தது. சின்னமலையின் ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். 1799-இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டினம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாகப் போரிட்டன. குறிப்பாக மழவல்லியில் 40,000 வீரர்களுடன் நடந்தப் போர் ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
எனினும் திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது. திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் சின்னமலையின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர். மருது சகோதரர்களும், கொங்கு தலைவர்களும் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட எடுத்த முயற்சியே கோவைப் புரட்சி என்றானது.
பணத்தாசை பிடித்த சமையல்காரன் நல்லப்பன் இம்மாவீரனை காட்டிக் கொடுத்துவிட்டான். கொங்கு நாடே கதறியழ, பீரங்கிகள் புடை சூழ, சின்னமலையும், சகோதரர்களும் சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வரும் மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள். வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றை தாங்களே மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது. இவ்வுலகம் உள்ளவரை தீரன் சின்னமலை புகழ் ஓங்கி ஒளிரட்டும்.

1 ஆக., 2015

வீர வணக்கம்

நன்றி ..
Achuthan Iyangar


பயம் என்பது அவன் வாழ்வில் அறியாத விஷயம் ! வெள்ளையர்களை இந்த நாட்டை விட்டு விரட்ட தீவிரமாகப் போராடி உயிர்நீத்த பல வீரர்களில் அவனும் ஒருவன் ! வடநாட்டு வாஞ்சிநாதன்!
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாபில் ஜெனரல் டயர் என்பவன் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கில் இந்திய மக்களைக் கொன்றழித்து ரத்த ஆறை ஓட வைத்தான் !!

அன்றைக்கு உதம் சிங் என்ற அந்த பஞ்சாப் மாநில மாவீரனுக்கு வயது 20. நம் இந்திய மக்களின் ரத்தம் ஆறாக ஓடுவதைக் கண்ட அந்த வீரன் அதற்குக் காரணமான ஜெனெரல் டயரைக் கொன்று பழிதீர்க்க அப்பொழுதே உறுதிமொழி எடுத்தான் !! பல்வேறு பெயர்கள், பல்வேறு வேடங்கள், பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்தான் உதம் சிங்! பகத் சிங்கின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவுக்கு வந்த உதம் சிங் உடனடியாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்! அதன் பின் சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் மாறுவேடம் புனைந்து ஜெனரல் டயரை அழிக்க நேரத்தைப் பார்த்துக் காத்திருந்தார்!!

1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் நாள் அவர் எதிர்பார்த்த நேரம் வந்தது! இங்கிலாந்தில் உள்ள ஒரு மன்றத்தில் உரை நிகழ்த்திய ஜெனெரல் டயர் பேசி முடித்த நேரத்தில் உதம் சிங் தான் ஒரு புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜெனரல் டயரை சுட்டு வீழ்த்தினார் !! ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக அந்த சம்பவம் நடந்த பிறகு 21 ஆண்டுகள் கழிந்த பின்னர் அந்த வெள்ளையனை தொடர்ந்து சென்று பழிதீர்த்தார் உதம்சிங் !! இந்திய சுதந்திரப் போரில் தன் சிறந்த பங்களிப்பை அளித்து முடித்தான் !!

டயரை வீழ்த்திய பின்னால் கைது செய்யப்பட்ட மாவீரன் உதம்சிங் 1940 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் தூக்கில் இடப்பட்டார் !! இன்று அவருடைய 75 ஆம் நினைவு நாள் ஆகும் !! வீட்டுக்காகப் பாடுபட்டவர்கள் இடையே நாட்டு சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அந்த மாவீரனுக்கு வீர வணக்கங்கள் !! உங்கள் குழந்தைகளுக்கு இவன் கதையைக் கூறுங்கள் !!

பொய்யும் மெய்யும்

நன்றி ...
சிதம்பரம் நடராஜர்

குருநானக்கும் அவரது சீடரும்
குசியால்கோட் எனும் நகரை
அடைந்தார்கள். தம் சீடரிடம், இந்தப்
பணத்தை எடுத்துக் கொண்டு
நகரத்துக்குள் செல் அரைப்
பணத்துக்கு மெய்யும் மீதம் அரைப்
பணத்துக்கு பொய்யும் வாங்கி வா
என்றார். தம் குருவிடம் ஏன், எதற்கு
என்று ஒரு பொழுதும் கேட்டறியாத
அந்தச் சீடர், குருவின் கட்டளையை
ஏற்று, நகரத்திலிருந்த அனைவரிடமும்
ஒரு பணத்துக்கு பொய்யும்,
மற்றொன்றுக்கு மெய்யும் வேண்டும்
என்று கேட்டுக்கொண்டே சென்றார்
பலரும் அவரை கேலி செய்தனர்.
கடைசியாக ஒரு கடைக்காரர்
பணத்தை வாங்கிக் கொண்டு
வாழ்க்கை என்பது பொய் மரணம்
என்பது மெய். இதை உங்கள்
குருவிடம் சென்று சொல்லுங்கள்
என்றார். குருவிடம் வந்த சீடர்,
நடந்தவற்றைச் சொன்னார். நாம்
தங்குவதற்கு இந்த நகரத்தில் ஒரு
நல்ல இடம் கிடைத்துவிட்டது.
உண்மை தெரிந்த ஒரு மனிதர் இங்கே
இருக்கிறார். நாம் அங்கே செல்வோம்
வா! என்று சீடரை அழைத்துச்
சென்றார் குருநானக்.