நண்பர்கள்

6 ஜன., 2015

சமய தத்துவங்கள்

(நன்றி Srilanka hindu)

ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக்கொள்வான். நாவிதனார் தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்ற செய்து மூன்று ஓட்டை இட்டு, 'அப்படியே உடைத்து திரும்பி பார்க்காமல் போ' என்பார்.

தண்ணீர் குடம் என்பது சாரீரம். அதி நிறைந்த தண்ணீர் ஜீவான்மா. முதலில் இட்ட ஓட்டை தனெஷனை (பணத்தாசை), இரண்டவது இட்ட ஓட்டை தாரெஷனை (மனைவி மேல் வைத்த ஆசை) , மூன்றாவது இட்ட ஓட்டை மக்கள் மேல் வைத்த ஆசை. இந்த மூன்று ஆசைகளாகிய ஓட்டைகளின் வழி சரிரதிலிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்திவிட்டது. இந்த ஆசாபாசத்தை திரும்பி பாராமல் நீ அறநெறியில் செல்வாயாக என்ற குறிப்பை நவிதனார் காட்டுகிறார்.

நம் முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்தமற்றவை என்று தல்லாமல் நுனித்து உணர்வது மதிடமை ஆகும்.

இந்த ஆன்மாக்களுக்கு செய்யும் வழிபாடுகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிகடனாகும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை - திருக்குறள், (அறத்துப்பால்-43)

- சமய தத்துவங்கள் ஐநூறு நூலிலிருந்து

காலங்கள்

(நன்றி Jothidar Vidyamaniap)
நமது முன்னோர்கள் ஒரு நாளை எட்டு காலங்களாக
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிரித்திருக்கிறார்கள்..அதை நாமும் தேரிந்துகொள்வோம்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை-- "பிரம்ம முகூர்த்தம்".

அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை-- "தேவர்கள் காலம்."

முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை--"ரிஷிகளின் காலம்."

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை--"பிதுர்க்களின் காலம்."

பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை--"சந்தியா காலம்."

முன் இரவு 6 மணி முதல் 9 வரை--"பூத காலம்."

நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை--"பிரேத காலம்."

பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை--"ராக்ஷச காலம் "

இதில் பிரம்ம முகூர்த்த காலத்தில் யாவற்று சுபகாரியங்களும் திதி,நக்ஷத்ரம் ,சரியில்லாவிட்டாலும் செய்யலாம்.

உதய காலம் தேவர்களுடையதால் வேளையும், நக்ஷத்ரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷிகளின் காலத்தில் நற்காரியங்கள் செய்ய நல்ல ஓரை,திதி, நக்ஷத்ரம் , வேளை அடுத்தபடியாகவும், தேர்ந்து செய்ய வேண்டும்.

பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும் , நக்ஷத்ரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலத்தில் மனித விருப்பங்கள், கேளிக்கைகள் போன்ற எக்காரியமும் செய்யாது, இறை வழிபாட்டிற்கும்,ஜெபம், தவம், போன்றவற்றை மட்டுமே செய்ய வேண்டும்.

நடுப்பகல் சரியாக 12 மணி அல்லது , நடு இரவு சரியாக 12 மணியில் எந்தக் காரியத்தையும் துவங்கவோ , முடிக்கவோ கூடாது.

கோலம் செய்யும் ஜாலம்

நன்றி Srilanka hindu
தோரண வாயில்
விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.

விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?

காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது 'மாவிலைத் தோரணம்' என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?

விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். 'கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்' என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.

மாவிலைத் தோரணத்துக்கும் சுற்றுப்புறத்தூய்மைக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது! இல்லாமலா தோரணம் கட்டுவார்கள்?

மாவிலைகள் 'புரோஹிஸ்பிடின்' என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் 'புரோஹிஸ்பிடின்' வாயு அழிக்கிறது.

மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

இப்போது, மாவிலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் தோரணம் கட்டுகின்றார்கள். அவர்கள் பின்னோர்கள். பிளாஸ்டிக் தோரணத்தினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை.
தினந்தோறும் இல்லங்களில் மாவிலைத் தோரணம் கட்டினால் இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம்.

வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும்.
வண்ணக்கோலம்

அழகு செய்வது, அழகுக்கு அழகு செய்வது நாகரிகத்தின் இயல்பு. செய்யும் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். காரணம் தெரியாமல் காரியம் செய்வது அறியாமை. காரணத்துக்காகக் காரியம் செய்வது அறிவுடைமை.
தூய்மைக்காக வீட்டைச் சுத்தம் செய்கிறோம். காற்றின் மூலம் வருகின்ற தூசுகளை, மாசுகளைத் தடுக்க ஜன்னல் கதவுகள் இடுகிறோம். ஜன்னலுக்குத் திரைச் சீலையிடுகிறோம். சுவரில் சுண்ணாம்பு பூசுகிறோம். சுவரில் பூசப்படுகின்ற சுண்ணாம்பு வீட்டுக்கு புகுந்துள்ள நுண்ணிய நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது.
சிங்காசனம், மயிலாசனம், மெத்தை இருக்கை, சூழல் இருக்கை, ஆடும் இருக்கை போன்று பல வகையான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஆனந்தமடைகிறோம்.
இவை, கண்ணுக்கு அழகாகத் தோன்றுவதுடன் மனதுக்குள் சில மாற்றங்கள் தருகின்றன.
மனத்துக்குள் ஏற்படும் மாற்றங்களால் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன.
அலங்காரங்களினால், வீட்டுக்குள் இருப்பவர்களின் நலன்கள் பாதிக்காமல், பாதுகாக்கப்பட வேண்டும்.

பழந்தமிழர் நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள் இல்லத்திலுள்ளவர்களின் நலனைப் பாதுகாக்கும் முறைகள் பல. அவற்றில் ஒன்று, வண்ணக் கோலம்.
பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் வாசலைப் பெருக்கிப் பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிப்பர். இது, சுகாதாரத்துக்காக மட்டும் செய்யப்படுவதல்ல! வீட்டின் முன்னும் பக்கங்களிலும் புற வாசலிலும் தெளிக்கப்படுகின்ற பசுஞ்சாண நீர், அந்த வீட்டுக்குள்ளே காற்றினாலும், தூசியினாலும், வீட்டுக்குள் வருவோர்காளாலும் படையெடுக்கிற நோய்க்கிருமிகளைத் தடுக்கின்றது.

பசுஞ்சாண நீர் ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டது. அம்மை நோய், காலரா, வைசூரி போன்ற நோய் பரவுவதைப் பசுஞ்சாண நீர் தடுக்கும்.

வீட்டினுள் முன் வாசலில் கோலமிடுவர். இந்தக் கோலம் கண்டபடி கண்டவாறு போடப்படுவதில்லை. வார நாள்களுக்குப் பொருத்தமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமிடுவர். அக்கோலம், முக்கோண வடிவில், நாற்கோண வடிவில், வட்ட வடிவில், பதினாறு கோண வடிவில் இருக்கும்.

பெண்கள் இடுவது கோலமாக இருந்தாலும் அவை வீட்டிலுள்ள மக்களைக் காக்கும் யந்திர சக்ரமாகும்.

வீட்டின் முன்னே இடப்படுகின்ற கோல யந்திர சக்கரங்கள் அந்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும், வீட்டுக்குள் நுழையும் போதும் அவர்களுக்கு எந்த தீதும் நடந்து விடாதவாறு பாதுகாக்கும்.

வீட்டிலிருக்கும் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ சில இடங்களுக்குச் செல்வர். சில பொருள்களைத் தொடுவர். அந்த இடங்களிலிருக்கும் தீய சக்திகள் குழந்தைகள் நலனைக் கெடுத்துவிடாமல் பாதுகாக்கும்.

கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூவை வைப்பதுண்டு. இப்பூசணிப்பூ மற்றவர்களால் திருஷ்டி கண்ணேறு படாமல் பாதுகாக்கும். பூசணிப்பூவின் மஞசள் வண்ணத்துக்கு அத்தகைய சக்தி உண்டு.

இப்பழக்கம் காலங்காலமாக நடந்து கொண்டு வருகின்ற பண்பாட்டு முறையாம்.
ஆனால், இன்றைய நாகரிக வளர்ச்சியில் எல்லாமும் போலித் தனங்கள். கோலமிடும் பெண்கள் குறைந்து போனார்கள். கோலங்கள் போடாமல், ஏதோ ஒரு கோலத்தை வண்ணத்தில் எழுதி வாசல் முன்னே ஒட்டிக் கொள்கின்றார்கள்.

வார நாள்கள் ஏழும் ஏழு கோள்களின் ஆதிக்கத்தைக் குறிப்பதாகும். ஒரு நாளில் இருக்கும் ஆதிக்கம் மறுநாள் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு கோலங்களை மாற்றி மாற்றிப் போடுவதனால், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிட்டு, பிளாஸ்டிக் கோலங்களை ஒட்டி வைத்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

விருப்பமூட்டி எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமானாலும், அந்தக் காரியத்தில் எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தக்காரியம் வெற்றி பெறும். விருப்பமில்லாமல் செய்யும் காரியம் விருத்தியடையாது. அதைப்போல, வாழ்க்கையில் எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ அந்த அளவுக்கே வாழக்கையும் இருக்கும். அதாவது 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' என்கிறது, வள்ளுவம்.

