நண்பர்கள்

30 ஜூலை, 2015

ராம ராம

நன்றி ..
சிதம்பரம் நடராஜர்

வெங்கடாஜலபதிக்கு ஒரே மகன்.
அவரது மகன் வாசுதேவனுக்கு பக்தி
சிறிதும் இல்லை. துறவி ஒருவரிடம்
மகனின் நிலையைச் சொல்லி, சுவாமி!
நீங்கள் தான் அவனுக்கு வழி காட்ட
வேண்டும் என்று வேண்டினார்.
கவலைப்படாதே! நான் பார்த்துக்
கொள்கிறேன், என்றார் துறவி.மறுநாள்
வெங்கடாஜலபதியின் வீட்டுக்கு
வந்து, ராம நாமம் ஜெபித்தபடி பூஜை
செய்தார். வாசுதேவன் தனது
அறைக்குள்ளேயே
இருந்தான்.இதையறிந்த துறவி,
அறையை வெளிப்புறமாகப்
பூட்டினார்.உள்ளிருந்த வாசுதேவன்
கதவைத் திறக்கும்படி
கூச்சலிட்டான்.அடேய்! வீட்டிலே
பூஜை நடக்குது! அதில்
கலந்துகிடாமே உள்ளேயே
இருக்குறியே! உனக்கு
பொறுப்பிருக்கா! சரி...சரி...ராமா..
ராமான்னு பதினொரு தடவை
சொல்லு... திறக்கிறேன், என்றார்
துறவி. உள்ளிருந்த வாசுதேவன்,
ராமான்னு தானே சொல்லணும்...11
தடவை என்ன! 101 தடவை கூட
சொல்றேன்... கதவைத் திறங்கய்யா
சாமி! என்றான்அவ்வளவு லேசிலே
திறக்க மாட்டேன்! தினமும் நீ
ராமநாமம் சொல்லணும்! உன் விதி
முடிந்து, நீ எமலோகம் சென்ற பிறகு
எமன் அந்த புண்ணியத்தின் பலனைக்
கேட்பான். ஆனால், நீ அதைக்
கொடுக்க மாட்டேன் என பிடிவாதம்
பிடிக்கணும்.
இதை நான் காரணமாத்தான்
சொல்றேன், என்றார். இந்த
சாமியாருக்கு பைத்தியம் போலும்!
செத்த பிறகு, நடக்கப் போறதெல்லாம்
இவருக்கு எப்படி தெரியும்?
சரி..சரி..இப்போ கதவைத்
திறந்தாகணும்! அவர் சொல்றதுக்கு
தலையை ஆட்டி வைப்போம், என
சிந்தித்த வாசுதேவன், அவர்
சொல்கிறபடி நடப்பதாக
வாக்களித்தான்.துறவி கதவைத்
திறந்து விட்டார். காலம் கடந்தது.
வாசுதேவனும் இறந்து
போனான்.எமலோகத்தில் சித்ரகுப்தர்
ஏட்டைப் புரட்டி, பிரபு! பக்தி
இல்லாத இந்த வாசுதேவன், நரகம்
செல்ல வேண்டியவன். ஆனால், ஒரே
ஒரு முறை நிர்ப்பந்தத்தின் பேரில் ராம
நாமம் சொல்லியிருக்கிறான்.
அதற்கான புண்ணிய பலனை
இவனிடமிருந்து தாரை வார்த்து
பெற்றால் தான், இவனை நரகத்துக்கு
அனுப்ப முடியும், என்றார். அப்போது
தான்,எதற்காகவும் ராம நாம பலனை
எமதர்மனுக்கு கொடுக்கக்கூடாது
என்று துறவி சொன்னது அவனது
நினைவுக்கு வந்தது. எமதர்மனே!
ராமநாம பலனை எக்காரணம்
கொண்டும் தரமாட்டேன்.
வேண்டுமானால், என்னை நரகத்தில்
இப்போதே தள்ளுங்கள், என்று
பிடிவாதமாகச் சொல்லி விட்டான்.
சித்ரகுப்தர்,புண்ணிய பலன் இருக்க,
ஒரு ஜீவன் நரகம் செல்ல முடியாது
என்றார். என்ன செய்வதென புரியாத
எமதர்மன் இந்திரன் உதவியை
நாடினான்.குழம்பிய இந்திரன்,
பிரம்மாவிடம் தீர்வு கேட்போம்
என்றான். பிரம்மாவோ,விஷ்ணுவிடம்
இவனை ஒப்படைப்போம் என்றார் .
வைகுண்ட வாசலில் நின்றபடி,
நாராயணா! இந்த ஜீவன் அடைய
வேண்டிய கதி தான் என்ன? ஒரு
முறை ராமநாமம் சொன்ன இவனை
என்ன தான் செய்வது? என
ஓலமிட்டனர் அனைவரும்.
சித்திரகுப்தன், எமதர்மன், இந்திரன்,
பிரம்மா, நாராயணனாகிய நான் என
நம் அனைவரின் தரிசனமும் ஒன்று
சேர இவனுக்கு கிடைத்ததே ராம
நாமத்தின் மகிமையால் தான்! இவனை
சொர்க்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு
வழியில்லை, என்று நாராயணன்
சொன்னார். வாசுதேவனுக்கு
சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டது.

28 ஜூலை, 2015

மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை

நன்றி ....
தேடிதரிசித்த திருதலங்கள்
----------------------------------------------------------------------------------------
'கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.'
- திரு ஞானசம்பந்தர்

சகல ரோகங்களையும் தீர்க்கும் பெருமானாக வைத்தீஸ்வரன் கோயில் உறை தையல்நாயகி சமேத வைத்திய நாதனையே உலகம் பெருமளவில் அறிந்திருந்தாலும், அதற்கு ஒப்பான ஒரு பழந்தலம் சென்னை மாநகரில் நடுப்பகுதியிலேயே உள்ளது என்பது பலரும் அறிந்திராத ஒரு தகவலாக இருக்கலாம். அதுவே திருவான்மியூரில் அமைந்துள்ள நமது மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

தலபுராணம்

சிவபெருமான் திருமணத்தின்போது குடை சாய்ந்தாற்போலாகி விட்ட பூமியை சமனப்படுத்த தெற்கு நோக்கி பயணமான அகத்திய முனிவர் சற்றே நோய் வாய்ப்பட்டபோது, இத்தலத்தில் இறைவனைச் சேவித்துத் தன் நோய் குணமடைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் மருந்தீஸ்வரன் என்று பெயர் பெற்றார். அது மட்டுமல்லாது, அகத்தியருக்கு பல பிணி தீர்க்கும் மருந்துகளையும், மூலிகைகளையும் அடையாளம் காட்டியதாலும் இப்பெயர் கொண்டதாகவும் கூறுவர்.

இராமாயணம் அளித்த வால்மீகி முனிவர் முக்தி அடையத் தலம் தேடியபோது அவரிடம் மார்க்கண்டேய மஹரிஷி, 'எத்தலத்தில் யாம் இங்குள்ளோம் என்ற அசரீரி கேட்கிறதோ, அங்குதான் உமக்கு முக்தி எனப் புகன்றாராம். தேசாந்தரியாக அலைந்த வால்மீகிக்கு இவ்விடத்தில் அசரீரி ஒலித்து அவர் இங்கு முக்தி அடைந்தார் என்பதும் வழிவழி வரும் கூற்று. வால்மீகிக்கு இறைவன் வழி காட்டிய ஊரானதால் இது திரு வான்மி யூர் என்றானதாம்.

இறைவனுக்கு மருந்தீசன், பால்வண்ண நாதர், வேதபுரீஸ்வரர் என்ற பெயர்கள் வழங்குகின்றன.
தாயாரை திரிபுரசுந்தரி, சொக்க நாயகி, சுந்தர நாயகி என்று பலவாறு அழைக்கிறார்கள்.

காஸ்யப முனிவரின் சாபத்தால் பூவுலகு அடைய நேர்ந்த காமதேனு தினமும் இங்குள்ள லிங்கத்தின்மேல் பால் சொரிந்து தன் சாபம் நீங்கியது. இதனால், இங்குள்ள மூலவர் பால்வண்ண நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் முடியில் பசுவின் குளம்பு பட்ட வடுக்களைக் காணலாமாம் (பல ஸ்வயம்பு லிங்கக் கோவில்களில் இது போன்ற வரலாறு கூறப்படுவதும், லிங்கத்தின் மேற்புறம் பசுக் குளம்பு வடுக்கள் இருப்பதாகச் சொல்வதும் கவனிக்கத்தக்கது.

பாம்பன் சுவாமிகள் வழிபட்ட தலம் இது.
இத்தலத்தில் பிரம்மனே மாடவீதிகள் அமைத்து பங்குனி பூஜை நிகழ்த்தியதாக நம்பிக்கை உண்டு.

வான் பொய்த்த காலை, அப்பையர் என்னும் மகானின் வேண்டுகோளுக்காக தான் பொய்க்காது மழை பெய்வித்த வேதபுரீஸ்வரன் அம்மகான் தன்னை தரிசிக்க ஏதுவாகவே மேற்புறம் திரும்பி அமைந்துள்ளான் என்று கூறுவர்.

சிவனின் சிரத்திலிருக்கும் கங்கை நதியிலிருந்து ஐந்து துளிகள் இத்தல தடாகத்தை உருவாக்கியதாக வரலாறு.

தலச்சிறப்பு

தனது திருநாமத்துக்கு ஏற்றவாறு ஈசன் இங்கு தன்னை வந்தடையும் பக்தர்களுக்கு சகல உடல், மன ரோகங்களையும் அகற்றிக் காத்தருள்கிறான்.

தலப்பண்

மாயன் அவதாரம் மண்ணில் உரைத்தவன்
காயம் விடுத்துக் கரைசேர் தலமிதே
நோய்நீக்கு ஈசனவன் நேயம் புகழ்ந்திடவே
வாயொன்று போதாது காண்.

ஓம் நமச்சிவாய!

நீதிக்கதைகள்

நன்றி ...சிதம்பரம் நடராஜர்

ஒரு இளைஞன் நதிக்கரை ஒன்றில்
நின்று, அதை எப்படி கடப்பதென
ஆலோசித்துக்
கொண்டிருந்தான்.அப்போது, புத்த மத
பிட்சு ஒருவர் அங்கே வந்தார்.
அவரிடம், பிட்சுவே! இந்த நதியைக்
கடக்க வேண்டும். வழி
சொல்லுங்களேன்! என்றான்.
கடவுளை மனதில் நினைத்துக்
கொண்டு நம்பிக்கையுடன் நீந்து.
எத்தகைய காட்டாற்று
வெள்ளத்தையும், அதில் வரும்
சுழல்களையும் கடக்க அவர் அருள்
செய்வார், என்றார் பிட்சு.எங்கே!
நீங்கள் கடந்து காட்டுங்களேன்!
என்றான் இளைஞன். பிட்சு சற்றும்
யோசிக்காமல், புத்தம் சரணம் கச்சாமி
என்று வணங்கியபடியே தண்ணீரில்
குதித்தார். எப்படியோ, நீந்தி அக்கரை
சேர்ந்து விட்டார்.இளைஞனும்,
விநாயகப்பெருமானே!
தடைகளையெல்லாம் அகற்றி
என்னைக் காப்பாற்று! என்றபடியே
தண்ணீரில் குதித்தான்.கொஞ்ச துõரம்
நீச்சலடித்து சென்றிருப்பான். சுழல்
ஒன்று அழுத்தியது.ஐயையோ!
இதிலிருந்து தப்பவேண்டுமானால்,
விநாயகரை விட, அவரைப் பெற்ற
சிவனை நம்பாலாமோ என சிவாயநம
என ஐந்தெழுத்து மந்திரத்தை
உபதேசித்தான். இன்னும் கொஞ்ச
துõரம் கடக்க, கடும் இழுப்பாய்
இருக்கிறதே! இதிலிருந்து தப்ப அவர்
தம்பி முருகனைநம்பினால், வேலை
வீசி எறிந்து
இதைக்கட்டுப்படுத்துவாரோ! என்று
ஒவ்வொருவராய் நினைத்தபடி பாதி
துõரம் கடந்தான்.இன்னும் சற்று
நேரத்தில் வெள்ளத்தின் வேகம்
அதிகமாக, வேறெந்த சுவாமியை
வணங்குவது என யோசிப்பதற்குள்
வெள்ளம் அவனை அடித்துச் சென்று
பாறையில் மோதியது. அவன் ரத்தம்
வழிய அமர்ந்திருந்தான்.அப்போது ஒரு
துறவி, அவ்வழியே நீந்தி வந்தார்.
பாறையில் ஏறி அவன் நிலையைக்
கேட்டார்.அப்பா! தெய்வம் ஒன்று
தான். நாம் தான் பல உருவங்கள்
கொடுத்து பிரித்து
வைத்திருக்கிறோம். ஒன்று
காப்பாற்றும், ஒன்று கை விடும்
என்றெல்லாம் இல்லை. நீ எந்த
வடிவை நம்புகிறாயோ, அதையே
கடைசி வரை நம்பு.
காப்பாற்றப்படுவாய்! என அறிவுரை
கூறி, அவனைத் தன்னோடு
அழைத்துச் சென்றார்.