நண்பர்கள்

30 அக்., 2013

ஹிந்துயிசம் பற்றி


ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

ஹிந்துத்துவம் மத நம்பிக்கை அடிப்படையில் அமைந்ததா?
                  




ஹிந்துத்துவம் என்பது மத நம்பிக்கையைச் சார்ந்தது அல்ல. நீங்கள் எந்தக் கடவுளையும் வழிபடலாம் அல்லது கடவுள் மறுப்பாளராகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் சக மனிதர்களின் மாறுபடும் நம்பிக்கையை, கோட்பாட்டை மரியாதையையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஹிந்துத்தன்மையுடன் விளங்குகிறீர்கள் என்றுதான் பொருள். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் இத்தகைய பரந்த மனப்பாமை, பண்பாட்டின் ஓர் அங்கமாகவும் வரலாற்றுப் பூர்வமாகவும் விளங்கி வந்திருக்கிறது. இதுதான் ஹிந்துத்துவம்.

இந்த சிருஷ்டியின் ரகசியம்தான் என்ன?
உண்மையிலே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதுதானா எனக் கேள்வி எழுப்புகிறது, ரிக்வேதத்தின் நாஸதீய ஸுக்தம். இது ஹிந்துத்துவம்.
ஜாபாலி என்ற முனிவர் கடவுளின் அவதாரமாக கருதப்படும் ராமரிடமே கடவுள் மறுப்புக்கோட்பாட்டு வாதங்களைக் கொண்டு விவாதித்தார். இதுவும் ஹிந்துத்துவம். சாருவாகனின் லோகாயாதமும் ஹிந்துத்துவம். சாங்கியத்தின் இறை மறுப்பும் ஹிந்துத்துவமே. சித்தர்களின் சடங்கியல் மறுப்பும் ஹிந்துத் துவமே. ஏன், ஹிந்துத்துவத்தை முன்வைத்த வீரசாவர்க்கரே ஒரு கடவுள் மறுப்பாளர்தாம்.
குண்டலினியை ஹிந்து பண்பாட்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஹிந்து மகா சபையின் கொடியில் காட்டிய வீர சாவர்க்கர், அதே குண்டலினி நரம்பியல் உளவியல் ரீதியில் அறிவியல் பூர்வமாக அணுகப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஹிந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதா?

சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதென்பது ஹிந்துத்துவத்தின் மரபிலேயே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக சொந்த நாடு இல்லாமல் உலகமெங்கும் அகதிகளாக, பல கஷ்டங்களை அனுபவித்த யூதர்கள், மீண்டும் உதயமான இஸ்ரேலில் கூடியபோது, ஒவ்வொரு நாட்டிலும் தாங்கள் பட்ட இன்னல்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் இருந்து போன யூதர்கள் மட்டுமே, தாங்கள் எவ்விதக் கஷ்டத்துக்கும் ஆட்படாமல் ஹிந்துக்களால் நன்றாக நடத்தப்பட்டதாகச் சொன்னார்கள் என்பது வரலாறு. இன்றைக்கும், கேரளத்தில் பண்டைய ஹிந்து அரசர்கள் யூதர்களுக்கு வழிபாட்டுத் தலம் அமைக்க அளித்த நில உரிமைப் பட்டயத்தை யூதர்கள் நன்றியுடன் பாதுகாக்கின்றனர்.
பார்ஸீக்கள் இஸ்லாமியர்களால் ஈரானிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது இந்திய அரசர்களே அவர்களுக்கு அடைக்கலம் அளித்தனர். சிரியாவிலிருந்து ரோமானியர்கள் விரட்டப்பட்ட பழமையான கிறிஸ்தவர்களுக்கு கேரள ஹிந்து அரசர்கள் ஆதரவு நல்கினர்.
ஹிந்துத்துவத்தின் பாரம்பரியம் இதுதான். மதநம்பிக்கையின் அடிப்படையில் அது எவரையும், எந்த சிறுபான்மை யினரையும் துன்புறுத்துவதில்லை.

தன் சொந்தக் குழந்தைகளைக் கொன்ற ஒளரங்கசீப்பின் மகனுக்கு அடைக்கலம் அளித்த குரு கோவிந்த சிங், தன் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்களை சகோதரிகளாகப் பார்த்த வீர சிவாஜி இருவரும் இந்திய பாரம்பரியத்தின் சின்னங்கள். அப்படியிருக்கும்போது எப்படி ஹிந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதாக, அடக்குமுறை கொண்டதாக இருக்க முடியும்?
நிச்சயமாக ஹிந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. அதே சமயம், சிறுபான்மையினர் என்னும் பெயரில் சலுகை வாங்கி, மதமாற்றங்களைச் செய்து, ஹிந்து தர்மத்தையும் இந்த தேசத்தின் மண்ணின் பாரம்பரிய ஆன்மிக மரபுகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு கேடயமாகவே ஹிந்துத்துவம் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பல்வேறு வகையினரான மத நம்பிக்கைகளுக்கு இந்த நாட்டில் அரணாக விளங்குவது ஹிந்துத்துவமே.

பஹாய்கள் ஈரானிலும், அஹ்மத்தியாக்கள் பாகிஸ்தானிலும், ஃபெலூன்காங்க் அமைப்பினர் சீனாவிலும் படும் கஷ்டங்களையும், அனுபவிக்கும் மனித உரிமை மீறல் களையும் உதாரணமாகக் காணலாம். ஈரானிலும் பாகிஸ் தானிலும் சீனாவிலும் ஆதிக்க சக்திகளாக இருப்பவர்களும் அவர்களால் அடக்குமுறை அனுபவிப்ப வர்களும், இந்தியாவில் சமரசத்துடன் வாழ முடிவது எப்படி? ஹிந்துத்துவப் பண்பாடே காரணம் அல்லவா?

ஹிந்துத்துவம் பழமைவாதமா?

ஹிந்துத்துவம் பழமைவாதமன்று. ஹிந்து பாரம்பரியமே “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என சூத்திரம் படைத்த மரபாகும். தம் முன்னோர் தோண்டியது என்பதாலேயே, உப்பு நீர் உள்ள கிணற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது தவறு என ஒரு சமஸ்கிருதப் பழமொழி சொல்கிறது. புதுமை என்பது மேற்கத்தியப் பண்பாட்டை அப்படியே காப்பி அடிப்பது அல்ல, மாறாக, நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதுதான்.
உதாரணமாக, தொழில்நுட்பங்களில் மேற்கத்திய தொழில்நுட்பம் அதிக மூலதனமும் அதிக எரிபொருளையும் வீணாக்கக் கூடியது. மாசு ஏற்படுத்தக் கூடியது. எனவே, அத்தகைய தொழில் நுட்பங்களை நம்சூழலில் பயன் படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, நம் சூழலுக்குத் தகுந்தவாறு தொழில்நுட்பத்தைத் தகவமைக்க வேண்டுமென ஹிந்துத்துவம் கூறும். ஹிந்துத்துவம் நம் மரபு சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இன்றைக்கு அறிவியல் முழுமைத் தன்மையுடன் பிரச்னைகளை அணுக வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளது.
நியூட்டன் கால இயற்பியல் பார்வை இயந்திரத்தன்மை கொண்டது. கார்ட்டீசிய அணுகுமுறை அல்லது பகுப்பாய்வு முறை எனச் சொல்லப்படும் அறிவியலே 9ஆம் நூற்றாண்டில் கோலோச்சியது. எந்த விஷயத்தையும் பிரித்து, அதன் பகுதிகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ஒரு பொருள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது இந்த கோட்பாடு. உயிரினங்கள், சமுதாய அமைப்புகள், ஏன் இந்த பிரபஞ்சம் முழுதுமே இயந்திரத்தன்மை கொண்டதாக இந்த அணுகுமுறையில் காணப்பட்டன. ஆனால், புதிய இயற்பியல் என ஐன்ஸ்டைனாலும் க்வாண்டம் இயற்பியலாளர்களாலும் முன்வைக்கப்பட்ட அறிவியல் இதனை மாற்றியது.

அதன் தொடர்ச்சியாக, இந்த பிரபஞ்சம் என்பது இயந்திரங்கள் என்றும் அதன் இருப்பு பல நுண்ணியத் தொடர்புகளால் ஆனது, அது பிரித்துப் பார்க்கும் பகுத்தாய்வால் விளக்க முடியாதது என்றும் அறிவியலாளர்கள் அறிந்து கொள்ள ஆரம்பித்தனர். அணுவுக்குள்ளும் சரி, அண்ட சராசரங்களிலும் சரி, ஜடமாகக் கருதப்பட்ட அனைத்தும் மிகத்தீவிர இயக்கங்கள் கொண்டவை என்பதை அறிவியலாளர்கள் அறிந்தனர். இந்தப் புதிய பிரபஞ்ச தரிசனத்தை வெளிகாட்டும் மிகச்சிறந்த ஒரு குறியீடாக அவர்கள் எதைக் கண்டார்கள்?
சோழர்களின் செப்புத் திருவடிவமான நடராஜரையே அவர்கள் கண்டார்கள். கலை ஆன்மிகம் அறிவியல் ஆகியவற்றை இணைக்கும் ஒரு சிறந்த புள்ளியாக ஹிந்து பண்பாட்டின் ஆன்மிகச் சின்னமான நடராஜ தத்துவம் விளங்குகிறது.
இயற்பியலில் மட்டுமல்ல; உயிரியல், உளவியல், சுற்றுச் சூழலியல், நரம்பியல், பொருளாதாரம் எனப் பல துறைகளில் பாரதிய சிந்தனை மரபு இன்றைய அறிவியலின் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருந்து வருகிறது.

மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால், சுஷ்ருதர், சரகர், அகஸ்தியர் ஆகியோர் இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையை உருவாக்கியுள்ளனர். மனிதனுடைய நோய் என்பதை அதன் முழுமையான சூழலில் அணுக வேண்டும் என்பதையும், மருந்துகள் இயற்கையோடு இணைந்த மூலிகைகள் மற்றும் வாழ்க்கை முறை என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நமது பாரம்பரிய உணவு முறைகளேகூட நோய் தடுக்கும் தன்மை கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாழ்வியலும் ஹிந்துத்துவத்தின் ஒரு பகுதியே. இதனை இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
எனவே, ஹிந்துத்துவம் என்பது பழமைவாதமல்ல என்பது மட்டுமல்ல. ஹிந்துத்துவ சிந்தனை அறிவியல் பார்வையை வளர்க்கும் என்பதுமே உண்மை. மேற்கத்திய தரிசனங்கள் மனிதனின் ஏதேனும் ஒரு பரிமாணத்தை மட்டுமே மிகைப்படுத்திப் பார்க்கும் தன்மை கொண்டவை.

உதாரணமாக சிக்மண்ட் ஃப்ராய்ட் அனைத்து மானுட எழுச்சிகளையும் காமத்தின் அடிப்படையிலேயே நோக்கினார்.
காரல் மார்க்ஸ், மானுட வரலாறையே உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அளவிட்டார்.
முதலாளித்துவமும் சரி, கம்யூனிசமும் சரி, பொருளா தாரத்தையே மைய சக்தியாகக் கண்டன. மைய அரசு சார்ந்த கட்டுப்பாடு அல்லது கட்டற்ற சந்தை இலாபம் என்பவையே முக்கிய இயக்க சக்திகளாகக் கருதப்பட்டன.
ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், “மத்திய கிழக்கில் உதித்த மதங்கள்’ தெய்வீகக் கட்டளைகளே மானுடத்தின் அனைத்துத் துறைகளையும் ஆள வேண்டுமெனக் கருதினர்.
ஆனால், இந்திய ஹிந்துத்துவ சிந்தனை, மனிதனை அவ்வாறு கூறுபோட்டுப் பார்க்கவில்லை. திருவள்ளுவர் மனிதனின் இருத்தல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பரிமாணங்களாலும் ஆனது என்பதைத் தெளிவாகக்கூறி, அதன் அடிப்படையிலான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறார். அனைத்து அறநூல்களும் இந்த மூன்று வாழ்க்கை உந்துதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

சமஸ்கிருதத்தில் இது தர்ம அர்த்த காம புருஷார்த்தங்கள் எனக் கூறப்படுகின்றன. ஹிந்துத்துவம் மட்டுமே மனிதனை முழுமையாகக் காணும் ஒரு பார்வையை அளிக்கிறது. பிற பார்வைகளை அவற்றுக்குரிய இடத்தில் நிலைநிறுத்துகிறது. இந்த புருஷார்த்தங்கள் மனிதனை எங்கே இட்டு செல்கின்றன? ஒரு கற்னையான சுவர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அல்ல. விடுதலையே மானுடத்தின் சுயநிலை, இயற்கை உரிமை என்பதையும் அவை அறுதியிட்டுச் சொல்கின்றன.
மோட்சம் அல்லது வீடுபேறு என்பது முக்தி அல்லது விடுதலையை குறிப்பதாகும். மானுட வரலாற்றில் விடுதலையை ஆதர்சமாக முன்வைத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஒரு பண்பாட்டை உருவாக்கியப் பெருமை ஹிந்துஸ்தானத்துக்கே உரியது. விடுதலையே உண்மைத் தேடலின் அடிப்படை ஆதாரம்.

அறிவியல் என்பதே உண்மையைத் தேடுவதாகும். வேதாந்த மதிப்பீடுகள் நம் தேசிய அறிவியல் எழுச்சிக்கு வித்தாக இருந்தன என்பதையும் நாம் அறிகிறோம். அது ஜகதீஷ் சந்திர போஸாகட்டும், ஆச்சார்ய பிரபுல்ல சந்திரராயாகட்டும், டாடாவாகட்டும், சத்யேந்திர நாத் போஸாகட்டும், ஜியார்ஜ் சுதர்ஸனாகட்டும் அவர்களுக்குள் அக்கினிப்பொறி ஏற்றியது அத்வைத ஒளியே. பெரும் தேசிய அறிவியல் எழுச்சியை ஹிந்தமறுமலர்ச்சியே உருவாக்கியது.
எனவே, அறிவியல்பூர்வமான வாழ்க்கைக்கு ஹிந்துத் துவமே வழிகோலும் சித்தாந்தமாகும்.

20 மே, 2013

தென்கச்சி கோ.சுவாமிநாதன் வாக்கு




# படித்ததில் பிடித்தது #

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.

இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் 

இல்லை.

எப்படி அக்கரைக்குப்போவது?



இந்த நேரத்தில்ஒரு காளை மாடு அங்கே வந்தது.

அதுவும் அக்கரைக்குப்போக வேண்டும்.

ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. 

அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப்

பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில்

குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக்கெட்டியாகப் பிடித்துக்

கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச்சென்று அக்கரையில்

சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று 

எதிர்பார்த்தான்.



இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.

இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில்

விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக்

கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக்

கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை.

திணறியது.

ஒரு கட்டத்தில் நாய், வாள்... வாள்’ என்று கத்த

ஆரம்பித்து விட்டது. விளைவு _

இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்

கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.

சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.

சிலர் காளையின் வாலைப்பிடித்துக்கொள்கிறார்கள். சிலர்

நாயின் வாலைப் பற்றிக்கொள்கிறார்கள்.





ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா?

நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா?

அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.

ஏற்கெனவே பற்றிக்கொண்டிருப்பதை எல்லாம்

விட்டு விடுங்கள்!




ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.

உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற

ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப்

பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை.

நடு ஆற்றில் போராடிக்கொண்டிருக்கிறான்.

கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர

முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான்

இதை எப்பவோ விட்டுட்டேன்...

இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது

. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே.

கரடிக் குட்டி!’’





தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.

சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள்.

பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!


நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

பகிர்ந்தவர்

https://www.facebook.com/Relaxplzz1

ஆர்,எஸ்,எஸ் பேரியக்கம்




கேரளாவின் அலுவா என்னும் பகுதியில் புனித ஜோஸஃப் சர்ச்சைச் சேர்ந்த ஃபாதர் வின்ஸெண்ட் குண்டுகுலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஒரு பி.ஹெச்.டி படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். அவர் தன்னுடைய “ஆர்.எஸ்.எஸ். - எந்து?எங்கோட்டு?” (ஆர்.எஸ்.எஸ். – என்ன? எங்கே செல்கிறது?) என்னும் ஆராய்ச்சிப் புத்தகத்தில், “ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவரின் ஒழுக்கமும், ஈடுபாடும், எளிமையான வாழ்க்கை முறையும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேராபத்துக்களின் போது அவர்கள் செய்யும் சேவைகளும் மிகவும் பாராட்ட்த் தக்கன. ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத இயக்கம் அன்று. மத்த்தின் பேரில் மக்கள் அனைவரையும் ஜாதி வித்தியாசமின்றி ஒருங்கிணைத்து சேவை செய்ய ஊக்கமளிக்கும் இயக்கம்தான்” என்று தெளிவாகக் கூறுகிறார்.
• 1984-ல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் நாடெங்கும் உள்ள சீக்கியர்களைக் கொன்று குவித்தபோது,பல சீக்கிய குடும்பங்களைக் காப்பாற்றி, அச்சமூகத்தினருக்குக்ப் பாதுகாப்புஅளித்தது ஆர்.எஸ்.எஸ்.
• ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை காங்கிரஸ் மூன்று முறை தடை செய்ய முயன்றது. காந்திஜியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி நேரு அரசங்கம் 1948-ல் இயக்கத்தைத் தடை செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் காந்திஜி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு சொல்லி தடையை நீக்கியது. இந்திரா காந்தி அரசும் நெருக்கடிநிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்தது. நெருக்கடிநிலை தகர்க்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் மீதிருந்த தடை நீங்கியது. மீண்டும் மூன்றாவது தடவையாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காங்கிரஸ் அரசு இயக்கத்தைத் தடை செய்ய முயன்று தோற்றுப்போனது.

கேதார்நாத் – ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலம்


இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத்  எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில்ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில் கடல்மட்டத்திலிருந்து  3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது.
கேதார்நாத் புகைப்படங்கள் - கேதார்நாத் மலை
Image source: Wikipedia
கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
பிரம்மாண்டமான மந்தாகினி ஆறு இக்கோயிலுக்கு அருகிலேயே ஓடுகிறது. கோடைக்காலத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஏராளமான யாத்ரீகர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருகின்றனர்.
1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கேதார்நாத் கோயிலானது ஒரு செவ்வக வடிவிலான மேடைத்தளத்தின்மீது அழகாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.
கருவறைக்கு செல்லும் பாதையில் பாலி மொழியில் எழுதப்பட்ட பல கல்வெட்டுக்குறிப்புகளையும் காண முடிகிறது. 3584மீ உயரத்தில் அமைந்துள்ளதால், சார் தாம் கோயில்களில் யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச்சிரமமான கோயில் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோடைக்காலத்தின் 6 மாதங்களில் மட்டுமே இக்கோயிலுக்கு பக்தர்களும் யாத்ரீகர்களும் விஜயம் செய்ய முடியும்.  குளிர்காலத்தில் கடும்பனிப்பொழிவால் இப்பகுதி சூழப்பட்டிருக்கும் என்பதால் அக்காலத்தில் இக்கோயில் மூடப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் யாவுமே குளிர்காலத்தில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருக்கும். கேதார்நாத் பகுதியிலேயே வாழும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் குறைந்த உயரத்திற்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றனர். கேதார்நாத் தெய்வத்தின் பூஜை ஸ்தலமும் உக்கிநாத் எனும் இடத்துக்கு குளிர்காலத்தில் மாற்றப்படுகிறது.
கேதார்நாத்துக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி ஸ்தலத்தையும் பார்க்கலாம். இது கேதார்நாத் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
சங்கராச்சாரியார் அத்வைத வேதாந்த கருத்துக்களை பரப்பிய முக்கிய ஹிந்து குரு என்பது யாவரும் அறிந்ததே. சர் தாம் எனப்படும் முக்கிய ஹிந்து ஆன்மீக ஸ்தலங்களை கண்டறிந்தபின் இவர் தனது 32வது வயதில் இந்த கேதார்நாத் பகுதியில் முக்தி அடைந்துள்ளார்.
சோன்பிரயாக் எனும் இடம் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் 1829 மீ உயரத்தில் அமைந்துல்ளது. இது மந்தாகினி ஆறும் பாசுகி ஆறும் சங்கமிக்கும் இடமாகும். இந்த சங்கமத்தின் ஆற்று நீருக்கு விசேஷ சக்திகள் உள்ளதாக நம்பிக்கை உள்ளது.
இந்த நீரை தொட்டவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் உண்டு என்பது ஐதீகம். வாசுகி தல் எனப்படும் பிரசித்தமான ஏரியின் பெயரால் அழைக்கப்படும்  மற்றொரு முக்கியமான இடம் கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இது கேதார்நாத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியை சுற்றிலும்  பிரம்மாண்டமாக இமயமலைதொடர்கள் எழும்பி நிற்பது பிரமிக்க காட்சியாகும். சௌகம்பா  சிகரமும் இந்த ஏரிக்கு அருகிலேயே உள்ளது.
சதுரங்கி மற்றும் வாசுகி என்ற பனிமலைகளை கடந்துதான் இந்த வாசுகி தல் ஏரிக்கு செல்ல முடியும் என்பதால் இது மிக மிக கடினமான பயணமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாகச மனமும், உடல் உறுதியும், தயார்நிலையும் கொண்டவர்கள் மட்டுமே இப்பயணத்தை மேற்கொள்ள முடியும்.
1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கேதார்நாத் காட்டுயிர் சரணாலயம் அலக்நந்தா ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கிறது. இது 967 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இந்த சரணாலய வனப்பகுதி பெரும்பாலும் ஓக்,  பிர்ச்,  புக்யால் மற்றும் அல்பைன் மரங்களை கொண்டுள்ளது.
பலவிதமான உயிரினங்களும், தாவரங்களும் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. காட்டுப்பூனைகள், கோரல்கள், நரி, கருங்கரடி, பனிச்சிறுத்தை, சாம்பார் மான், தாஹிர் ஆடு மற்றும் அருகி வரும் விலங்கினமான கேதார்நாத் கஸ்தூரி மான் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
பறவை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் இந்த சரணாலயத்தில் பலவகை ஈ பிடிப்பான்கள் மற்றும் குருவிகள் வசிக்கின்றன. விதவிதமான மீன்களையும் இப்பகுதியில் ஓடும் மந்தாகினி ஆற்றில் பார்க்கலாம்.
கேதர்நாத்துக்கு வரும் பயணிகள் நேரம் இருப்பின் குப்த்காஷி எனும் இடத்துக்கும்  விஜயம் செய்வது நல்லது. இங்கு 3 கோயில்கள் அமைந்துள்ளன. பழமையான விஷ்வநாதர் கோயில், மணிகர்னிக் குண்ட் மற்றும் அர்த்தநாரீஸ்வர் கோயில் என்பவையே அவை.
அர்த்தாநாரீஸ்வரர் கோயிலில்  ஆணும் பெண்ணுமான கோலத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார். விஷ்வநாதர் கோயிலிலும் சிவபெருமான தனது பல அவதாரக்கோலங்களில் வீற்றுள்ளார்.
இவை தவிர கேதார்நாத் பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் பைரவ நாதர் கோயிலும் உள்ளது. சிவபெருமானின் கணங்களில் ஒருவரான பைரவருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலிள் வீற்றிருக்கும் தெய்வச்சிலை கேதார்நாத் கோயில் முதல் ரவால் ஆக திகழ்ந்த பிகுந்த் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 1982 மீ உயரத்தில் கௌரிகுண்ட் எனும் மற்றொரு பிரசித்தமான யாத்ரீக ஸ்தலமும் கேதார்நாத்துக்கு அருகில் உள்ளது. இங்கு பார்வதி தேவிக்கான புராதனமான கோயில் அமைந்துள்ளது.
புராணிகக்கதைகளின்படி இந்த ஸ்தலத்தில் பார்வதி சிவபெருமானை கணவனாக அடைய வேண்டி தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு வெந்நீர் ஊற்றிலிருந்து வெளிப்படும் நீர் மருத்துவ குணங்களை மட்டுமல்லாமல் பாவங்களை தீர்க்கும் தெய்வ வலிமை கொண்டதாகவும் நம்பப்படுகிறது.
கேதார்நாத்துக்கு அருகில் 239 கி.மீ தூரத்திலேயே டேராடூன் நகரின் ஜோலி கிராண்ட்  விமான நிலையம் உள்ளது. ரயில் மூலம் கேதார்நாத் வரவிரும்பும் யாத்ரீகர்கள் ரிஷிகேஷ் ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத் 227 கி.மீ தூரத்தில் உள்ளது.
மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையே உள்ள பருவம் கேதார்நாத் புனித ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியில் சுற்றுச்சூழல் இனிமையானதாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவின் காரணமான கேதார்நாத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விடுவர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.

சூர்ய நமஸ்காரம்