நண்பர்கள்

22 அக்., 2015

அக்ஷ்பகுல்லாகான் & சசீந்திரநாத் சன்யால்

சச்சீந்திரநாத் சன்யால் காசியில் வசித்து வந்த வங்காளி. விவேகானந்தர் அரவிந்தர் வழியை பின்பற்றிய புரட்சியாளர். ஆன்மீகமும் புரட்சியும் ஒன்றே என்று எண்ணியவர். 1912-18ஆம் ஆண்டுகளில்'அனுசீலன் சமிதி' என்ற புரட்சி இயக்கக் கிளையை உத்திரப் பிரதேசத்தில் தொடங்கி வைத்தவர்.

தேசபக்த வீரரான ராக்ஷ் பிகாரி போஸின் சீடர்.
1919ல் முதல் உலகப் போரில் பிரிட்டன் வெற்றி கண்டதை அடுத்து இந்திய சிறையிலிருந்த அரசியல் கைதிகள் பலர் விடுதல் செய்யப்பட்டனர். அவர்களில் சன்யாலும் ஒருவர். 'பந்தி ஜீவன்' என்ற அவரது நூல் வங்காள இளைஞர் அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட புரட்சி இலக்கியம்.

இளைஞர்களின் மனக் குமுறலை அறிந்த சன்யால் 'ஹிந்துஸ்தான் குடியரசுச் சங்கம்' (HINDUSTAN REPUBLIC ASSOCIATION) என்ற அமைப்பை காசியில் தொடங்கி பல துடிப்பான இளைஞர்களையும், மாணவர்களையும் தயார்படுத்தினார்.

அதே சமயம் வங்கப் புரட்சியாளர் இருவர் காசிக்கு வந்து 'கல்யாண் ஆசிரமம்' என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தை நிறுவி புரட்சி இயக்கப் பணிகளை நடத்தி வந்தனர்.

அவர்கள் மன்மதநாத் குப்தா, அவரது தம்பி மன்மோகன் குப்தா. மேலும் அதில் ராம்நாத் பிஸ்மில், அக்ஷ்பகுல்லாகான், போன்றோரும் இருந்தனர். அதில் 20 வயது சந்திரசேகர ஆசாத்தும் உண்டு.

'புரட்சிக்காரன்' என்ற 4 பக்க பத்திரைக்கை ஒன்றை ரகசியமாக அச்சடித்து நாடெங்கும் அனுப்பினார் சன்யால். அதில்,

"இந்தியாவின் வீர இளைஞர்களே! சுதந்திரம் என்பது சும்மா வராது. புதிதாக ஒரு குழந்தையைப் பெற தாய் மரண வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்."

"புதிய சுதந்திர நாடு பிறக்க வேண்டுமெனில் அதற்கு விலையாக இரத்தம் சிந்தியே ஆக வேண்டும். அவசியமானால் நமது இன்னுயிரையும் தர வேண்டும்."

"அகிம்சையும், கோழைத்தனமும் நிச்சயம் கோழைத்தனத்தை பெற்றுத் தராது. வீரமும் தியாகமுமே பெற்றுத் தரும்."

"புரட்சிக் காரர்கள் வெறும் பயங்கரவாதிகளோ குழப்பக்காரர்களோ அல்ல. சுயநலம் அற்ற தேசநலம் ஒன்றையே பெரிதாக மதிக்கும் ஆண்களும், பெண்களுமாக சில ஆயிரம் பேர் தங்கள் உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கிவிட்டால் வலிமை மிக்க ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை ஒரு நொடியில் வங்கக் கடலில் தூக்கி எறிந்து விடலாம்"

மன்மதநாத் குப்தாவின் முயற்சியால் கல்யாண் ஆசிரம புரட்சியாளர்களும், ஹிந்துஸ்தான் குடியரசு சங்கத்தினரும் சன்யால் தலையில் ஒன்றாக செயல்பட முடிவெடுத்தனர். உத்திர பிரதேசத்தில் மட்டும் 23 கிளைகள் தொடங்கப்பட்டன.

புரட்சி வேலைகள் அதிகரிக்க அதிகரிக்க பணம் தேவைப்பட்டது. அரசாங்க பணத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது. 09-08-1925ல் லக்னோவிலிருந்து சகாரன்பூர் ஊருக்கு செல்லும் 8 வது பாசஞ்சர் வண்டியில் கொண்டு வரப்படும் பணத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது. வெற்றிகரமாக பணமும் கைப்பற்றப்பட்டது.

20-09-1925ல் கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து சன்யால், மன்மதநாத் குப்தா, ராம்பிரசாத் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்திரசேகர ஆசாத், அக்ஷ்பகுல்லாகான் ஆகியோர் தலைமறைவாயினர்.

இவர்கள் மேல் மேலும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்கு நடக்கும்போதே ஆசாத் தவிர இதர புரட்சியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

புரட்சியாளர்கள் சார்பில் பண்டிட் கோவிந்த வல்லப் பந்த் (பிற்காலத்தில் மத்திய உள்துறை அமைச்சர்), சி.பி.குப்தா (பிற்காலத்தில் உ.பி. முதல்வர்), கலிக்குஸ்ஸமான் போன்றோர் ஆஜராயினர்.

18 மாதங்களாக நடந்த இவ்வழக்கில் 06-04-1927ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அக்ஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங், ராஜேந்திரநாத் லஹரி ஆகிய நால்வர்க்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

மன்மதநாத் குப்தாவிற்கு 14 ஆண்டு சிறை, சன்யால், ஜோகேஸ் சந்திர சட்டர்ஜி உள்ளிட்ட ஐவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

17-12-1927ல் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி ஆகியோர் கோரக்பூர் சிறையிலும், 19-12-1927ல் அலகாபாத் சிறையில் தாக்கூர் ரோசன் சிங்கும், பைசாபாத் சிறையில் அக்ஷ்பகுல்லாகானும் தூக்கிலிடப்பட்டனர்.

அக்ஷ்பகுல்லாகான் தான் தூக்கிலிடப்படும்போது ஒரு கையில் புனித நூலான திருக்குரானையும் தனது புரட்சியாள நண்பர்கள் நினைவாக ஒரு கையில் பகவத் கீதையையும் வைத்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்ன் பாலபாரதி வெளியிட்ட 'அக்ஷ்பகுல்லாகானின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

"இந்த பத்தான் தேசபக்தர், தூக்குக் கயிறை, வாயில் அல்லாவின் நாமத்துடன் முத்தமிட்டார். இரும்பு உடலும், எஃகு உறுதியும் கொண்ட இந்த இளைஞர் தன் அனைத்தையும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்தார்.

'இறைவன் எனக்கு நீதி அளிப்பான்' என அமைதியாகக் கூறிய அந்த இளைஞனின் தெளிவான பிரார்த்தனை தூக்கு மேடையில் தெளிவாக ஒலித்தது. 'லா இல்லாஹி இல் அல்லாஹ், முகமது உர் ரசூல் அல்லா'. தூக்கு கயிறு இறுக்கப்பட்டது. அக்ஷ்பகுல்லாகான் என்றும் அழியா மகாத்மாக்களின் வரிசையில் ஒருவரானார்

15 அக்., 2015

முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை - 12–10–2015—நமது பித்ருக்கள் நம்மை ஆசிர்வதிக்கும் நன்நாள்...... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.

அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.

அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்...
மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங் களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படு கிறது.

இது பிதுர் தேவதைகளுடைய திருப்தி யின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை சிறப்பு வாய்ந்ததாகும்.

தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன்களைச் செய்வது சாலச்சிறந்தது.

சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலஷேத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.

தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படு கிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங் களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபாவசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார் களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.

A.P.VidyaMani,
AstroAnalyst & Gemologist
9943394405

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
Mohan Raj

மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.

இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -

யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -

அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "

(சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).

குரு கோவிந்த் சிங். ++++++++++++++++++

நன்றி..
> Mohan Raj
>
> மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, இந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.
>
> இந்து தர்மத்தின் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! -
>
> யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட -
>
> அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கை விட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.. "
>
> (சுவாமி விவேகானந்தர், கொழும்புவிலிருந்து அல்மோரா வரை - இந்துமதத்தின் அடிப்படைகள் - லாகூரில் பேசியது).

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

நன்றி Satheesh T

இந்த உலகிற்க்கு
முதன்முதலில் அறுவை
சிகிச்சையை
அறிமுகப்படுத்தியவர்கள்
'இந்துக்கள்'
அறுவை சிகிச்சையின் தந்தை
சுஸ்ருதர் (காலம் கி.மு. 600)
...
சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
மருத்துவமாமேதை. இவர்
ரிஷி விஸ்வாமித்திரருக்குப்
பிறந்தவர். உலகின் முதல்
அறுவை சிகிச்சை கலைக்
களஞ்சியமான "சுஸ்ருத
சம்ஹிதையை" மனித
சமுதாயத்திற்க்கு
வழங்கியவர். மயக்க மருந்து
அறிவியல் மற்றும்
பிளாஸ்டிக் சர்ஜரியின்
தந்தையாகப்
போற்றப்படுபவர்.
.
இவர் தமது சுஸ்ருத
சம்ஹிதையில், பன்னிரண்டு
விதமான எலும்பு
முறிவுக்கும், ஆறு விதமான
மூட்டு நகர்வகளுக்கும்
உண்டான மருத்துவ
முறையை விளக்கிருக்கிறார்.
125 விதமான அறுவை
சிகிச்சை கருவிகளை
உபயோகப்படுத்தியுள்ளார்.
இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண
சிகிச்சைக்கான
சிறிய கத்திகள், இரட்டை
விளிம்பு கத்திகள், வடிக்கும்
ரப்பர் குழாய் மற்றும்
மலக்குடல் சீரமைப்புக்
கருவிகள் போன்றவை
விலங்கு மற்றும்
பறவைகளின் தாடை
எளும்புகளில் இருந்து
வடிவமைக்கப்பட்டவை.
.
இவர் மேலும் பல்வேறு
தையல்
முறைகளைப்பற்றியும்
விளக்கியுள்ளார்.
குதிரையின் முடி,
மரப்பட்டைகளின் இழை,
நரம்பு போன்றவற்றை
நூலாக்க்
கொண்டு தைத்திருக்கிறார்.
சுஸ்ருத சம்ஹிதையில், 300
விதமான அறுவை
சிகிச்சை முறைகள்
விளக்கப்பட்டுள்ளன.
ஆச்சார்யர் சுஸ்ருதர்,
மருத்துவ
உலகின், குறிப்பாக அறுவை
சிகிச்சையின் மாமேதை
என்று
போற்றப்படுகிறார்.

பிரதோஷ விரத மகிமை

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.