வாழ்க்கையில் விருப்பத்தை ஊட்டக்கூடிய பல செயல்கள் நிகழ்ந்திருக்கும். நிகழ்ந்து கொண்டிருக்கும். அந்த விருப்ப மூட்டும் செயல்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், பலர்.
காதலும் ஒருவகையான விருப்பமூட்டி தான். காதலுக்காக வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் இருக்கக் காணலாம்.

விருப்பமூட்டக்கூடிய காதலைப்போல, ஒரு பழம் இருக்கிறது. அதற்கு விருப்பமூட்டி என்றே பெயரும் உண்டு. அப்பழத்தை எல்லாவிதமான காரியத்துக்கும் பய்னபடுத்துவர்.
களைப்பாகவோ உடம்பு வெப்பமாகவே இருந்தால் அப்பழத்தைப் பிழிந்து சாறு அருந்துவர். உடல் சூட்டைத் தணிக்க தலைக்குத் தேய்த்து குளிப்பர். தோஷமோ திருஷ்டியோ இருந்தால் அதற்குப் பயன்படுத்துவர். மந்திர தந்திரங்களுக்குப் பயன்படுத்துவர். எந்தப்பழம் என்று இன்னும் தெரியவில்லையா?

எழும் இச்சைப் பழம் தான் அது! எலுமிச்சை பழம் என்று ஆகிவிட்டது.
எலுமிச்சையினால் என்ன நன்மையென்று பட்டியலிட்டால் மயக்கமே வந்துவிடும். அந்தஅளவுக்கு அப்பழத்தினால் அடையக்கூடிய நன்மைகள் இருக்கின்றன.
எலுமிச்சைப் பழத்தில் 12 விதமான சத்துகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் செயப்£ட்டை நன்கு இயக்குவதுடன் அந்த உறுப்புகளில் குறைபாடுகள் ஏதாவது இருந்தாலும் அவற்றையும் சரிசெய்கிறது.
எலுமிச்சை சாற்றினால் இதயம் சக்தி பெறுகிறது. கிட்னியை நன்றாகச் செயல்பட வைக்கிறது. உடலுக்கு வலுவைத் தருகிறது. உடல் உறுப்புகளின் இயங்கும் தினை அதிகரிக்கும். உணர்வு நரம்புகளைப் பலப்படுத்துகிறது. மூளையின் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. நுரையீரலை வலுவாக்குகிறது. திசுக்களை இயக்குகிறது. ரத்தத்தைச் சுத்திப்படுத்தி வீறுபெறச் செய்கிறது. சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. சோகையைப் போக்குகிறது. சுவாசத்தைச் சீராக்குகிறது.

இத்தகைய சக்திகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் எலுமிச்சை, அஜீரணத்தைப் போக்கி சீரணத்தை அதிகரித்து அதிக உணவை உண்ண விருப்பத்தை ஏற்படுத்துகிறது.
பசிக்கும்போது உண்ண உணவில்லாவிட்டாலும் ஒரு பழம் ஒருவேளை உணவுக்குச் சமம் என்கிற வகையில் உணவாகவும் ஆகிறது.
எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து அருந்தி வந்தால் அதுவே காயகற்பமாகவும் ஆகிறது. உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கி, நோயகற்றும் மருந்தாகவும் ஆகிறது.
உடம்பில் நோய் வந்தால், எலுமிச்சைச் சாறு மட்டுமே அருந்தி குணமாக்கலாம். வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் 10&15 தடவை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கிவிடும்.
உடம்பிலுள்ள கொழுப்பை அகற்ற எலுமிச்சைச் சாற்றை உணவாக உட்கொள்ளலாம். உடம்பின் எடை, ஊளைச் சதை, தொந்தை, தொப்பை, இடைபெருந்து இருப்பவர்கள் எலுமிச்சையை உணவாக உட்கொண்டால் விரைவாகப் பயன்பெறலாம்.
எலுமிச்சைச் சாறு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு ஒரு மண்டலம் வரை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, உடம்பிலுள்ள குற்றங்கள் அனைத்தும் நீங்குவதுடன், உடம்பில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தெம்பும் புத்துணர்வும் தோன்றுவதைக் காணலாம்.
அதன்பின், வாழவேண்டும் என்னும் விருப்பத்துக்கு அளவேது! அதனால்தான், எலுமிச்சம் பழத்துக்கு விருப்பமூட்டி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இயற்கையே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு வைத்திருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் குருடர்களாக இருக்கிறோம். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளவேண்டும். இயற்கையை மட்டும் நம்பினால் ஆரோக்கியம் வந்து விடாது. நமது அன்றாடப் பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அவற்றைப் பற்றி இனி பார்க்கலாம்.

4 ஜன., 2015


நன்றி. Srilanka hindu
ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்