(நன்றி Jothidar Vidyamaniap)
நமது முன்னோர்கள் ஒரு நாளை எட்டு காலங்களாக
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிரித்திருக்கிறார்கள்..அதை நாமும் தேரிந்துகொள்வோம்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை-- "பிரம்ம முகூர்த்தம்".
அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை-- "தேவர்கள் காலம்."
முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை--"ரிஷிகளின் காலம்."
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை--"பிதுர்க்களின் காலம்."
பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை--"சந்தியா காலம்."
முன் இரவு 6 மணி முதல் 9 வரை--"பூத காலம்."
நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை--"பிரேத காலம்."
பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை--"ராக்ஷச காலம் "
இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.
உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.
ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.
பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.
நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக