நன்றி உறையூரில் வந்தியத்தேவன்
இந்திய சுதந்திர சரித்திரத்தில் மறைக்கப்பட்ட உண்மை நாயகன் சித்தரஞ்சன் தாஸ் அவர்கள்...
நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ?
அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட . அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன்
சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் .
அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அரவிந்தரை தனது வாதத் திறமையால் விடுதலை பெறச் செய்தவர்..
சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.
கல்கத்தா நகர மேயர் ஆன பொழுது நேதாஜியை உடன் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு பல்வேறு அற்புதமான
செயல்களை நிகழ்த்தினார். இன்றைக்கு நாமெல்லாம் இப்பொழுது கொண்டு வந்ததாக நினைக்கும் கிராம பஞ்சாயத்துகள்,கிராம சுயாட்சி ஆகியவற்றை தன்னுடைய ஐந்து அம்ச திட்டத்தில் இருபதுகளிலேயே பதிவு செய்திருக்கிறார்.
தொழிற்சங்கங்கள் அமைத்தலை துரிதப்படுத்த வேண்டும்,தொழிலாளிகளுக்கு உரிமைகள் பெற வேண்டியது முக்கியம் என்றும் முழக்கமிட்டார் அவர்.
ஒரு வழக்கிற்கு அன்றைக்கே லட்சம் வாங்கிய இவர் விடுதலைப்போரில் ஈடுபட்ட பொழுது அவற்றை எல்லாம் துறந்தார். கொடுத்து கொடுத்தே ஏழையாகிப்போனார்
இவர் . இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் "சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது" என்றார்..
அப்பொழுது கூட தன் வீட்டை ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார் .இறுதி ஊர்வலத்துக்கு செலவழிக்க கூட
வழியில்லாத அளவுக்கு வறுமை அவரை பீடித்து இருந்தது. மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு அவரை வழியனுப்பினார்கள்.
வங்கதேசத்திலும் இவர் இன்றைக்கும் அன்போடு நினைவுகூரப்படுகிற அளவுக்கு இவரின் பணிகள் மனிதநேயம் தோய்ந்ததாக இருந்தது . மனிதநேயம் மற்றும் தேசப்பற்று இரண்டிலும் ஜொலித்த
இந்த நாயகன் மறைந்த தினம் ஜூன்15இன்று.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக