நண்பர்கள்
12 மார்., 2016
சுபாஷிதம் - அல்லது நீதிக்கோவை
நன்றி :
http://sundarjiprakash.blogspot.in/2013/07/blog-post_2013.html?m=1
சுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப் புராதனமான வடிவத்தில் சான்றோர்களின் அனுபவங்கள் ச்லோகங்கள் போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சு என்றால் நல்லவிதமாக என்றும், பாஷிதம் என்றால் சொல்லப்பட்டவை என்றும் பொருள் சொல்லலாம். நீதிக்கோவைகள் என்று தமிழில் சொல்லலாம். ஆத்திசூடி, உலகநீதி போன்ற வடிவங்கள் எல்லாம் இதிலிருந்தே பிறந்தவை என்று கருத இடமிருக்கிறது.
சமஸ்க்ருதத்தின் பர்த்ருஹரி துவங்கி, சாணக்கியர், காளிதாஸர், பவபூதி, சோமதேவ பட்டர், கல்ஹணர், வேதாந்த தேசிகன் வரையிலும் பலரும் இவ்வடிவத்தில் எழுதியிருக்கின்றனர்.
பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும் இந்த சுபாஷிதத்தை மிக விரிவாக உபயோகித்திருக்கின்றன. சுபாஷிதத்தின் வேர்களோ ராமாயணம், மஹாபாரதம், கீதைகள் போன்ற தொன்மையான விருக்ஷங்களின் அடியில் தென்படுகின்றன.
எழுதியவர்களின் பெயர்கள் அற்று நாலடியார் போன்று ஒரே தொகுப்பாக என் கையில் இருக்கும் 400 ச்லோகங்களைக் கொண்ட சுபாஷிதத்தின் மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்காக.
பிழைகளுக்கு உ(ஆ)ட்பட்டவன் நான். திருத்துங்கள் தேவைப்படும் இடங்களில். திருத்திக் கொள்கிறேன்.
சுபாஷிதம்
1.
அக்னி: சேஷம் க்ருணா: சேஷம் ஷத்ரு: சேஷம் ததைவ ச
புன: புன: ப்ரவர்த்தேத தஸ்மாத் சேஷம் ந கார்யேத்
நெருப்பு, கடன், பகை இம்மூன்றும் சிறிது எஞ்சினாலும் மீண்டும் வளரும். ஆகவே முற்றிலுமாய்த் தீர்க்கப்பட வேண்டும்.
2.
ப்ருத்வீவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசங்யா பர்தீயதே
பூமியின் மூன்று ரத்தினங்கள் நீர், அன்னம், சுபாஷிதம். முட்டாள்களோ கற்களை ரத்தினம் என்பார்கள்.
3.
ந அபிஷேகோ ந சம்ஸ்கார: ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜிதஸ்த்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்ரதா
வன ராஜ்யத்தில் சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம் நடப்பதில்லை; தன் சுய பராக்கிரமத்தாலேயே அது ராஜாவாகிறது.
4.
வனானி தஹாதோ வன்ஹே ஸகா பவதி மாருத:
ஸ ஏவ தீப நாஷாய க்ருஷே கஸ்யாஸ்த்தி சஹ்ருதம்
வனத்தில் தீப்பற்றினால் பரவ உதவும் காற்று அகலின் சுடரை அவிக்கிறது. சக்தி அற்றோருக்கு நட்பில்லை.
5.
வித்யா விவாதாய தனம் மதாய ஷக்தி: பரேஷாம் பரிபீடனாய
கலஸ்ய: ஸாதோ: விபரீதம் ஏதத் க்ஞானாய தானாய ச ரக்ஷணாய
துர்மதி படைத்தவனின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவனுக்கோ அவன் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.
6.
துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரேதனம் பலம்
பலம் மூர்க்கஸ்ய மௌனித்வம் சௌராணாம் அந்ருதம் பலம்
அரசன் நலிந்தோரின் பலம்; அழுகை குழந்தையின் பலம்;
மௌனம் மூர்க்கனின் பலம்; பொய்யுரைப்பது கள்வனின் பலம்.
7.
அஷ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச
அஜாபுத்ரம் பலிம் ததாத் தேவோ துர்பலகாதக:
குதிரையோ, யானையோ, புலியோ அல்ல; அல்லவே அல்ல; ஆட்டுக்குட்டியே வேள்வியில் பலியிடப்படுகிறது; நலிந்தோரைக் கடவுளும் காப்பதில்லை.
8.
அஷ்டாதஷ புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்
பதினெட்டுப் புராணங்களிலும் வியாஸர் சொல்லும் சாரம் இதுதான்; பிறர்க்கு உதவுவது புண்ணியம். பிறரைத் துன்புறுத்துதல் பாவம்.
9.
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே
இமயம் முதல் குமரி வரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
10.
ஏதத்தேஷ ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா:
பூமியில் பிறந்த எல்லா மக்களும் இந்த நாட்டின் ரிஷிகளும், முனிகளுமான முன்னோர்களின் வரலாற்றிலிருந்து தத்தமது பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
11.
அயம் நிஜ: பரோ வேதி கணனாலகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்
நம்மவன்; பிறத்தியான் என்ற வேற்றுமை குறுக்கு புத்தியுடைவனது; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பான் பரந்த மனமுடையவன்.
12.
க்ஷணஷ: கணஷ்சைவ வித்யாம் அர்தம் ச சாகயேத்
க்ஷணே நஷ்டே குதோ வித்யா கணே நஷ்டே குதோ தனம்
பெறும் ஒவ்வொரு நொடியும் கற்கவும், ஒவ்வொரு கணமும் சம்பாதிக்கவும் செய்; இல்லையேல் ஒவ்வொரு நொடியும் கல்வி இழப்பு; ஒவ்வொரு கணமும் செல்வம் இழப்பு.
13.
அஷ்வஸ்ய பூஷணம் வேகோ மந்தம் ஸ்யாத் கஜபூஷணம்
சாதுர்யம் பூஷணம் நார்யா உத்யோகோ நரபூஷணம்.
வேகம் குதிரைக்கும், மந்தநடை யானைக்கும், புத்திசாலித்தனம் பெண்ணுக்கும், வேலை ஆணுக்கும் அணிகலன்கள்.
14.
க்ஷுத், த்ருர்த், ஆஷா: குடும்பின்ய மயி ஜீவதி ந அன்யகா:
தாஸாம் ஆஷா மஹாஸாத்வீ கதாசித் மாம் ந முஞ்சதி
பசி, தாகம், ஆசை இம்மூன்றும் மனிதனின் மூன்று மனைவிகள்; அவன் மறையும் வரை இம்மூன்றும் அவனைப் பிரியாது. அதிலும் ஆசை என்பவள் 'மிகப் பொறுமைசாலி'. ஒருபோதும் அவனைப் பிரியமாட்டாள்.
15.
குலஸ்யார்த்தே த்யஜேதேகம் க்ராம்ஸ்யார்த்தே குலம்த்யஜேத்
க்ராம் ஜனபதஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்.
உன் சுய விருப்பத்தைக் குடும்பத்துக்காகவும், உன் குடும்பத்தை உன் ஊருக்காகவும், உன் ஊரை உன் நாட்டுக்காகவும் தியாகம் செய்யலாம். உன் ஆத்மாவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம்.
16.
நாக்ஷரம் மந்த்ரஹீதம் நமூலம்நௌஷதிம்
அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்ர துர்லப:
மந்திரமாகாச் சொல்லுமில்லை; மருந்தாகா வேருமில்லை; உபயோகமில்லா மனிதனுமில்லை; பொருத்தம் அறிந்து உபயோகிப்பவர்கள்தான் அரிது.
17.
தாரணாத் தர்மமித்யாஹு:தர்மோ தாரயதே ப்ராஜா:
யஸ்யாத் தாரணஸம்யுக்தம் ஸ தர்மோஅதிநிஷ்சய:
'தாரணா' எனும் சொல்லில் இருந்து பிறந்தது தர்மம்; தர்மமே சமுதாயத்தை இணைக்கிறது. ஆக, எந்த ஒன்று சமுதாயத்தைச் சேர்த்துப் பிணைக்குமோ அதெல்லாம் நிச்சயம் தர்மமே.
18.
ஆஹாரநித்ராபயமைதுனம் ச ஸாமான்யமேதத் பஷுபிர்நராணாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோவிசேஷோ தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:
உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி இவை நான்கும் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவானவை; தர்மத்தாலேயே மனிதன் மிருகத்தினின்றும் வேறுபடுகிறான்.
19.
ந வா அரே மைத்ரேயீ பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி
ஆத்மனஸ்து காமாய பதி: ப்ரியோ பவதி
ஓ மைத்ரேயீ! ஒருவன் மனைவியால் நேசிக்கப்படுவதற்குக் காரணம் அவன் கணவன் என்பதால் அல்ல; அவன் உள்ளே இருக்கும் ஆத்மாவே காரணம்.
20.
ஸத்யஸ்ய வசனம் ஷ்ரேய: ஸத்யாதபி ஹிதம்வதேத்
யத்பூதஹிதமத்யந்தம் ஓதத் ஸத்யம் மதம் மம
உண்மையே அறிவுறுத்தப்படுவது; ஆனாலும் எல்லோரின் நன்மையையும் உத்தேசித்தே அது சொல்லப்பட வேண்டும்.
என்னைப் பொருத்து பரந்த சமுதாயத்துக்கு எது நன்மை பயப்பதோ அதுவே உண்மை.
11 மார்., 2016
9 மார்., 2016
7 மார்., 2016
நூல் அறிமுகம்-- பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
நூல் அறிமுகம்
பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்
ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை.
பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.
இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும்.
இதற்கு இணையான நகைச்சுவையை அளிப்பவர்கள், இவர்களுடன் மல்லுகட்டும் கம்யூனிச எதிர்ப்பு வீரர்கள். கைய பிடிச்சு இழுத்தியா கதையாக, இருவரும் மாறி மாறி சம்பந்தமில்லாமல் பேசிக்கொள்வதைப் படிப்பதுதான் ஒரு காலத்தில் எனக்குப் பெரிய பொழுது போக்காய் இருந்தது. இருவருக்கும் தெரியும் அடுத்தவரை மாற்ற முடியாது என்று இருந்தும் விடாமல் பேசுவது, சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பது என்பது, படித்தால் தெரியும் அதன் சுவாரஸ்யம். கடைசியில் ஒருவரி ஒருவர் கிண்டலாகவும், கேலியாகவும் வசைபாடுவதில் முடியும். கேள்வி கேட்டவனை பர்சனலாக திட்டுவதே வாதத்திறமை, வெற்றி என்பதே இவர்களின் முடிவு.
இவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு விஷயம் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மறுபக்கம், அவர்களின் படுகொலைகள். ஒருவர் ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர் என்றால், மற்றொருவர் வந்து அவரின் மறுபக்கம் என்று பட்டியலிடுவார். அவர் மீண்டும் வந்து அது புளுகு என்று நம்மைத் தெளியவைப்பார். இப்படி மாறி மாறி உண்மைகளைக் கூறி நம்மைக் குழப்புவார்கள், கடைசி வரை உண்மை தெரியாது. முழுவதும் எனக்குத் தெரியவைத்தது இப்புத்தகம். படித்து முடித்த பின் தோன்றியது நல்ல வேளை இவர்கள் நமது நாட்டு ஏழைகளை ரட்சிக்கப் புறப்படவில்லை என்பதுதான். ஹிட்லரின் படுகொலைகளைக் கூட சாதரணமாக்கிய படுகொலைகளைத் தந்தது கம்யூனிசம் என்பதே இப்புத்தகம் காட்டும் பிம்பம்.
அரவிந்தன் நீலகண்டனின் எழுத்துக்களை பல ஆண்டுகளாக படித்து வருகின்றேன். திண்ணையில் அவர் எழுதியது, இப்போது தமிழ் ஹிந்துவில். மதச்சார்பின்மை என்ற பெயரில் போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு தர்ம அடி தந்துவிட்டும் போகும் இடத்தில், இவரை போன்ற ஒருவர் தேவை. சரியான ஆதாரங்களுடன், தர்க்க ரீதியாக ஒரு கருத்தை தெரிவிக்கும் இவரது படிப்பின் விசாலம் எப்போது என்னை வியக்க வைப்பது. இப்புத்தகத்தின் கடைசியில் தரப்பட்டுள்ள லிஸ்டை பார்த்தாலே தெரியும்.
அரவிந்தன் நீலகண்டன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இப்புத்தகம் அவரின் புளுகு மூட்டை என்று ஒற்றை அடியில் இதை தாண்டி சென்றுவிடுவார்கள். ஆச்சர்யம் இணையத்தில் எவனோ எதோ சொன்னான் என்று வரிந்து கட்டி கொண்டு பாயும் பலர், இப்புத்தகத்தை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. தேடி தேடி பார்த்தேன், இதை ஆதாரப்பூர்வமாக மறுத்து ஒரு வரி கூட இல்லை. காரணம் அ. நீ காட்டும் அனைத்து வரிகளும் அதிகாரபூர்வ, கம்யூனிச தலைவர்களின் வரிகள், கம்யூனிச அரசின் அறிக்கைகள், கடிதங்கள். எப்படி மறுக்க முடியும் என்று விட்டு விட்டார்களோ என்னவோ. இது உண்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கம்யூனிசத்தின் பிதாமகர்களில் ஆரம்பித்து இந்திய கம்யூனிச தலைவர்கள் வரை செல்கின்றது. மார்க்ஸின் மூல கம்யூனிச தத்துவமான முரணியக்கத்தின் மூல தத்துவம், அதன் வளர்ச்சி. மார்க்ஸ் / ஏங்கல்ஸ் அவர்களின் ஊருக்கு உபதேசத்திற்கும், சொந்த சோகக்கதைக்குமான முரணியக்கம்!. தத்துவத்தை வளைப்பது அங்கே ஆரம்பித்துவிட்டது.
ரஷ்யாவின் ஜார் மன்னர்களுக்கெதிரான விவசாயிகளின் புரட்சி, லெனின் அப்புரட்சியை அறுவடை செய்தது, பின்னர் அப்புரட்சியில் கம்யூனிசத்தை நுழைத்தது. லெனின் நடத்திய படுகொலைகள். ஜார் மன்னரின் குழந்தைகளைக் கூட கொன்றது. ஸ்டாலின் - லெனின் போர், ஸ்டாலினின் ஆதிக்கம், அவரின் படுகொலைகள். பஞ்சம். பஞ்சத்திற்கு அமெரிக்கவிடம் பிச்சை. ஹிட்லருடன் போர் ஒப்பந்தம். ஹிட்லரின் ஒப்பந்த மீறல். செம்படைகள் செய்த படுகொலைகள், மறைக்கப்பட்ட இடுகுழிகள். விவசாயிகளின் படுகொலைகள், வலுக்கட்டாயமாக அவர்களை இடப்பெயர்ச்சி செய்தது. மனித உழைப்பை சுரண்டி வளர்ச்சியை காட்டியது. அதன் பின்னால் இறந்த லட்சக்கணக்கான மக்கள். மாவோவின் ரத்த வெறியாட்டம். கலாச்சார புரட்சி என்று சாதுக்களை கொல்வது. விவசாயிகளை தொழிலாளர்களாக மாற்றியது. மீண்டும் பஞ்சம். காஸ்ட்ரோ ஒரு கம்யூனிஸ்டா? சேவின் மறுபக்கம், இந்திய புரட்சியாளர்கள் அந்நிய விசுவாசம், துரோகம்.
அங்கங்கு நகைச்சுவையும் உள்ளது. சீனாவில் குருவிகளை கொன்றது பின்னர் 2000 குருவிகளை இறக்குமதி செய்தது.
இதையும் அவர்கள் ஒருவரியில் கடந்து சென்று விடுவார்கள், இவர்கள் எல்லாம் உண்மையான கம்யூனிஸ்டுகளல்ல, போலிகள். அந்த குழுவிற்கு அவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகள், மற்றவர்கள் போலிகள். அவர்கள் கையில் ஆட்சி வந்தால் தேனும் பாலும் ஓடும். ஆனால் உண்மை எங்கெல்லாம் கம்யூனிசத்தின் கையில் அதிகாரம் சென்றதோ அங்கெல்லாம் ரத்த ஆறு ஓடி, பிணங்கள்தான் சேர்ந்துள்ளன என்று முடிக்கின்றார்.
கேட்கலாம், எப்படி அ.நீ கூறுவதை அப்படியே ஏற்று கொள்ள முடியும் என்று. ஒன்றும் தவறில்லை. இன்று நம் கலாசாரத்தையும், நமது புராணங்களையும், இதிகாசங்களையும், வரலாற்றையும் யாரோ எப்போதோ சொன்ன ஒன்றை வைத்துக் கொண்டு இத்தோழர்கள் தூற்றும் போது, நாமும் இதை அப்படியே நம்புவதில் தவறில்லை. மேலும் அ.நீ ஒரு பெரிய புத்தக லிஸ்டையே தந்துள்ளார். வேண்டுமானால் படித்துக் கொள்ளலாம். பிற்சேர்க்கையாக ஏகப்பட்ட தரவுகள். அதனால்தான் யாரும் மறுக்கவில்லை போல.
கிழக்கு பதிப்பகம் - இங்கே சென்று வாங்கலாம்.
http://rengasubramani.blogspot.in/2014/01/blog-post.html?m=1
6 மார்., 2016
5 மார்., 2016
பஞ்ச சிவராத்திரிகள்!
வி.ராம்ஜி
மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மகா சிவராத்திரி புண்ணியம் நிறைந்த பலன்களை வழங்கக் கூடிய மகத்துவம் வாய்ந்தது!
இன்னும் சில சிவராத்திரிகள் உண்டு.
நித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி. என்று அழைக்கப்படுகிறது.
மாத சிவராத்திரி : மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசி நாளே மாத சிவராத்திரி எனப்படுகிறது.
பட்ச சிவராத்திரி : தை மாதத்தில், தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூஜை செய்தல் பட்ச சிவராத்திரி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
யோக சிவராத்திரி: சோம வாரமும் அதாவது திங்கட்கிழமையும் அமாவாசையும் அறுபது நாழிகை இருந்தால், அன்றைய தினம் யோக சிவராத்திரி எனப்படுகிறது.
இந்த ஐந்து சிவராத்திரிகளிலும் விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி இல்லை என்கிறது புராணம்.
அனைத்து விரதமும் மேற்கொள்ள முடியாதவர்கள், மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்பதும் விடிய விடிய சிவ தரிசனம் செய்வதும் முக்தியைத் தந்தருளும் என்பது உறுதி!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com
4 மார்., 2016
சிவனே போற்றி! சிவராத்திரியே போற்றி!
வி.ராம்ஜி
மகா சிவராத்திரி! ஆதியும் இல்லாத அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய், பிரமாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகா சிவராத்திரி. மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது.
உலக மக்கள் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக, சிவனாரையும் உமையவளையும் வணங்கித் தொழவேண்டிய தினம். உலகம்மை, உலக மக்களுக்காக, சிவனாரை பூஜித்த திருநாள் இது!
பிரபஞ்சத்துக்கு பிரளயம் மிகவும் அவசியம். அப்போது உலகம், சிவனாரிடம் ஒடுங்கும். அப்படிப் பிரளய நாளில்... ஒடுங்கும் தருணமே சிவராத்திரி என்கிறது புராணம். அந்தநாளில் ஈசனைத் தவிர எவரும் இல்லை. அதேநேரம் சிவனாரில் பாதியான சக்தியும் உடனிருந்தாள் என்பதாகத் தெரிவிக்கிறது புராணம்!
இந்த நாளில்... முறைப்படி விரதம் இருந்து சிவனாரை வழிபடுவோம். சகல வளங்களையும் பெறுவோம்!
'இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி சிவனாரிடம் கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என வரம் தந்தருளினார் ஈசன்! எனவே, மற்ற நாளை விட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்!
சிவராத்திரி மகிமையை சிவனாரே நந்தியம்பெருமானுக்கு உபதேசித்தார். பின்னர் நந்திதேவர் சிவகணங்கள் அனைவருக்கும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்குமாக உபதேசித்தார்.
இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 9865442911 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com