நண்பர்கள்

20 மே, 2013

தென்கச்சி கோ.சுவாமிநாதன் வாக்கு




# படித்ததில் பிடித்தது #

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.

இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் 

இல்லை.

எப்படி அக்கரைக்குப்போவது?



இந்த நேரத்தில்ஒரு காளை மாடு அங்கே வந்தது.

அதுவும் அக்கரைக்குப்போக வேண்டும்.

ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. 

அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப்

பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில்

குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக்கெட்டியாகப் பிடித்துக்

கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச்சென்று அக்கரையில்

சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று 

எதிர்பார்த்தான்.



இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.

இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில்

விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக்

கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக்

கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை.

திணறியது.

ஒரு கட்டத்தில் நாய், வாள்... வாள்’ என்று கத்த

ஆரம்பித்து விட்டது. விளைவு _

இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்

கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.

சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.

சிலர் காளையின் வாலைப்பிடித்துக்கொள்கிறார்கள். சிலர்

நாயின் வாலைப் பற்றிக்கொள்கிறார்கள்.





ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா?

நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா?

அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.

ஏற்கெனவே பற்றிக்கொண்டிருப்பதை எல்லாம்

விட்டு விடுங்கள்!




ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.

உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற

ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப்

பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை.

நடு ஆற்றில் போராடிக்கொண்டிருக்கிறான்.

கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர

முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான்

இதை எப்பவோ விட்டுட்டேன்...

இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது

. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே.

கரடிக் குட்டி!’’





தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.

சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.

பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!


நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

பகிர்ந்தவர்

https://www.facebook.com/Relaxplzz1

ஆர்,எஸ்,எஸ் பேரியக்கம்




கேரளாவின் அலுவா என்னும் பகுதியில் புனித ஜோஸஃப் சர்ச்சைச் சேர்ந்த ஃபாதர் வின்ஸெண்ட் குண்டுகுலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஒரு பி.ஹெச்.டி படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். அவர் தன்னுடைய “ஆர்.எஸ்.எஸ். - எந்து?எங்கோட்டு?” (ஆர்.எஸ்.எஸ். – என்ன? எங்கே செல்கிறது?) என்னும் ஆராய்ச்சிப் புத்தகத்தில், “ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவரின் ஒழுக்கமும், ஈடுபாடும், எளிமையான வாழ்க்கை முறையும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேராபத்துக்களின் போது அவர்கள் செய்யும் சேவைகளும் மிகவும் பாராட்ட்த் தக்கன. ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத இயக்கம் அன்று. மத்த்தின் பேரில் மக்கள் அனைவரையும் ஜாதி வித்தியாசமின்றி ஒருங்கிணைத்து சேவை செய்ய ஊக்கமளிக்கும் இயக்கம்தான்” என்று தெளிவாகக் கூறுகிறார்.
• 1984-ல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் நாடெங்கும் உள்ள சீக்கியர்களைக் கொன்று குவித்தபோது,பல சீக்கிய குடும்பங்களைக் காப்பாற்றி, அச்சமூகத்தினருக்குக்ப் பாதுகாப்புஅளித்தது ஆர்.எஸ்.எஸ்.
• ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை காங்கிரஸ் மூன்று முறை தடை செய்ய முயன்றது. காந்திஜியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி நேரு அரசங்கம் 1948-ல் இயக்கத்தைத் தடை செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு சொல்லி தடையை நீக்கியது. இந்திரா காந்தி அரசும் நெருக்கடிநிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்தது. நெருக்கடிநிலை தகர்க்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மீதிருந்த தடை நீங்கியது. மீண்டும் மூன்றாவது தடவையாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காங்கிரஸ் அரசு இயக்கத்தைத் தடை செய்ய முயன்று தோற்றுப்போனது.

கேதார்நாத் – ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலம்


இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத்  எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில்ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில் கடல்மட்டத்திலிருந்து  3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது.
கேதார்நாத் புகைப்படங்கள் - கேதார்நாத் மலை
Image source: Wikipedia
கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
பிரம்மாண்டமான மந்தாகினி ஆறு இக்கோயிலுக்கு அருகிலேயே ஓடுகிறது. கோடைக்காலத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஏராளமான யாத்ரீகர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருகின்றனர்.
1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கேதார்நாத் கோயிலானது ஒரு செவ்வக வடிவிலான மேடைத்தளத்தின்மீது அழகாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருவறைக்கு செல்லும் பாதையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல கல்வெட்டுக்குறிப்புகளையும் காண முடிகிறது. 3584மீ உயரத்தில் அமைந்துள்ளதால், சார் தாம் கோயில்களில் யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச்சிரமமான கோயில் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோடைக்காலத்தின் 6 மாதங்களில் மட்டுமே இக்கோயிலுக்கு பக்தர்களும் யாத்ரீகர்களும் விஜயம் செய்ய முடியும்.  குளிர்காலத்தில் கடும்பனிப்பொழிவால் இப்பகுதி சூழப்பட்டிருக்கும் என்பதால் அக்காலத்தில் இக்கோயில் மூடப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் யாவுமே குளிர்காலத்தில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருக்கும். கேதார்நாத் பகுதியிலேயே வாழும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் குறைந்த உயரத்திற்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றனர். கேதார்நாத் தெய்வத்தின் பூஜை ஸ்தலமும் உக்கிநாத் எனும் இடத்துக்கு குளிர்காலத்தில் மாற்றப்படுகிறது.
கேதார்நாத்துக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி ஸ்தலத்தையும் பார்க்கலாம். இது கேதார்நாத் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
சங்கராச்சாரியார் அத்வைத வேதாந்த கருத்துக்களை பரப்பிய முக்கிய ஹிந்து குரு என்பது யாவரும் அறிந்ததே. சர் தாம் எனப்படும் முக்கிய ஹிந்து ஆன்மீக ஸ்தலங்களை கண்டறிந்தபின் இவர் தனது 32வது வயதில் இந்த கேதார்நாத் பகுதியில் முக்தி அடைந்துள்ளார்.
சோன்பிரயாக் எனும் இடம் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் 1829 மீ உயரத்தில் அமைந்துல்ளது. இது மந்தாகினி ஆறும் பாசுகி ஆறும் சங்கமிக்கும் இடமாகும். இந்த சங்கமத்தின் ஆற்று நீருக்கு விசேஷ சக்திகள் உள்ளதாக நம்பிக்கை உள்ளது.
இந்த நீரை தொட்டவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் உண்டு என்பது ஐதீகம். வாசுகி தல் எனப்படும் பிரசித்தமான ஏரியின் பெயரால் அழைக்கப்படும்  மற்றொரு முக்கியமான இடம் கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இது கேதார்நாத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியை சுற்றிலும்  பிரம்மாண்டமாக இமயமலைதொடர்கள் எழும்பி நிற்பது பிரமிக்க காட்சியாகும். சௌகம்பா  சிகரமும் இந்த ஏரிக்கு அருகிலேயே உள்ளது.
சதுரங்கி மற்றும் வாசுகி என்ற பனிமலைகளை கடந்துதான் இந்த வாசுகி தல் ஏரிக்கு செல்ல முடியும் என்பதால் இது மிக மிக கடினமான பயணமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாகச மனமும், உடல் உறுதியும், தயார்நிலையும் கொண்டவர்கள் மட்டுமே இப்பயணத்தை மேற்கொள்ள முடியும்.
1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கேதார்நாத் காட்டுயிர் சரணாலயம் அலக்நந்தா ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கிறது. இது 967 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இந்த சரணாலய வனப்பகுதி பெரும்பாலும் ஓக்,  பிர்ச்,  புக்யால் மற்றும் அல்பைன் மரங்களை கொண்டுள்ளது.
பலவிதமான உயிரினங்களும், தாவரங்களும் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. காட்டுப்பூனைகள், கோரல்கள், நரி, கருங்கரடி, பனிச்சிறுத்தை, சாம்பார் மான், தாஹிர் ஆடு மற்றும் அருகி வரும் விலங்கினமான கேதார்நாத் கஸ்தூரி மான் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
பறவை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் இந்த சரணாலயத்தில் பலவகை ஈ பிடிப்பான்கள் மற்றும் குருவிகள் வசிக்கின்றன. விதவிதமான மீன்களையும் இப்பகுதியில் ஓடும் மந்தாகினி ஆற்றில் பார்க்கலாம்.
கேதர்நாத்துக்கு வரும் பயணிகள் நேரம் இருப்பின் குப்த்காஷி எனும் இடத்துக்கும்  விஜயம் செய்வது நல்லது. இங்கு 3 கோயில்கள் அமைந்துள்ளன. பழமையான விஷ்வநாதர் கோயில், மணிகர்னிக் குண்ட் மற்றும் அர்த்தநாரீஸ்வர் கோயில் என்பவையே அவை.
அர்த்தாநாரீஸ்வரர் கோயிலில்  ஆணும் பெண்ணுமான கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார். விஷ்வநாதர் கோயிலிலும் சிவபெருமான தனது பல அவதாரக்கோலங்களில் வீற்றுள்ளார்.
இவை தவிர கேதார்நாத் பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பைரவ நாதர் கோயிலும் உள்ளது. சிவபெருமானின் கணங்களில் ஒருவரான பைரவருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலிள் வீற்றிருக்கும் தெய்வச்சிலை கேதார்நாத் கோயில் முதல் ரவால் ஆக திகழ்ந்த பிகுந்த் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 1982 மீ உயரத்தில் கௌரிகுண்ட் எனும் மற்றொரு பிரசித்தமான யாத்ரீக ஸ்தலமும் கேதார்நாத்துக்கு அருகில் உள்ளது. இங்கு பார்வதி தேவிக்கான புராதனமான கோயில் அமைந்துள்ளது.
புராணிகக்கதைகளின்படி இந்த ஸ்தலத்தில் பார்வதி சிவபெருமானை கணவனாக அடைய வேண்டி தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு வெந்நீர் ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர் மருத்துவ குணங்களை மட்டுமல்லாமல் பாவங்களை தீர்க்கும் தெய்வ வலிமை கொண்டதாகவும் நம்பப்படுகிறது.
கேதார்நாத்துக்கு அருகில் 239 கி.மீ தூரத்திலேயே டேராடூன் நகரின் ஜோலி கிராண்ட்  விமான நிலையம் உள்ளது. ரயில் மூலம் கேதார்நாத் வரவிரும்பும் யாத்ரீகர்கள் ரிஷிகேஷ் ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத் 227 கி.மீ தூரத்தில் உள்ளது.
மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையே உள்ள பருவம் கேதார்நாத் புனித ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியில் சுற்றுச்சூழல் இனிமையானதாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவின் காரணமான கேதார்நாத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விடுவர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.

சூர்ய நமஸ்காரம்