இன்று நாம் கடைகளில் வாங்கும் நெய் எதுவுமே நெய் அல்ல. அவை பால் கொழுப்பு. பாலை அரைத்து கொழுப்பை பிரித்து செய்யப்படுவது. உடலுக்கு மிகவும் தீங்கானது. எனவேதான் தயிரைவிட மோர் மிகச் சிறந்தது என்று சொல்வது.
தயிர், வெண்ணெய் என்ற மாற்றங்கள் கண்டு வருவதே நெய். அதை பஞ்சகர்ண சுத்தி என்பார்கள். நெய் உடலுக்கு மிகவும் நல்லது, மோரும் நெய்யும் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். சங்க இலக்கியங்களில் அக்கால மக்கள் சமைக்கக் கூட நல்லெண்ணெயும் நெய்யும் மட்டுமே பயன்படுத்தியதை அறியலாம். அபிசேகம் விளக்கு போடுவது போன்ற பணிகளுக்கும் பஞ்சகர்ண சுத்தி செய்த நெய்தான் பயன்படுத்த வேண்டும். மருத்துவ பயன்பாட்டிற்கும், பஞ்சகவ்ய தயாரிப்புகளுக்கும் இதேதான். மேற்சொன்ன பால், நெய் தயிர் அனைத்துமே நாட்டு பசுவின் பொருட்களை மட்டுமே குறிக்கும். சீமை மாடுகள் பசு என்ற பேருக்கே பொருந்தாது. எனவே ஆன்மிகம் மருத்துவம் உணவு என்று எதிலும் சேர்க்கக்கூடாத விஷமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக