நண்பர்கள்

6 ஜன., 2015

காலங்கள்

(நன்றி Jothidar Vidyamaniap)
நமது முன்னோர்கள் ஒரு நாளை எட்டு காலங்களாக
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிரித்திருக்கிறார்கள்..அதை நாமும் தேரிந்துகொள்வோம்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை-- "பிரம்ம முகூர்த்தம்".

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை-- "தேவர்கள் காலம்."

முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை--"ரிஷிகளின் காலம்."

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை--"பிதுர்க்களின் காலம்."

பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை--"சந்தியா காலம்."

முன் இரவு 6 மணி முதல் 9 வரை--"பூத காலம்."

நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை--"பிரேத காலம்."

பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை--"ராக்ஷச காலம் "

இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக